என் மலர்
டென்னிஸ்
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
- இந்தத் தொடரில் இருந்து ருமேனியா முன்னணி வீராங்கனை விலகியுள்ளார்.
சிட்னி:
அடுத்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த மாதம் 12-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று ஜனவரி 6 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்தத் தொடரிலிருந்து 2 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலெப் விலகுவதாக அறிவித்துள்ளார்.
கால்முட்டி மற்றும் தோள்பட்டை வலியால் அவதிப்படும் அவர் அதிலிருந்து முழுமையாக மீளாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
- ஆஸ்திரேலியா, அமெரிக்க ஓபரை சின்னர் கைப்பற்றினார்.
- பிரெஞ்ச், விம்பிள்டன் ஓபனை அல்காரஸ் கைப்பற்றினார்.
டென்னிஸ் போட்டிகளில் மிகவும் உயரியதாக பார்க்கப்படுவது ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகும். ஆண்டுதோறும் இந்த நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடைபெறும்.
ஆஸ்திரேலியா ஓபன்
இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் சின்னர், ருப்லேவ், ஜோகோவிச், பிரிட்ஸ், ஸ்வெரேவ், அல்காரஸ், கர்காஸ், மெட்வதேவ் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.
ருப்லேவ்-ஐ சின்னர் 3-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். ஜோகோவிச் 3-1 என பிரிட்ஸை வீழ்த்தினார். ஸ்வெரேவ் அல்காரசை வீழ்த்தினார். மெட்வெதேவ் ஐந்து செட்கள் போராடி கர்காசை வீழ்த்தினார்.
அரையிறுதியில் ஸ்வெரேவை் மெட்வெதேவ் கடும் போராட்டத்திற்கு பின் 3-2 என்ற செட் கணக்கில் வென்றார். ஜோகோவிச்சை 3-1 என சின்னர் விழ்த்தினார்.
மெட்வெதேவ்- சின்னர் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தினர். இதில் சின்னர் 3-6, 3-6, 6-4, 6-4, 6-3 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
பிரெஞ்ச் ஓபன்
மே-ஜூன் மாதங்களில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபனில் காலிறுதி போட்டிகளில் டிமிட்ரோவை 3-0 என சின்னர் எளிதாக வென்றார். ஸ்வெரேவ் 3-0 என டி. மினாயுரை வீழ்த்தினார். அல்காரஸ் டிசிட்சிபாசை 3-0 என வீழ்த்தினார். ஜோகோவிச் காயம் காரணமாக வெளியேறியதால் ரூட் அரையிறுதிக்கு முன்னேறினார்.
அரையிறுதியில் ரூட்டை ஸ்வெரேவ் 3-1 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதி போட்டியில் அல்காரஸ் 3-2 என கடும் போராட்டத்திற்குப் பின் சின்னரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
ஸ்வெரேவ்- அல்காரஸ் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தினர். இறுதிப் போட்டி ஐந்து செட்கள் வரை நீடித்தது. இறுதியாக அல்காரஸ் 6-3, 2-6, 7-5, 6-1, 6-2 (3-2) என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
விம்பிள்டன் ஓபன்
ஜூன்- ஜூலை மாதங்களில் நடைபெற்ற விம்பிள்டன் ஓபன் காலிறுதி போட்டிகளில் அல்காரஸ் 3-1 என டி.பாலை வீழ்த்தினார். மெட்வெதேவ் 3-2 என சின்னரை வீழ்த்தினார். பிரிட்ஸை 3-2 என முசெட்டி வீழ்த்தினார். டி. மினாயுர் காயம் காரணமாக வெளியேற ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
அரையிறுதியில் முசெட்டியை 3-0 என ஜோகோவிச் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் மெட்வெதேவை 3-1 என அல்காரஸ் வீழ்த்தினார்.
இறுதிப் போட்டியில் அல்காரஸ்- ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்தினர். இதில் அல்காரஸ் 3-0 என எளிதாக வீழ்த்தினார்.
