என் மலர்
ரியோ ஒலிம்பிக்ஸ்-2016
ஜமைக்கா நாட்டை சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் மட்டும் தொடர்ந்து 9 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார்.
ரியோ டி ஜெனீரோ:
ஜமைக்கா நாட்டை சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் மட்டும் தொடர்ந்து 9 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் மட்டும் 100 மீட்டர் ஓட்டத்தில் ஒரு தங்கப் பதக்கத்தையும், அடுத்ததாக 200 மீட்டர் ஓட்டத்தில் ஒரு தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ள உசேன் போல்ட், இன்று நடைபெறும் 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
முன்னதாக, பீஜிங் ஒலிம்பிக்கில் 3 தங்கமும் (100 மீட்டர், 200 மீட்டர், 4X100 மீட்டர் தொடர் ஓட்டம்), லண்டன் ஒலிம்பிக்கில் 3 தங்கமும் (100 மீட்டர், 200 மீட்டர், 4X100 மீட்டர் தொடர் ஓட்டம்) இவர் வென்றிருந்தார். அந்த சாதனையை தொடரும் வகையில் ரியோ ஒலிம்பிக்கிலும் 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் இவர் வாகை சூடுவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நின்றது.
மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் இன்று நடைபெற்ற 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 37.27 வினாடிகளில் வெற்றிக் கோட்டை கடந்து இந்த ஒலிம்பிக்கின் மூன்றாவது தங்கத்தை இவர் தட்டிச் சென்றார்.
இதே தூரத்தை 37.60 வினாடிகளில் கடந்த ஜப்பான் வீரர் வெள்ளிப் பதக்கத்தையும், 37.62 வினாடிகளில் கடந்த அமெரிக்க வீரர் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.
இந்த வெற்றியுடன், தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் 9 தங்கப் பதக்கங்களை வென்றுள்ள உசேன் போல்ட், இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை படைத்த பின்லாந்து நாட்டின் ஓட்டப்பந்தய வீரர் பாவோ நுர்மி, அமெரிக்காவின் பிரபல ஓட்டப்பந்தய வீரரும், நீளம் தாண்டுதல் வீரருமான கார்ல் லிவீஸ் போன்ற பிரபல ஜாம்பவான்களின் தரவரிசையை மிக குறைந்த வயதிலும், குறுகிய காலகட்டத்திலும் எட்டிப்பிடித்து, அசுர சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜமைக்கா நாட்டை சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் மட்டும் தொடர்ந்து 9 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் மட்டும் 100 மீட்டர் ஓட்டத்தில் ஒரு தங்கப் பதக்கத்தையும், அடுத்ததாக 200 மீட்டர் ஓட்டத்தில் ஒரு தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ள உசேன் போல்ட், இன்று நடைபெறும் 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
முன்னதாக, பீஜிங் ஒலிம்பிக்கில் 3 தங்கமும் (100 மீட்டர், 200 மீட்டர், 4X100 மீட்டர் தொடர் ஓட்டம்), லண்டன் ஒலிம்பிக்கில் 3 தங்கமும் (100 மீட்டர், 200 மீட்டர், 4X100 மீட்டர் தொடர் ஓட்டம்) இவர் வென்றிருந்தார். அந்த சாதனையை தொடரும் வகையில் ரியோ ஒலிம்பிக்கிலும் 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் இவர் வாகை சூடுவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நின்றது.
மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் இன்று நடைபெற்ற 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 37.27 வினாடிகளில் வெற்றிக் கோட்டை கடந்து இந்த ஒலிம்பிக்கின் மூன்றாவது தங்கத்தை இவர் தட்டிச் சென்றார்.
இதே தூரத்தை 37.60 வினாடிகளில் கடந்த ஜப்பான் வீரர் வெள்ளிப் பதக்கத்தையும், 37.62 வினாடிகளில் கடந்த அமெரிக்க வீரர் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.
