search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் தேமுதிக, காங்கிரஸ், அமமுக, உள்பட 31 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு
    X

    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் தேமுதிக, காங்கிரஸ், அமமுக, உள்பட 31 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் தே.மு.தி.க., காங்கிரஸ், அ.ம.மு.க., மக்கள் நீதிமய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 31 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. #LSPolls
    திருச்சி:

    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்தநிலையில் இன்று திருச்சி தொகுதி தேர்தல் பார்வையாளர் அமித்குமார் மற்றும் திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சிவராசு முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.

    இதில் தே.மு.தி.க., காங்கிரஸ், அ.ம.மு.க., மக்கள் நீதிமய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 31 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்திருந்த முருகானந்தம், மாயக்கண்ணன், ரமணி, சந்தோஷ்குமார், இளங்கோவன், ராஜேந்திர குமார் ஆகியோர் தேர்தல் விதிமுறைகளின்படி உரிய ஆவணங்களை பூர்த்தி செய்து கொடுக்காததால் 6 பேரின் வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. #LSPolls
    Next Story
    ×