search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சபா கரிம், பும்ரா
    X
    சபா கரிம், பும்ரா

    ரிஷாப் பண்ட்தான் என்னுடைய முதல் சாய்ஸ்: முன்னாள் விக்கெட் கீப்பர் சொல்கிறார்

    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டது ஆச்சரியம் அளித்தது என முன்னாள் விக்கெட் கீப்பர் தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா காயத்தால் விளையாடவில்லை. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    இதனால் கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக ரிஷாப் பண்ட் நியமிக்கப்படுவார் என்ற நிலையில், பும்ரா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது. ரிஷாப் பண்ட்-ஐ துணைக் கேப்டனாக நியமித்திருக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்திருத்தனர். சிலர் பும்ரா தேர்வுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரிம், ரிஷாப் பண்ட்தான் தனது முதல் சாய்ஸ் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘பும்ராவை துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டதும் நான் மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். நான் எதிர்பார்க்கவே இல்லை. ரிஷாப் பண்ட் எல்லா வகை கிரிக்கெட் போட்டியிலும் விளையாடி வருவதால் துணைக் கேப்டனாக நியமிக்கப்படுவார் என நம்பிக் கொண்டிருந்தேன்.

    ரிஷாப் பண்ட்

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். அவர் எப்படி போட்டியை கண்காணிக்கிறார் என்று நாம் பார்த்துக் கொண்டிருந்தார். போட்டி குறித்து அதிக அளவில் தெரிந்து வைத்திருக்கிறார்’’ என்றார்.
    Next Story
    ×