என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தி.மு.க. மீது எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்துவதா?: கனிமொழி
- தூத்துக்குடிக்கு பல புதிய முதலீடுகள் கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் முனைப்போடு இருக்கிறார்
- நீட் தேர்வை ரத்து செய்ய ஆட்சி மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
பின்னர் விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்த பகுதி தண்ணீருக்கு பிரச்சனையான பகுதி. 361 கிராமங்களை உள்ளடக்கிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு முடிவடைய கூடிய நிலையில் உள்ளது.
தூத்துக்குடியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட வின் பாஸ்ட் (கார் கம்பெனி) நிறுவனத்தில் தூத்துக்குடியில் இருக்கக்கூடிய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு பயிற்சி கொடுத்து இங்கு இருக்க கூடியவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்று முதலமைச்சர் உறுதி கொடுத்துள்ளனர்.
இன்னும் தூத்துக்குடிக்கு பல புதிய முதலீடுகள் கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் முனைப்போடு இருக்கிறார். இதன் மூலம் தூத்துக்குடி புகழ் பெற்ற நகரமாக மிளிரும்.
நீட் தேர்வை ரத்து செய்ய ஆட்சி மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இன்றும் நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க. நீதிமன்றத்தில் வழக்காடி வருகிறது.
ஒன்றியத்தில் மாற்றம் உருவாகும்போது தமிழகத்தில் இருந்து நீட் விலக்கப்படும். எங்களை யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். ஆனால் 10 ஆண்டுகள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்து எதையுமே செய்யாத எடப்பாடி பழனிசாமி இந்த கேள்வியை கேட்பது வருத்தமாக உள்ளது.
மக்களுக்கு எதிராக பா.ஜ.க. கொண்டு வந்த அத்தனை மசோதாக்களையும் ஏற்றுக்கொண்டு அது வெற்றி பெறுவதற்காக வாக்களித்த இயக்கம் தான் அ.தி.மு.க.. அப்போது முதலமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்