என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • ஜோகோவிச் 4-6, 6-3, 6-2 , 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
    • இன்று மாலை பெண்கள் ஒற்றையர் அரைஇறுதி போட்டிகள் நடைபெறும்.

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    24 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், உலகின் 6-ம் நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா) கால் இறுதியில் 3-வது வரிசையில் உள்ள ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் சுவரேவை எதிர் கொண்டார். இதில் ஜோகோவிச் 4-6, 6-3, 6-2 , 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 3 மணி 17 நிமிட நேரம் தேவைப்பட்டது.

    ஜோகோவிச் அரை இறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ஜானிக் சின்னரை (இத்தாலி) சந்திக்கிறார். அவர் கால்இறுதி ஆட்டத்தில் 6-1, 7-5, 6-0 என்ற நேர் செட் கணக்கில் கஜகஸ்தானை சேர்ந்த அலெக்சாண்டர் பப்ளிக்கை எளிதில் தோற்கடித்தார். மற்றொரு அரையிறுதியில் 2-ம் நிலை வீரரான அல்காரஸ் (ஸ்பெயின்)-எட்டாம் நிலை வீரர் லாரென்சோ முசெட்டி (இத்தாலி) மோதுகிறார்கள்.

    இன்று மாலை பெண்கள் ஒற்றையர் அரைஇறுதி போட்டிகளில் சபலென்கா (பெலாரஸ்)-ஸ்வியாடெக் (போலந்து) , கோகோ காப் (அமெரிக்கா)-பாய்சன் (பிரான்ஸ்) மோதுகிறார்கள்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
    • இதில் இத்தாலி வீரர் சின்னர் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-1, 7-5, 6-0 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
    • பெண்கள் ஒற்றையரில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் முன்னணி வீராங்கனையான ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, தரவரிசையில் 361வது இடத்தில் உள்ள பிரான்சின் லூயிஸ் போய்சன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய போய்சன் 7-6 (8-6), 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் நடப்பு தொடரில் இருந்து மிர்ரா ஆண்ட்ரீவா வெளியேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் போய்சன், கோகோ காப்பை எதிர்கொள்கிறார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
    • பெண்கள் ஒற்றையரில் அமெரிக்காவின் கோகோ காப் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.

    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், சக நாட்டு மேடிசன் கீஸ் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மேடிசன் கீஸ் 7-6(8-6) என்ற செட் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.

    இதில் சுதாரித்துக் கொண்ட கோகோ காப் அடுத்த இரு சுற்றுகளை 6-4, 6-1 என்ற செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • காலிறுதி ஆட்டம் ஒன்றில் எலினா ஸ்விடோலினா மற்றும் இகா ஸ்வியாடெக் ஆகியோர் மோதினர்.
    • முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் எலினா கைப்பற்றினார்.

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்)மற்றும் இகா ஸ்வியாடெக் (போலந்து) ஆகியோர் மோதினர்.

    இதில் முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் எலினா கைப்பற்றினார். அடுத்த 2 செட்டையும் ஸ்வியாடெக் கைப்பற்றினார். இதன் மூலம் ஸ்வியாடெக் 1-6, 6-3, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • காலிறுதி ஆட்டம் ஒன்றில் அரினா சபலென்கா (பெலருசியா) மற்றும் ஜெங் கின்வென் (சீனா) ஆகியோ மோதினர்.
    • இதில் சபலென்கா 7-3, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் அரினா சபலென்கா (பெலருசியா) மற்றும் ஜெங் கின்வென் (சீனா) ஆகியோ மோதினர்.

    இதில் சபலென்கா 7-3, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • சின்னர் 6-1, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
    • இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி நேரம் தேவைப்பட்டது.

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் முதல் நிலை வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) 4-வது சுற்று ஆட்டத்தில் 17-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவை (ரஷியா) எதிர் கொண்டார்.

    இதில் சின்னர் 6-1, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி நேரம் தேவைப்பட்டது. சின்னர் கால் இறுதியில் கஜகஸ்தானை சேர்ந்த அலெக் சாண்டர் பப்ளிக்கை சந்திக்கிறார். அவர் 4-வது சுற்றில் 5-வது வரிசையில் உள்ள ஜேக் டிராபரை (இங்கிலாந்து) 5-7, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

    மற்றொரு ஆட்டத்தில் 3-வது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) 4-வது சுற்றில் கிரிக்ஸ்பூரை (நெதர்லாந்து) எதிர்கொண்டார். இதில் சுவரேவ் 6-4, 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது கிரிக்ஸ்பூர் காயத்தால் விலகினார். இதனால் சுவரேவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட் டது. ஜோகோவிச்-சுவரேவ் கால் இறுதியில் மோதுகிறார்கள்.

    24 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், 6-ம் நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் இங்கிலாந்து வீரர் கேமரூன் நாரியை 6-2, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார்.

    • ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் வெற்றி பெற்றார்.
    • பெண்களுக்கான 4-வது சுற்றில் மேடிசன் கீஸ், கோகோ காப், மிர்ரா ஆண்ட்ரீவா ஆகிய வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மன்) டாலன் கிரீஸ்பூர் (டச்சு) ஆகியோர் மோதினர்.

    இதில் அலெக்சாண்டர் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். 2-வது செட் 3-0 என்ற செட் கணக்கில் இருக்கும் போது டாலன் காயம் காரணமாக வெளியேறினார். இதனால் அலெக்சாண்டர் கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), லோயிஸ் போய்சன் (பிரெஞ்சு) ஆகியோர் மோதினர். இதில் முதல் செட்டை பெகுலா கைப்பற்றினார். அடுத்த இரண்டு செட்டுகளை போய்சன் வென்று பெகுலாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

    மற்றொரு ஆட்டங்களில் மேடிசன் கீஸ் (அமெரிக்கா), கோகோ காப் (அமெரிக்கா), மிர்ரா ஆண்ட்ரீவா (ரஷ்யா) ஆகிய வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 4-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் முதல் இரு செட்களை 7-6 (10-8), 6-3 என வென்றார். 3வது செட்டை பென் ஷெல்டன் 6-4 என கைப்பற்றினார்.

    4-வது செட்டை அல்காரஸ் 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் காலிறுதியில் அல்காரஸ், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதுகிறார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
    • இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி அடைந்தது.

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-அமெரிக்காவின் ராபர்ட் கலோவோ ஜோடி,

    பிரிட்டனின் இவான் கிங்-கிறிஸ்டியன் ஹாரிசன் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய பிரிட்டன் ஜோடி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் யூகி பாம்ப்ரி ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
    • பெண்கள் ஒற்றையரில் இகா ஸ்வியாடெக் நான்காவது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 1-6 என இழந்த ஸ்வியாடெக் அடுத்த இரு சுற்றுகளை சிறப்பாக ஆடி 6-3, 7-5 என்ற செட்களில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நாளை மறுதினம் நடைபெறும் காலிறுதியில் ஸ்வியாடெக் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோதுகிறார்.

    மற்றொரு போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா 7-5, 6-3 என்ற செட்கணக்கில் அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நாளை மறுதினம் நடைபெறும் காலிறுதியில் சபலென்கா சீனாவின் குயின்வென் ஜெங் உடன் மோதுகிறார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
    • பெண்கள் ஒற்றையரில் ஸ்பெயின் வீராங்கனை தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் ஸ்பெயினின் பவுலா படோசா, ஆஸ்திரியாவின் டரியா கசட்கினா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய கசட்கினா 6-1, 7-5 என்ற செட்களில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீராங்கனையான பவுலா படோசா தொடரில் இருந்து வெளியேறினார்.

    ×