என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்துக்கு காவிரி நீர் விரைவில் கிடைக்கும்- அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு
    X

    தமிழகத்துக்கு காவிரி நீர் விரைவில் கிடைக்கும்- அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு தமிழகத்துக்கு காவிரி நீர் விரைவில் கிடைக்கும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியுள்ளார்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் மேலவீதியில் அ.தி.மு.க சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் செல்லையன், ஒன்றிய செய லாளர்கள் ராஜமாணிக்கம், ஜெயராமன், நகர செயலாளர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் கழக செயலாளர் போகர்ரவி வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயபால், தலைமை கழக பேச்சாளர் நல்லாற்று நடராசன், எம்.எல்.ஏ.க்கள் பாரதி, பவுன்ராஜ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முன்னதாக மாவட்ட செயலாளரும் , தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆண்டுதோறும் மே தினம் உழைக்கும் மக்களின் நினைவை போற்றும் வகையில் கொண்டாடப் பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர் தி.மு.க. வை விட்டு பிரிந்து அண்ணா திமுக என்ற பெயரில் தனி கட்சி தொடங்கிய போது சைக்கிள் ரிக்ஷாக்காரர்கள், ஒட்டுனர்கள், உழைக்கும் வர்க்கத்தினர் தான் எம்.ஜி.ஆருக்கு முதலில் ஆதரவு அளித்தனர். அன்று முதல் உழைக்கும் மக்களின் உயர்வை போற்றும் வகையில் அ.தி.மு.க சார்பில் ஆண்டுதோறும் மே தின பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    காவிரியை பற்றி பேச தி.மு.க. விற்கு எந்த தகுதியும் கிடையாது. காவிரி நீரை பற்றியும், காவிரி மேலாண்மை பற்றியும் பேச தகுதி உள்ள கட்சி அ.தி.மு.க மட்டும்தான். தற்பொழுது தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர் பொதுமக்களிடம் தவறான பிரச்சாரம் செய்து வருகிறார்.இதை பொதுமக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள். விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு தமிழகத்திற்கு உரிய தண்ணீர் பெறப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ சக்தி, மாவட்ட பேரவை செயலாளர் நற்குணன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகரன், மாவட்ட மீனவரணி செய லாளர் நாகரத்தினம், நகர பேரவை செயலாளர் மணி, கூட்டுறவு சங்க தலைவர்கள் அஞ்சம்மாள், பார்த்தசாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×