என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார்.
    • 3வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஜோகோவிச் வென்றுள்ளார்.

    பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இறுதிப்போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூடை 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    இதன்மூலம், 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார். மேலும், ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச் முதலிடம் பிடித்தார்.

    3வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஜோகோவிச் வென்றுள்ளார்.

    காயம் காரணமாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் இம்முறை பங்கேற்கவில்லை. இந்நிலையில், ஜோகோவிச்சின் வெற்றிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நடால் கூறியதாவது:-

    இந்த அற்புதமான சாதனைக்கு ஜோகோவிச்சுக்கு பல வாழ்த்துகள்.

    23 என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு சிந்திக்க முடியாத ஒரு எண், அதை நீங்கள் சாதித்துள்ளீர்கள். இதை உங்கள் குடும்பம் மற்றும் குழுவுடன் கொண்டாடுங்கள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார்.
    • ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச்.

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. இதில் 22 கிராண்ட் சிலாம் பட்டம் பெற்றவரும், 3-வது வரிசையில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) நான்காம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே) மோதினார்கள்.

    ஆஸ்திரேலியா ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 டென்னிஸ் போட்டிகள் கிராண்ட் சிலாம் அந்தஸ்து பெற்றவையாகும். ரபேல் நடாலும் (ஸ்பெயின்) ஜோகோவிச்சும் இணைந்து அதிக கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற வீரர்களாக இருக்கிறார்கள். இருவரும் தலா 22 பட்டத்தை பெற்று உள்ளனர்.

    இன்றைய பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 23-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய வரலாறு படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்பட்டது.

    சாம்ராசின் 14 கிராண்ட்சிலாம் சாதனைனையை பெடரர் முறியடித்தார். பெடரரின் 20 கிராண்ட்சிலாம் சாதனையை ரபெல் நடால் முறியடித்தார். நடாலின் 22 கிராண்ட்சிலாம் சாதனையை ஜோகோவிச்இன்று முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

    அவர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 10 தடவையும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 2 முறையும், விம்பிள்டன் பட்டத்தை 7 முறையும், அமெரிக்க ஓபனை 3 தடவையும் வென்றார். காயம் காரணமாக நடால் இந்த போட்டியில் ஆடவில்லை.

    நார்வே வீரர் கேஸ்பர் ரூட் முதல் தடவையாக கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் இருந்தார்.

    இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இறுதிப்போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூடை 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    இதன்மூலம், 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார்.

    மேலும், ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச் முதலிடம் பிடித்தார்.

    3வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஜோகோவிச் வென்றுள்ளார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.
    • நார்வே வீரர் கேஸ்பர் ரூட் முதல் தடவையாக கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.

    பாரீஸ்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இதில் 22 கிராண்ட் சிலாம் பட்டம் பெற்றவரும், 3-வது வரிசையில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) நான்காம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே) மோதுகிறார்கள்.

    ஆஸ்திரேலியா ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 டென்னிஸ் போட்டிகள் கிராண்ட் சிலாம் அந்தஸ்து பெற்றவையாகும்.

    ரபேல் நடாலும் (ஸ்பெயின்) ஜோகோவிச்சும் இணைந்து அதிக கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற வீரர்களாக இருக்கிறார்கள். இருவரும் தலா 22 பட்டத்தை பெற்று உள்ளனர்.

    இன்றைய பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 23-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய வரலாறு படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சாம்ராசின் 14 கிராண்ட்சிலாம் சாதனைனையை பெடரர் முறியடித்தார். பெடரரின் 20 கிராண்ட்சிலாம் சாதனையை ரபெல் நடால் முறியடித்தார். நடாலின் 22 கிராண்ட்சிலாம் சாதனையை ஜோகோவிச்இன்று முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    அவர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 10 தடவையும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 2 முறையும், விம்பிள்டன் பட்டத்தை 7 முறையும், அமெரிக்க ஓபனை 3 தடவையும் வென்றார். காயம் காரணமாக நடால் இந்த போட்டியில் ஆடவில்லை.

    நார்வே வீரர் கேஸ்பர் ரூட் முதல் தடவையாக கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.

    நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் (போலந்து) சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 3-வது முறையாக வென்றார். ஒட்டுமொத்தமாக 4-வது கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
    • இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

    பாரீஸ்:

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் இறுதிச்சுற்று ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், செக் வீராங்கனை கரோலினா முச்சோவாவுடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-2 என்ற செட் கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை முச்சோவா போராடி 7-5 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-4 என கைப்பற்றிய இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.

    • காலிறுதிச்சுற்றில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவை எதிர்கொண்டு அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • அரை இறுதிச்சுற்றில் காஸ்பர் ரூட் சுவேரேவை எதிர்கொண்டார்.

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

    இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கான ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    இதில், நார்வே வீரர் காஸ்பர் ரூட், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவை எதிர்கொண்டார்.

    இந்த போட்டியின் இறுதியில், 6-1, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்ற ரூட், ரூனேவை வீழ்த்தி அரை இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற அரை இறுதிச்சுற்றில் காஸ்பர் ரூட் சுவேரெவை எதிர்கொண்டார்.

    இந்த ஆட்டத்தின் முடிவில், 6-3, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் சுவேரேவை வீழ்த்தி ரூட் வெற்றிப் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    • ஆண்களுக்கான அரை இறுதி ஆட்டத்தில் செர்பியாயின் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் அல்காரசுடன் மோதினார்.
    • இதில் ஜோகோவிச் அல்காரசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான முதல் அரையிறுதிச் சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

    தொடக்கம் முதல் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் முதல் செட்டை 6-3 என எளிதில் வென்றார். சுதாரித்து கொண்ட கார்லோஸ் அல்காரஸ் 2வது செட்டை போராடி 7-5 என கைப்பற்றினார்.

    இதையடுத்து, மூன்றாவது மற்றும் நான்காவது செட்டை ஜோகோவிச் 6-1, 6-1 என கைப்பற்றினார். இதன்மூலம் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஜோகோவிச் முன்னேறினார்.

    • தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் ஏ.டி.பி. தொடர் நடத்த முடியாத என அறிவித்தது
    • 2018-ல் இருந்து மகாராஷ்டிராவில் போட்டி நடைபெற்றது

    முதல்தர ஆடவர் டென்னிஸ் வீரர்களுக்காக நடத்தப்படும் ஏ.டி.பி., டென்னிஸ் விளையாட்டில் ஒரு உயர்வான போட்டியாக பார்க்கப்படுகிறது. ஏ.டி.பி. உலக சுற்றுப்பயணத்தில் பங்கேற்பது என்பது டென்னிஸ் விளையாட்டை வளரச் செய்வதுடன், அந்த போட்டியை நடத்தும் நகரத்துக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

    ஏ.டி.பி. 250 டென்னிஸ் அடுத்த ஆண்டு புனே நகரில் நடைபெறுவதாக இருந்த நிலையில், இனிமேலும் இப்போட்டிகள் இந்தியாவில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போட்டிகள் 1996-ல் தொடங்கி சமீப காலம் வரை, "டாடா ஒபன் மகாராஷ்டிரா" என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்தது.

    2018-ம் வருடம் "தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன்" தங்களால் இந்த போட்டிகளை நடத்த இயலாது என தெரிவித்திருந்தபோது, இந்த வாய்ப்பு நமது நாட்டை விட்டு போகாமலிருக்க, "மகாராஷ்டிர மாநில லான் டென்னிஸ் அசோசியேஷன்" இதை தொடர்ந்து நடத்த ஒப்புக்கொண்டது. மகாராஷ்டிர மாநில லான் டென்னிஸ் அசோசியேஷன், மகாராஷ்டிர அரசாங்கம், ஐ.எம்.ஜி., மற்றும் ரிலையன்ஸ் அகியோரின் ஒரு கூட்டு முயற்சியால் இது நடந்தது.

    தற்பொழுது மகாராஷ்டிர மாநில லான் டென்னிஸ் அசோசியேஷனின் செயலர் சுந்தர் ஐயர் மற்றும் போட்டிகளுக்கான இயக்குனர் பிரஷாந்த் சுடார் ஆகியோர், ஐ.எம்.ஜி. மற்றும் ரிலையன்ஸ் (RISE Worldwide) ஆகியோருடனான தங்களின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாகவும், மகாராஷ்டிர மாநில லான் டென்னிஸ் அசோசியேஷன் ஏற்றுக்கொண்ட தனது பொறுப்புகளை மிகச் சிறப்பாக செய்து முடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    மேலும், நாட்டின் நலனுக்காகவும், இந்திய டென்னிஸ் வீரர்கள் மற்றும் ஆர்வலர்களுக்காகவும் மகாராஷ்டிர அரசாங்கம் மற்றும் டாடா குழுமத்துடனும் தாங்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தங்களை எதிர்காலத்தில் பொறுப்போடு திறம்பட நிறைவேற்றுவோம் எனவும் கூறினர்.

