என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம் பிரசாரம் செய்தபோது எடுத்த படம்
    X
    ப.சிதம்பரம் பிரசாரம் செய்தபோது எடுத்த படம்

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் 24 லட்சம் காலிபணியிடங்கள் நிரப்பப்படும்- ப.சிதம்பரம்

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் காலியாக உள்ள 24 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் ப.சிதம்பரம் பேசினார். #Loksabhaelections2019 #PChidambaram #congress #PMModi
    தேவகோட்டை:

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.

    அவரை ஆதரித்து மானாமதுரை, இடைக்காட்டூர், தேவகோட்டை ஆகிய பகுதிகளில் ப.சிதம்பரம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பா. ஜனதா ஆட்சியில் நாட்டில் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளோம். 50 ஆயிரம் குறுந்தொழில்கள் முடங்கி விட்டன. கடந்த 5 ஆண்டுகளில் கல்வி கடன் யாருக்கும் வழங்கப்படவில்லை.

    விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என பா.ஜனதா கூறியது. ஆனால் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட எந்த விவசாயிகளின் வருமானமும் இரட்டிப்பாகவில்லை. கடன் தான் இரட்டிப்பாகி உள்ளது.

    நாட்டில் 8 மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் பா.ஜனதாவிற்கு செல்வாக்கு கிடையாது. பா.ஜனதாவை எதிர்ப்பதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கஜா புயல் உள்ளிட்ட எதையும் பா.ஜனதா அரசு கண்டு கொள்ளவில்லை. பா.ஜனதா ஆட்சியில் மாணவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எங்களுக்கு பல பெரிய திட்டங்களை நிறைவேற்றிய அனுபவங்கள் உண்டு. அதனால் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஐந்து கோடி குடும்பங்களுக்கு மாதம் ரூ.6000 வீதம் நாங்கள் கொடுப்போம். இது எங்களால் முடியும்.

    தற்போது மத்திய அரசில் 4 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாநில அரசில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்படி பணியிடங்களை காலியாக வைத்திருப்பது மக்களுக்கு செய்யும் பெரும் துரோகம். நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் சரியாக ஒன்பது மாதங்களில் அனைத்து காலியிடங்களை நிரப்புவோம்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். சிவகங்கை தொகுதியில் மட்டும் 20 ஆயிரம் பேருக்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Loksabhaelections2019 #PChidambaram #congress #PMModi
    Next Story
    ×