என் மலர்
செய்திகள்

காவிரி உரிமையை மீட்க இறுதிவரை போராடுவோம்- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
காவிரி உரிமையை மீட்க இறுதிவரை போராடுவோம் என்று நாகையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். #CauveryIssue
நாகப்பட்டினம்:
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் பெற்று தர மத்திய அரசை வலியுறுத்தி நாகை அவுரித்திடலில் நேற்று இரவு அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் பூராசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் ஓ.எஸ். மணியன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி பிரச்சனையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் தற்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் அ.தி.மு.க. அரசு அறப்போராட்டங்கள் மற்றும் சட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
தற்போது பல கட்சியினர் , இயக்கத்தினர் காவிரி பிரச்சனைக்கு குரல் கொடுப்பதாக கபட நாடகம் நடத்தி வருகின்றனர். காவிரி பிரச்சனைக்கு முக்கிய காரணமானவர் கருணாநிதி தான். ஆனால் தற்போது தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நடை பயணம், சைக்கிள் பயணம், மனித சங்கிலி போராட்டம் என கபட நாடகம் ஆடுகிறார். ஆனால் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.
மத்தியில் இணைக்கமாக இருந்த போது தி.மு.க. காவிரி பிரச்சனை பற்றி பேசாமல் இருந்தனர். ஆட்சி போன பிறகு அவர்களுக்கு காவிரி ஞாபகம் வருகிறது. காவிரி பிரச்சனையை பற்றி பேசுவதற்கும் முழக்கமிடுவதற்கும் தார்மீக பொறுப்புள்ளவர்கள் அ.தி.மு.க. வினர் தான்.
இலங்கையில் 2009-ம் ஆண்டில் மிகப்பெரிய போர் நடந்தது. அப்போது ஆட்சி செய்த கருணாநிதி கவலைப்படவில்லை. இதனால் இலங்கையில் 2 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். மத்தியில் காங்கிரசும், தமிழகத்தில் கருணாநிதியும் தான் ஆட்சி செய்தனர். அப்போது இலங்கை அதிபர் ராஜபக்சேவை பார்த்து இவர்கள் ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தால் இலங்கையில் இன படுகொலை நடந்திருக்காது.
காவிரி மேலாண்மை வாரியம் குறித்த விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 3-ந் தேதி வருகிறது. அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம். காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிச்சயமாக நிலைநாட்டுவோம். அதுவரை போராடுவோம். உறங்கமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் பெற்று தர மத்திய அரசை வலியுறுத்தி நாகை அவுரித்திடலில் நேற்று இரவு அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் பூராசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் ஓ.எஸ். மணியன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி பிரச்சனையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் தற்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் அ.தி.மு.க. அரசு அறப்போராட்டங்கள் மற்றும் சட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
தற்போது பல கட்சியினர் , இயக்கத்தினர் காவிரி பிரச்சனைக்கு குரல் கொடுப்பதாக கபட நாடகம் நடத்தி வருகின்றனர். காவிரி பிரச்சனைக்கு முக்கிய காரணமானவர் கருணாநிதி தான். ஆனால் தற்போது தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நடை பயணம், சைக்கிள் பயணம், மனித சங்கிலி போராட்டம் என கபட நாடகம் ஆடுகிறார். ஆனால் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.
மத்தியில் இணைக்கமாக இருந்த போது தி.மு.க. காவிரி பிரச்சனை பற்றி பேசாமல் இருந்தனர். ஆட்சி போன பிறகு அவர்களுக்கு காவிரி ஞாபகம் வருகிறது. காவிரி பிரச்சனையை பற்றி பேசுவதற்கும் முழக்கமிடுவதற்கும் தார்மீக பொறுப்புள்ளவர்கள் அ.தி.மு.க. வினர் தான்.
இலங்கையில் 2009-ம் ஆண்டில் மிகப்பெரிய போர் நடந்தது. அப்போது ஆட்சி செய்த கருணாநிதி கவலைப்படவில்லை. இதனால் இலங்கையில் 2 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். மத்தியில் காங்கிரசும், தமிழகத்தில் கருணாநிதியும் தான் ஆட்சி செய்தனர். அப்போது இலங்கை அதிபர் ராஜபக்சேவை பார்த்து இவர்கள் ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தால் இலங்கையில் இன படுகொலை நடந்திருக்காது.
காவிரி மேலாண்மை வாரியம் குறித்த விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 3-ந் தேதி வருகிறது. அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம். காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிச்சயமாக நிலைநாட்டுவோம். அதுவரை போராடுவோம். உறங்கமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
Next Story