    ரபேல் நடால், கார்லோஸ் மோயா, வாரின்கா, மற்றும் மரின் சிலிக் போன்றோர்கள் பங்கேற்கும் பொழுது உலகளாவிய அளவில் இப்போட்டிக்கும், அதை நடத்தும் நாட்டிற்கும் பெருமை உண்டாகியது. ஆனால் உலகளவு பிரபலமாக தர வரிசையில் முன்னணியில் உள்ள வீரர்களை தொடர்ந்து பங்கேற்கச் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதாக தெரிகிறது. இப்போட்டியை நடத்துபவர்களால் மரின் சிலிக்கை மட்டுமே பங்கேற்க வைக்க முடிந்தது.

    அதே சமயம், இந்திய வீரர்கள் ஏ.டி.பி.யின் தரவரிசையில் 1250 புள்ளிகளுக்கு 80 வரை மட்டுமே பெற முடிந்தது. அவர்களால் இரண்டாவது சுற்றுக்கு மேல் முன்னேற முடியவில்லை.

    தரவரிசை பட்டியலில் ஒற்றையர் ஆட்டப்பிரிவில் முதல் 200 இடங்களுக்குள் ஒரு இந்திய ஆட்டக்காரர் கூட இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னணி வீரர்கள் என்றளவில் 225-வது இடத்தில்தான் நாகலும், அவருக்குப் பின் 374-வது இடத்தில் முகுந்த் சசிகுமாரும் உள்ளனர்.

    யூகி பாம்ப்ரி, சுமித் நகல், பிரக்யேஷ் குணேஸ்வரன் ஆகியோர் சேல்ஞ்சர்ஸ் போட்டிகளில் பங்கேற்று தரவரிசையில் தங்களை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு சென்றனர்.

    லியாண்டர் பேஸ் மற்றும் மகேஷ் பூபதி ஓய்வு பெற்றதாலும், நட்சத்திர அந்தஸ்து உள்ள வீரர்கள் பெருமளவில் பங்கேற்காததாலும் இப்போட்டியை நடத்த தேவையான பொருட்செலவும், வசதிகளும், விளம்பரதாரர்களும் கிடைக்கவில்லை. உள்நாட்டு நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையில் பெரும் விளம்பரதாரர்கள் கிடைப்பது மிகவும் அரிதாகி விட்டது.

    தனது 5-வருட ஒப்பந்தத்திற்காக சுமார் ரூ. 75 கோடி மகாராஷ்டிர மாநில லான் டென்னிஸ் அசோசியேஷன் செலவு செய்திருப்பதாக தெரிகிறது. இதில் வெறும் ரூ.5 கோடி மட்டுமே மகாராஷ்டிர அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது.

    ஆனாலும், இந்திய அளவில் இரட்டையர் டென்னிஸ் பிரிவு ஆட்டக்காரர்களுக்கு இந்த போட்டிகள் பயனளித்ததாக கூறலாம். தற்போதைய தலைமுறையினரில் ரோகன் போபண்ணா, ஜீவன் நெடுஞ்செழியன், என். பாலாஜி, மற்றும் சக்தி மயினேனி ஆகியோர் இந்த போட்டிகளை பயன்படுத்தி தங்களின் தரவரிசையை முன்னே கொண்டு செல்லவும், பரிசுத்தொகைகளை வெல்லவும் செய்தனர்.

    டபிள்யு.டி.ஏ. எனப்படும் உலக பெண்கள் டென்னிஸ் போட்டிகளும் இந்தியாவின் கைவிட்டு செல்வதாக செய்தி வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே, இந்தியாவை விட்டு போகும் ஏ.டி.பி. போட்டிகளுக்கான வாய்ப்பு, அனேகமாக ஹாங்காங் நாட்டிற்கு செல்லலாம் என்று பேசப்படுகிறது.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கான ஆட்டம் நடைபெற்றது.
    • நார்வே வீரர் காஸ்பர் ரூட், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவை எதிர்கொண்டார்.

