என் மலர்
செய்திகள்

ஈரோடு லாட்ஜில் படுகொலை செய்யப்பட்ட பெண்
ஈரோட்டில் லாட்ஜில் பெண் கழுத்தை நெரித்து படுகொலை: வாலிபர் வெறிச்செயல்
ஈரோட்டில் லாட்ஜில் பெண் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையம் அருகே நாச்சியப்பா 2-வது வீதியில் தனியார் லாட்ஜ் உள்ளது. இங்கு நேற்று இரவு 11 மணி அளவில் ஒரு ஆணும் பெண்ணும் வந்தனர்.
அந்த ஆண் தனது பெயர் தேவா என்றும், பெங்களூரு மெஜஸ்டிக் கார்னரை சேர்ந்தவர் என்றும் கூறி ரூ. 750-க்கு அறை எடுத்தார். அவருடன் அந்த பெண்ணும் தங்கினார்.
இன்று அதிகாலை 4 மணி அளவில் அந்த நபர் லாட்ஜ் மேலாளர் சண்முகத்தை சந்தித்தார். பெங்களூருவுக்கு செல்ல டிக்கெட் எடுக்க வேண்டும். டிக்கெட் எடுத்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.
மேலாளர் சந்தேகம் அடையாததால் சரி என்று கூறிவிட்டார். காலை 6 மணி ஆகியும் அந்த நபர் வரவில்லை. எனவே லாட்ஜ் மேலாளர் அந்த அறைக்கு சென்றார்.
அறையின் கதவு வெளியில் இருந்து திறக்கும் வகையில் சாதாரணமாக பூட்டப்பட்டு இருந்தது. எனவே கதவை லேசாக திறந்த மேலாளர் உள்ளே பார்த்தார்.
அப்போது அறையில் தரையில் அந்த நபருடன் வந்த பெண் படுத்திருந்தார். சந்தேகம் அடைந்த மேலாளர் அருகில் சென்று பார்த்தார்.
அப்போது அந்த பெண் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த மேலாளர் இது குறித்து ஈரோடு டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீஸ் டி.எஸ்.பி. சுரேஷ், இன்ஸ்பெக்டர்கள் விஜயன், ரமேஷ், முருகன் மற்றும் போலீசார் அந்த லாட்ஜிக்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க அந்த பெண் சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
எனவே அந்த பெண்ணுடன் லாட்ஜில் தங்கிய நபர் அந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி இருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
பின்னர் அந்த பெண்ணின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? உடன் தங்கிய நபருக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன உறவு? எதற்காக அந்த பெண் கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை.
இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு பஸ் நிலையம் அருகே நாச்சியப்பா 2-வது வீதியில் தனியார் லாட்ஜ் உள்ளது. இங்கு நேற்று இரவு 11 மணி அளவில் ஒரு ஆணும் பெண்ணும் வந்தனர்.
அந்த ஆண் தனது பெயர் தேவா என்றும், பெங்களூரு மெஜஸ்டிக் கார்னரை சேர்ந்தவர் என்றும் கூறி ரூ. 750-க்கு அறை எடுத்தார். அவருடன் அந்த பெண்ணும் தங்கினார்.
இன்று அதிகாலை 4 மணி அளவில் அந்த நபர் லாட்ஜ் மேலாளர் சண்முகத்தை சந்தித்தார். பெங்களூருவுக்கு செல்ல டிக்கெட் எடுக்க வேண்டும். டிக்கெட் எடுத்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.
மேலாளர் சந்தேகம் அடையாததால் சரி என்று கூறிவிட்டார். காலை 6 மணி ஆகியும் அந்த நபர் வரவில்லை. எனவே லாட்ஜ் மேலாளர் அந்த அறைக்கு சென்றார்.
அறையின் கதவு வெளியில் இருந்து திறக்கும் வகையில் சாதாரணமாக பூட்டப்பட்டு இருந்தது. எனவே கதவை லேசாக திறந்த மேலாளர் உள்ளே பார்த்தார்.
அப்போது அறையில் தரையில் அந்த நபருடன் வந்த பெண் படுத்திருந்தார். சந்தேகம் அடைந்த மேலாளர் அருகில் சென்று பார்த்தார்.
அப்போது அந்த பெண் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த மேலாளர் இது குறித்து ஈரோடு டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீஸ் டி.எஸ்.பி. சுரேஷ், இன்ஸ்பெக்டர்கள் விஜயன், ரமேஷ், முருகன் மற்றும் போலீசார் அந்த லாட்ஜிக்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க அந்த பெண் சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
எனவே அந்த பெண்ணுடன் லாட்ஜில் தங்கிய நபர் அந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி இருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
பின்னர் அந்த பெண்ணின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? உடன் தங்கிய நபருக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன உறவு? எதற்காக அந்த பெண் கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை.
இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