அமெரிக்க ஓபன்
ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் நடைபெற்ற அமெரிக்க ஓபனில் முதல் காலிறுதியில் ஸ்வெரேவை 3-1 என பிரிட்ஸ் வீழ்த்தினார். 2-வது காலிறுதியில் டிராபர் 3-0 என டி மினாயுரை வீழ்த்தினார். 3-வது காலிறுதியில் தியாஃபோ 3-1 என டிமிட்ரோவை வீழ்த்தினார். 4-வது காலிறுதியில் 3-1 என மெட்வெதேவை 3-1 என சின்னர் வீழத்தினார்.
அரையிறுதியில் தியாஃபோவை 3-2 என பிரிட்ஸ் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் டிராப்பரை 3-0 என சின்னர் வீழ்த்தினார்.
இறுதிப் போட்டியில் சின்னரை 3-0 என எளிதாக பிரிட்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
நான்கு கிராண்ட்ஸ்லாம்களில் சின்னர் ஆஸ்திரேலியா ஓபன், அமெரிக்க ஓபரை வென்றார். அல்காரஸ் பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் ஓபனை கைப்பற்றினார்.
- பிரெஞ்ச் ஓபனை மட்டும் 14 முறை வென்றுள்ளார்.
- அனைத்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் தலா இரண்டு முறை வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
டென்னிஸ் விளையாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் தலைசிறந்த வீரராக கருதப்படும் மூன்று வீரர்களில் ஒருவராக ரபேல் நடால் திகழ்ந்தார். பெடரர் மற்றும் ஜோகோவிச் ஆகியோருடன் இணைந்து தலைசிறந்த வீரராக பார்க்கப்படுகிறார்.
கிராண்ட்ஸ்லாம்
இடது கை பழக்கம் கொண்ட நடால் ஏடிபி தரவரிசையில் 209 வாரங்கள் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தவர். ஐந்து முறை முதல் இடத்தை வகித்துள்ளார். 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர். குறிப்பாக பிரெஞ்ச் ஓபனை மட்டும் 14 முறை வென்றுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை அதிகமுறை வென்றவராக இருந்த பெடரர் (20) சாதனையை முறியடித்தார். தற்போது ஜோகோவிச் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். நடால் 22 கிராண்ட்ஸ்லாம் இடங்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
கடந்த 2010-ல் பிரெஞ்ச ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய மூன்றையும் தனது 24 வயதில் வென்றார். 2008-ல் சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கம் பதக்கம் வென்றார். 24 வயதில் (மிகவும் இளம் வயதில்) மூன்று மாறுபட்ட மைதானங்களில் (Courts) சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றார்.
2005-ல் பிரெஞ்ச் ஓபனை வென்று சாதனைப் படைத்தார். 2022-ல் ஆஸ்திரேலிய ஓபனை வென்றதன் மூலம் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை தலா இரண்டு முறை வென்ற வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.
ஐந்து செட்களை கொண்ட 391 போட்டிகளில் 345 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். சராசரி 88.23 சதவீதம் ஆகும்.
ஒற்றையர் சாம்பியன் பட்டம்
ஏடிபி ஒற்றையர் பிரிவில் 36 மாஸ்டர்ஸ் டைட்டில், ஒலிம்பிக் மெடல் உள்பட 92 பதக்கங்கள் வென்றுள்ளார். இதில் 63 டைட்டில் Clay Courts-ல் வென்றதாகும். செம்மண் தரையில் (Clay Courts) முடிசூடா மன்னனாக திகழ்ந்தார்.
20 வருடங்கள் டென்னிசில் சிறந்த வீரராக திகழ்ந்தார். 20 வயதிற்குள் தரவரிசையில் 2-வது இடம் மற்றும் 16 ஏடிபி டூர் டைட்டில் வென்று அசத்தியவர்.
ஆஸ்திரேலிய ஓபன்
ஆஸ்திரேலிய ஓபனை 2009 மற்றும் 2022 ஆகிய இரண்டு முறை வென்றுள்ளார்.

பிரெஞ்ச் ஓபன்
பிரெஞ்ச் ஓபனை 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019, 2020, 2022 ஆகிய 14 முறை வென்றுள்ளார். இதில் இரண்டு முறை தொடர்ந்து 4 முறையும், ஒரு முறை தொடர்ந்து ஐந்து முறையும் வென்றுள்ளார்.

