search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கலைஞர் நினைவிட திறப்பு விழா: எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க மு.க.ஸ்டாலின் அழைப்பு
    X

    கலைஞர் நினைவிட திறப்பு விழா: எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க மு.க.ஸ்டாலின் அழைப்பு

    • நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எதையும் நாங்கள் அச்சிடவில்லை.
    • ஒரு விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாகவே நடத்திட நாங்கள் விரும்பியிருக்கிறோம், முடிவெடுத்து இருக்கிறோம்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கருணாநிதி நினைவிடம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.

    சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் கருணாநிதி நினைவிடம் திறப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்ற தலைவர்; நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவர்; முத்தமிழறிஞர் தலைவர் கலைஞருடைய நினைவிடம் அமைக்கும் பணி முழுமையடைந்து இருக்கிறது. தலைவர் கலைஞரின் நினைவிடம் மட்டுமல்ல; தலைவர் கலைஞரை உருவாக்கிய, நம் தாய்த் தமிழ்நாட்டிற்கு "தமிழ்நாடு" என்று பெயர் சூட்டிய அறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    அப்படிப் புதுப்பிக்கப்பட்டிருக்கக்கூடிய பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும், தலைவர் கலைஞரின் புதிய நினைவிடமும் வருகிற 26-ந் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளன என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    எதற்காக இதை இங்கே நான் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எதையும் நாங்கள் அச்சிடவில்லை. அதனை ஒரு விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாகவே நடத்திட நாங்கள் விரும்பியிருக்கிறோம், முடிவெடுத்து இருக்கிறோம்.

    ஆகவே, அந்த நிகழ்ச்சியிலே இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக்கட்சி, தோழமைக் கட்சி என எல்லாக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டுமென்று பேரவைத் தலைவர் மூலமாக நான் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கும் தங்கள் மூலமாக அழைப்பு விடுத்து அமைகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×