என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சென்னை மாநகராட்சி அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
- மழை பாதிப்பு, மீட்பு பணிகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
- சீரமைப்பு பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் பிரியா முதலமைச்சரிடம் விளக்கம் அளித்தார்.
சென்னை:
அந்தமான் அருகே உருவான புயல் சின்னம் காரணமாக சென்னையில் நேற்று முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
நேற்றிரவு பெய்த கனமழையால் தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, ஆவடி, அயப்பாக்கம், தாம்பரம், வரதராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் இருந்ததால் போக்குவரத்து தடைப்பட் டது.
மழை நின்றதும் மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று மழைநீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனாலும் இன்று காலையிலும் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி வருகிறது.
இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.30 மணியளவில் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் அதில் பங்கேற்றனர்.
மாநகராட்சியில் தயார் நிலையில் இருந்த மீட்பு படையினரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அதைத் தொடர்ந்து மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு சென்று பார்வையிட்டார்.
கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை வாங்கி அவர் பேசினார்.
அப்போது போனில் பேசிய பொதுமக்களிடம் எங்கிருந்து பேசுகிறீர்கள்? என்ன பிரச்சினை? உங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளதா? என்று கேட்டறிந்தார்.
புரசைவாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து போனில் பேசியவர்களிடம் விவரம் கேட்டறிந்தார்.
நான் ஸ்டாலின், சி.எம். பேசுகிறேன். இப்போது உங்கள் ஏரியா எப்படி இருக்கிறது? தண்ணீர் அடைப்பு இருக்கிறதா? உடனே பார்க்க சொல்கி றேன் என்று பதில் அளித்தார்.
அப்போது மழையால் பாதித்த பகுதிகளில் நடைபெற்று வரும் களப்பணி குறித்து அதிகாரிகள் அவரிடம் விளக்கி கூறினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்