என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ரிஷாப் பண்ட்
நீங்கள் தேடியது "ரிஷாப் பண்ட்"
தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, கே.எல். ராகுல் அரைசதம் அடிக்க அதன்பின் வந்த ஹர்திக் பாண்ட்யா, ரிஷாப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது, டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வை செய்தது.
முதல் இரண்டு போட்டிகளில் மோசமான தோல்வியை சந்தித்ததால் இந்த போட்டியில், எப்படியாவது வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தியா களம் இறங்கியது.
தொடக்க வீரரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா, கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்கத்தில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் சராசரியாக ஓவருக்கு 10 என்ற அளவில் வந்து கொண்டிருந்தது.
பவர் பிளே-யான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பிற்கு இந்தியா 53 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 37 பந்தில் அரைசதம் அடித்தார். கே.எல். ராகுல் 35 பந்தில் அரைசதம் அடித்தார். இந்தியா 11.4 ஓவரில் 100 ரன்னைக் கடந்தது.
இந்தியாவின் ஸ்கோர் 14.4 ஓவரில் 140 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 47 பந்தில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரி 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடங்கும். மறுமுனையில் விளையாடிய கே.எல். ராகுல் 48 பந்தில் 69 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ரன்கள் குவிக்க வேண்டும் என்பதால் 3-வது வீரராக ரிஷாப் பண்டும், 4-வது வீரராக ஹர்திக் பாண்ட்யாவும் களம் இறக்கப்பட்டனர். இந்தியா 17 ஓவர்கள் முடிந்த நிலையில் 160 ரன்கள் எடுத்திருந்தது.
18-வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 3 பவுண்டரிகள் அடிக்க 15 ரன்கள் கிடைத்தது. 19-வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 2 சிக்ஸ் விளாச 19 ரன்கள் கிடைத்தது. இதனால் இந்தியா 19 ஓவர் முடிவில் 194 ரன்கள் அடித்தது.
கடைசி ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 16 ரன்கள் கிடைத்தது. இதனால் இந்தியா 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்துள்ளது. ஹர்திக் பாண்ட்யா 13 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 35 ரன்களும், ரிஷாப் பண்ட் 13 பந்தில் 1 பவுண்டரி, 3 சிக்சருடன் 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X