என் மலர்
செய்திகள்

விபத்தில் சேதம் அடைந்த தனியார் ஆம்னி பஸ்
வேப்பூர் அருகே விபத்து- 2 பேர் பலி
வேப்பூர் அருகே இன்று அதிகாலை லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேப்பூர்:
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. அதில் 45 பயணிகள் இருந்தனர். பஸ்சை கோவையை சேர்ந்த டிரைவர் கமலக்கண்ணன் (வயது 35) ஓட்டினார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த சக்திவேல்(25) உதவியாளராக இருந்தார்.
இந்த ஆம்னி பஸ் இன்று அதிகாலை 3.30 மணிக்கு கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சேப்பாக்கம் பகுதியில் திருச்சி-சென்னை சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் முன்னால் லாரி ஒன்று சென்றது. அந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக ஆம்னி பஸ் மோதியது. இதில் பஸ்சின் முன்பக்கம் முழுவதும் பலத்த சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் ஆம்னி பஸ்சின் இடிபாடுக்குள் சிக்கி டிரைவர் கமலக்கண்ணன் மற்றும் உதவியாளர் சக்திவேல் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பஸ்சில் வந்த 10 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலத்த காயம் அடைந்த 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. #Tamilnews
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. அதில் 45 பயணிகள் இருந்தனர். பஸ்சை கோவையை சேர்ந்த டிரைவர் கமலக்கண்ணன் (வயது 35) ஓட்டினார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த சக்திவேல்(25) உதவியாளராக இருந்தார்.
இந்த ஆம்னி பஸ் இன்று அதிகாலை 3.30 மணிக்கு கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சேப்பாக்கம் பகுதியில் திருச்சி-சென்னை சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் முன்னால் லாரி ஒன்று சென்றது. அந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக ஆம்னி பஸ் மோதியது. இதில் பஸ்சின் முன்பக்கம் முழுவதும் பலத்த சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் ஆம்னி பஸ்சின் இடிபாடுக்குள் சிக்கி டிரைவர் கமலக்கண்ணன் மற்றும் உதவியாளர் சக்திவேல் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பஸ்சில் வந்த 10 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலத்த காயம் அடைந்த 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. #Tamilnews
Next Story