பிரெஞ்ச் ஓபனில் மூன்று முறை (2012, 2014, 2022) ஜோகோவிச்சை வீழ்த்தியுள்ளார். 2006 முதல் 2008 வரை தொடர்ந்து மூன்று முறை ரோஜர் பெடரரை வீழ்த்தியுள்ளார். 2011-ம் ஆண்டும் ரோஜர் பெடரரை வீழ்த்தியுள்ளார்.
விம்பிள்டன்
விம்பிள்டன் ஓபனை 2008 மற்றும் 2010 ஆகிய இரண்டு முறை வென்றுள்ளார்.

அமெரிக்க ஓபன்
அமெரிக்க ஓபனை 2010, 2013, 2017 மற்றும் 2019 என நான்கு முறை வென்றுள்ளார்.

ஓய்வு அறிவிப்பு
38 வயதாகிய ரபேல் நடால் இந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற டேவிஸ் கோப்பை காலிறுதி போட்டியுடன் ஓய்வு பெற்றார். தனது கடைசி போட்டியில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2008-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
2004, 2008, 2009, 2011, 2019 ஆகிய டேவிஸ் கோப்பையை ஸ்பெயின் அணிக்காக வென்றுள்ளார். ஆனால் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இரட்டை பிரிவில் ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வென்றது கிடையாது.
- பயண கலைப்பு, தூக்கமின்மை பிரச்சினைக்காக எடுத்த மருந்தால் தான் இந்த சிக்கல் ஏற்பட்டு விட்டது.
- தனக்கு விதிக்கப்பட ஒரு மாத தடையை முறைப்படி ஏற்றுக்கொள்வதாக ஸ்வியாடெக் கூறினார்.
லண்டன்:
பெண்கள் டென்னிஸ் தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவரும், 5 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான இகா ஸ்வியாடெக்கிடம் (போலந்து) கடந்த ஆகஸ்டு மாதம், போட்டியில் பங்கேற்காத சமயத்தில் நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவர் ஒரு மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார். அத்துடன் அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. பிறகு அப்பீல் செய்ததால் இடைநீக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
தனக்கு விதிக்கப்பட ஒரு மாத தடையை முறைப்படி ஏற்றுக்கொள்வதாக 23 வயதான ஸ்வியாடெக் தற்போது அறிவித்த பிறகே அவர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய தகவல் அனைவருக்கும் தெரிந்துள்ளது. 'இது தெரியாமல் நடந்த தவறு, பயண கலைப்பு, தூக்கமின்மை பிரச்சினைக்காக எடுத்த மெலடோனின் மருந்தால் தான் இந்த சிக்கல் ஏற்பட்டு விட்டது' என ஸ்வியாடெக் அளித்த விளக்கத்தை விசாரணை கமிட்டியினர் ஏற்றுக்கொண்டதால் குறைந்த தண்டனையுடன் தப்பித்தார். வருகிற 4-ந்தேதிக்கு பிறகு அவர் போட்டிகளில் பங்கேற்கலாம்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறுகிறது.
- ஆண்டி முர்ரே சமீபத்தில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு ஓய்வு பெற்றார்.
நான்கு வகை கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் செர்பிய வீரரும், நம்பர் 2 வீரருமான நோவக் ஜோகோவிச் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரேவை புதிய பயிற்சியாளராக அறிவித்தார்.
அனுபவம் வாய்ந்த டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே சமீபத்தில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு ஓய்வு பெற்றார்.
ஜனவரி மாதம் மெல்போர்னில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச்சுடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.
இதுதொடர்பாக ஜோகோவிச் கூறுகையில், எனது மிகப்பெரிய போட்டியாளர்களில் ஒருவரை, வலையின் அதே பக்கத்தில், இந்த முறை எனது பயிற்சியாளராக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.
- ரபேல் நடால் 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
- பிரெஞ்ச் ஓபனில் மட்டும் 14 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
டென்னிஸ் போட்டியில் தலைசிறந்த வீரராக திகழ்ந்தவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால். இடது கை பழக்கம் கொண்ட நடால் புல் தரையை விட களிமண் தரையில் கிங்காக விளங்கியவர். களிமண் தரையில் நடைபெறும் பிரெஞ்ச் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை 14 முறை வென்றுள்ளார். மொத்தம் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.
