என் மலர்
டென்னிஸ்
- துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- இந்த தொடரில் இருந்து பிரிட்டன் வீரர் டிராபர் விலகியுள்ளார்.
துபாய்:
துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு சுற்றுகள் நேற்று தொடங்கியது.
இந்நிலையில், பிரிட்டனின் முன்னணி வீரரான ஜாக் டிராபர் துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
எனது உடலை நிர்வகிப்பதற்கும், ஆண்டு முழுவதும் தொடர்ந்து போட்டியிடுவதற்கான சிறந்த வாய்ப்பை வழங்குவதற்கும் நான் குழு ஆலோசனையைப் பெறுகிறேன். துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் நான் போட்டியிடவில்லை என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஜாக் டிராபர் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரியோ ஓபன் டென்னிஸ் தொடர் பிரேசிலில் நடந்து வருகிறது.
- இதில் ஜெர்மனியின் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ரியோ டி ஜெனிரோ:
ரியோ ஓபன் டென்னிஸ் தொடர் பிரேசிலில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜெர்மனியின் ஸ்வரேவ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ காம்சேனா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-4 என கைப்பற்றிய ஸ்வரேவ், அடுத்த இரு செட்களை 3-6, 4-6 என இழந்தார். இதன்மூலம் ரியோ ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் ரஷிய வீரரான ரூப்லெவ் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், பிரிட்டனின் ஜாக் டிராபர் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 7-5 என ரூப்லெவ் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை பிரிட்டன் வீரர் 7-5 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ரூப்லெவ் 6-1 என வென்று சாம்பியன் பட்ட்டம் கைப்பற்றி அசத்தினார்.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இறுதிச்சுற்றில் டென்மார்க் வீராங்கனை கிளாரா தோல்வி அடைந்தார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரிவா, டென்மார்க் வீராங்கனை கிளாரா டாசன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஆண்ட்ரிவா 7-6 (7-1), 6-1 என எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்தது.
- ஆண்கள் இரட்டையரில் பிரிட்டன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்றது.
இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் பிரிட்டனின் லாயிட் கிளாஸ்பூல்-ஜூலியன் கேஷ் ஜோடி, சக நாட்டின் ஜோ சாலிஸ்பெரி-நீல் கப்ஸ்கி ஜோடியுடன் மோதியது.
இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய லாயிட்-ஜூலியன் ஜோடி 6-3, 6-2 என எளிதில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் ரஷியாவின் ரூப்லெவ் அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 7-5 என ரூப்லெவ் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை கனடா வீரர் 6-4 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ரூப்லெவ் 7-6 (7-5) என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ரூப்லெவ், பிரிட்டனின் ஜாக் டிராபருடன் மோதுகிறார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையரில் யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-குரோசியாவின் இவான் டோடிக் ஜோடி, பிரிட்டனின் லாய்டு-ஜூலியன் கேஷ் ஜோடியுடன் மோதியது.
இதில் பிரிட்டன் ஜோடி சிறப்பாக ஆடி 7-6 (7-3), 6-3 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம் யூகி பாம்ப்ரி ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.
ஏற்கனவே ரோகன் போபண்ணா ஜோடி 2வது சுற்றில் தொடரில் இருந்து வெளியேறியது நினைவிருக்கலாம்.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் நம்பர் 6 வீராங்கனையும், கஜகஸ்தானைச் சேர்ந்தவருமான எலினா ரிபாகினா, ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரிவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஆண்ட்ரிவா 6-4, 4-6, 6-3 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ரிபாகினா தொடரில் இருந்து வெளியேறினார்.
இறுதிப்போட்டியில் ஆண்ட்ரிவா, டென்மார்க் வீராங்கனை கிளாரா டாசனுடன் மோதுகிறார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் ரஷியாவின் ரூப்லெவ் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், அமெரிக்காவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 6-1, 3-6, 7-6 (10-8) என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பிரிட்டனின் ஜாக் டிராபர் 4-6, 6-4, 6-3 என இத்தாலி வீரர் மேட்டியோ பிரேட்டேனியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- காலிறுதி ஆட்டம் ஒன்றில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஜிரி லெஹெக்கா (செக்) மோதினர்.
- முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர்.
தோகா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோகாவில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஜிரி லெஹெக்கா (செக்) உடன் மோதினார்.
இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றிய நிலையில், 3-வது செட்டை ஜிரி லெஹெக்கா கைப்பற்றி அல்காரசுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 3-6, 6-3 மற்றும் 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
ஜிரி லெஹெக்கா அரையிறுதியில் ஜாக் டிராப்பர் உடன் மோத உள்ளார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் ஆண்கள் இரட்டையரில் யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-குரோசியாவின் இவான் டோடிக் ஜோடி, எல்-சால்வடாரின் மார்சலோ-குரோசியாவின் மேட் பாவிக் ஜோடியுடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி 2-6, 6-3, 10-8 என வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா காலிறுதியில் வெற்றி பெற்றார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் நம்பர் 6 வீராங்கனையும், கஜகஸ்தானைச் சேர்ந்தவருமான எலினா ரிபாகினா, அமெரிக்காவின் சோபியா கெனின் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-2, 7-6 (7-2) என வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் செக் நாட்டு வீராங்கனையான முச்சோவா 6-2, 7-5 என்ற செட் கணக்கில் ரோமேனியாவின் சொரானா சிர்ஸ்டியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.






