என் மலர்
செய்திகள்

வாக்குகள் எண்ணும் பணி
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட கணவன்-மனைவி இருவரும் வெற்றி
ஈரோடு மாவட்டம் சென்னிமலை யூனியனில் உள்ளாட்சி தேர்தலில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கணவன், யூனியன் கவுன்சிலர் வார்டுக்கு போட்டியிட்ட மனைவி இருவரும் வெற்றிபெற்றுள்ளனர்.
சென்னிமலை:
சென்னிமலை வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளராக இருப்பவர் வெ.பா.இளங்கோ. இவர் குமராவலசு கிராம ஊராட்சி தலைவர் பதவிற்கு போட்டியிட்டார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரைவிட 58 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இவரது மனைவி காயத்திரி யூனியன் வார்டு 4-ல் தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கி அ.தி.மு.க., வேட்பாளரை விட 1,339 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
ஒரே குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் உள்ளாட்சி தேர்தலில் வெவ்வேறு பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றது பொதுமக்களுக்கு ஆச்சரியத்தினை கொடுத்துள்ளது.
சென்னிமலை வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளராக இருப்பவர் வெ.பா.இளங்கோ. இவர் குமராவலசு கிராம ஊராட்சி தலைவர் பதவிற்கு போட்டியிட்டார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரைவிட 58 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இவரது மனைவி காயத்திரி யூனியன் வார்டு 4-ல் தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கி அ.தி.மு.க., வேட்பாளரை விட 1,339 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
ஒரே குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் உள்ளாட்சி தேர்தலில் வெவ்வேறு பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றது பொதுமக்களுக்கு ஆச்சரியத்தினை கொடுத்துள்ளது.
Next Story