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கான ஆட்டம் நேற்று நடைபெற்றது.

    இதில், நார்வே வீரர் காஸ்பர் ரூட், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவை எதிர்கொண்டார்.

    இந்த போட்டியின் இறுதியில், 6-1, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்ற ரூட், ரூனேவை வீழ்த்தி அரை இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    • மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச்சுற்று இன்று நடைபெற்றது.
    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்கிற பெருமையை பெற்றுள்ளார் முச்சோவா.

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான பெல்லாரசின் அரினா சபலெங்கா 6-4, 6-4 என்ற நேர் செட்டில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசின் கரோலினா முச்சோவா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் ரஷிய வீராங்கனை அனஸ்டசியா பாவ்லி சென்கோவாவை தோற்கடித்து அரை இறுதியில் கால் பதித்தார்.

    இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில், சபலெங்கா, கரோலினா முச்சோவாவை எதிர்கொண்டார்.

    இதில், 7-6, 6-7, 7-5 என்று 2-1 என்ற செட் கணக்கில் வெற்றிப்பெற்று சபலெங்காவை வீழ்த்தி முச்சோவா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்கிற பெருமையை பெற்றுள்ளார் முச்சோவா.

    மற்றொரு ஆட்டத்தில், பிரேசில் வீராங்கனை பீட்ரில் ஹாடட் மையாவை எதிர்கொண்ட போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 6-2, 7-6 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிசின் காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன.
    • இன்று நடந்த காலிறுதியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் வென்றார்.

    பாரீஸ்:

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற காலிறுதி சுற்று ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை கோகோ கஃபுடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    அரையிறுதியில் பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹாடட் மையாவை சந்திக்கிறார்.

    • முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள இந்த போட்டியில் தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடந்தன.
    • பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹாடட் மையா, துனிசியாவின் ஆன்ஸ் ஜபேரை வீழ்த்தினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள இந்த போட்டியில் இன்று காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடந்தன.

    இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹாடட் மையா, 7-ம் நிலை வீராங்கனையான துனிசியாவின் ஆன்ஸ் ஜபேருடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை ஜபேர் 6-3 என கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஹாடட் மையா அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 6-1 என கைப்பற்றினார். அத்துடன் அரை இறுதிக்கும் முன்னேறினார்.

    உலகத் தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள ஹாடட் மையா, கடந்த 55 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் அரையிறுதியை எட்டிய முதல் பிரேசில் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

    • பிரெஞ்சு ஓபனில் அல்காரஸ் முதல்முறையாக அரைஇறுதிக்கு நுழைந்துள்ளார்.
    • அரையிறுதி போட்டி இந்திய நேரப்படி நாளை மறுநாள் மாலை 6.15 மணிக்கு தொடங்குகிறது.

    பாரிஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரான அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) கால்இறுதி ஆட்டத்தில் கிரீஸ் நாட்டை சேர்ந்த 5-ம் நிலை வீரரான ஸ்டேபானோஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார்.

    இதில் அல்காரஸ் 6-2, 6-1, 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் முதல்முறையாக அரைஇறுதிக்கு நுழைந்துள்ளார்.

    அல்காரஸ் அரைஇறுதி ஆட்டத்தில் 3-வது வரிசையில் உள்ள ஜோகோவிச்சை (செர்பியா) சந்திக்கிறார். இந்தப் போட்டி இந்திய நேரப்படி நாளை மறுநாள் மாலை 6.15 மணிக்கு தொடங்குகிறது.

    22 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற 36 வயதான ஜோகோவிச் கால்இறுதியில் கரன் கச்சனோவை (ரஷியா) 4-6, 7-6 (7-0), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

    இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் சுவரேவ் (ஜெர்மனி)-எட்செவரி (அர்ஜென்டினா), கேஸ்பர் ரூட் (நார்வே)-ஹோல்கர் ருனே (டென் மார்க்) மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது இடத்தில் உள்ள ஷபலென்கா (ரஷியா), கரோலினா மச்கோவா (செக் குடியரசு) ஆகியோர் கால்இறுதியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றனர். இருவரும் அரைஇறுதியில் மோதுகிறார்கள்.

    இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் ஜபீர் (துனிசியா)-ஹதாத் மயா (பிரேசில்), இகா ஸ்வியாடெக் (போலந்து)-கோகோ கவூப் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    ×