38 வயதாகும் ரபேல் நடால் தற்போது நடைபெற்று வரும் டேவிஸ் கோப்பையுடன் விடைபெறுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் டேவிஸ் கோப்பை காலிறுதியில் ஸ்பெயின்- நெதர்லாந்து அணிகள் மோதின. நடல் நெதர்லாந்தை சேர்ந்த போட்டிக் வான் டி சாண்ட்ஸ்கல்ப்-ஐ எதிர்கொண்டார்.
இதில் 4-6, 4-6 என நடால் தோல்வியடைந்தார். இதனால் தோல்வியுடன் அவருடைய 23 வருட டென்னிஸ் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. சொந்த மண்ணில் (மலாகா) கூடியிருந்த ரசிகர்களின் மத்தியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத் முயற்சி செய்த நடாலுக்கு தோல்வி ஏற்பட்டது.
கடந்த 2004-ம் ஆண்டு ஒரு போட்டியில் தோல்வியடைந்த பிறகு 29 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வெற்றி சராசரியில் சாதனைப்படைத்துள்ளார்.

தொழில்முறை டென்னிஸ் இருந்து ஓய்வு பெற இருப்பதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார். காயம் அவரை இந்த முடிவை எடுக்க வழிவகுத்தது.
டேவிஸ் கோப்பையின் முதல் போட்டியில் தோல்வியடைந்திருந்தேன். தற்போது கடைசி போட்டியில் தோல்வியடைந்துள்ளேன். ஆகவே, நாங்கள் வட்டத்தை முடித்துள்ளோம். என நடால் நகைச்சுவையாக தெரிவித்தார்.
ஜோகோவிச் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று முதல் இடத்தை பிடித்துள்ளார். நடால் 22 பட்டங்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெற்றது.
- இதில் நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர் கோப்பை வென்றார்.
பெல்கிரேட்:
ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி இன்றுடன் முடிவடைகிறது.
இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார்.
இதில் சின்னர் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
- இதில் நம்பர் 2 வீரரான ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பெல்கிரேட்:
ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி நாளையுடன் முடிவடைகிறது.
இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நம்பர் 2 வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார்.
இதில் பிரிட்ஸ் 6-3, 3-6, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பிரிட்ஸ், சின்னர் அல்லது ரூட் இவர்களில் ஒருவருடன் மோத உள்ளார்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
- இதில் நம்பர் 6 வீரரான காஸ்பர் ரூட் 3வது சுற்றில் வெற்றி பெற்றார்.
பெல்கிரேட்:
ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி 17-ம் தேதி வரை நடக்கிறது.
இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3வது லீக் போட்டியில் 6-வது நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட், 8வது நிலை வீரரான ரஷியாவின் ஆண்ட்ரூ ரூப்லெவ் உடன் மோதினார்.
இதில் காஸ்பர் ரூட் 6-4, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
- இதில் நம்பர் 2 வீரரான ஸ்வரேவ் 3வது சுற்றில் வெற்றி பெற்றார்.
பெல்கிரேட்:
ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி நாளை மறுதினம் வரை நடக்கிறது.
இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொனடனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3வது லீக் போட்டியில் நம்பர் 2 வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், நம்பர் 3 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் ஸ்வரேவ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதுகிறார்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
- இதில் நம்பர் 1 வீரரான சின்னர் 3வது சுற்றில் வெற்றி பெற்றார்.
பெல்கிரேட்:
ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி 17-ம் தேதி வரை நடக்கிறது.
இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3வது லீக் போட்டியில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் சின்னர், நம்பர் 4 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ் உடன் மோதினார்.
இதில் சின்னர் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் சின்னர் அரையிறுதிக்குள் நுழைந்தார்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
- இதில் நம்பர் 2 வீரரான ஸ்வரேவ் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
பெல்கிரேட்:
ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி 17-ம் தேதி வரை நடக்கிறது.
இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2வது லீக் போட்டியில் 2ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், 6-வது நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ்7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வென்றார்.