இந்த வெற்றியுடன், தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் 9 தங்கப் பதக்கங்களை வென்றுள்ள உசேன் போல்ட், இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை படைத்த பின்லாந்து நாட்டின் ஓட்டப்பந்தய வீரர் பாவோ நுர்மி, அமெரிக்காவின் பிரபல ஓட்டப்பந்தய வீரரும், நீளம் தாண்டுதல் வீரருமான கார்ல் லிவீஸ் போன்ற பிரபல ஜாம்பவான்களின் தரவரிசையை மிக குறைந்த வயதிலும், குறுகிய காலகட்டத்திலும் எட்டிப்பிடித்து, அசுர சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கான ஒற்றையர் அரைஇறுதியில் நம்பர் ஒன் வீரர் மலேசியாவின் லீ சோங் வெய் நடப்பு சாம்பியன் சீனாவின் லின் டானை தோற்கடித்தார்.
ரியோ டி ஜெனீரோ :
ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டனில் ஆண்களுக்கான ஒற்றையர் அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் மலேசியாவின் லீ சோங் வெய் 15-21, 21-11, 22-20 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியன் சீனாவின் லின் டானை சாய்த்தார். இதன் மூலம் 2008, 2012-ம் ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருந்த லின் டானின் ‘ஹாட்ரிக்’ கனவு தகர்ந்தது.
மற்றொரு அரைஇறுதியில் உலக சாம்பியன் சீனாவின் சென் லாங் 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்செனை தோற்கடித்து இறுதிசுற்றை எட்டினார்.
ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டனில் ஆண்களுக்கான ஒற்றையர் அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் மலேசியாவின் லீ சோங் வெய் 15-21, 21-11, 22-20 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியன் சீனாவின் லின் டானை சாய்த்தார். இதன் மூலம் 2008, 2012-ம் ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருந்த லின் டானின் ‘ஹாட்ரிக்’ கனவு தகர்ந்தது.
மற்றொரு அரைஇறுதியில் உலக சாம்பியன் சீனாவின் சென் லாங் 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்செனை தோற்கடித்து இறுதிசுற்றை எட்டினார்.
சாய்னா நேவாலுக்கு நிகராக விளையாட முடியும் என்பதை பி.வி.சிந்து நிரூபித்து காட்டி விட்டார் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
இந்தியாவில் பேட்மிண்டன் அரங்கில் சாய்னா நேவால் ‘சுனாமி’ அடித்துக்கொண்டிருந்த போது, சூறாவளியாக பிரவேசித்தவர் தான் பி.வி.சிந்து. சர்வதேச போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து தனக்கு என்று ஒரு இடத்தை நிலை நிறுத்திக்கொண்டார். சாய்னா நேவாலுக்கு நிகராக தன்னாலும் விளையாட முடியும் என்பதை நிரூபித்து காட்டி விட்டார் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று புதிய அத்தியாயம் படைத்திருக்கும் சிந்து யார்? அவரது மறுபக்கம் என்ன என்பதை பார்க்கலாம்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசிக்கும் சிந்துவின் குடும்பம் இயற்கையாகவே விளையாட்டு பாரம்பரியத்தை கொண்டது. அவரது தந்தை பி.வி.ரமணா முன்னாள் சர்வதேச கைப்பந்து வீரர். கைப்பந்து போட்டிக்கு அளித்த பங்களிப்புக்காக அர்ஜூனா விருது பெற்றவர். தாயார் பி.விஜயாவும் கைப்பந்து வீராங்கனை தான்.
விஜயா, விஜயவாடாவில் பிறந்தாலும் சில ஆண்டுகள் குடும்பத்தினருடன் சென்னை தியாகராயநகரில் வசித்தார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையிலேயே விஜயா முடித்தார். தமிழ்நாடு கைப்பந்து அணிக்காக 1977 ஆண்டு முதல் 1983-ம் ஆண்டு வரை தேசிய போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார். சிந்துவின் தாத்தா பிரம்மய்யா தெலுங்கு பட அதிபர் ஆவார்.
இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் திவ்யா டாக்டர். கணவருடன் அமெரிக்காவில் குடியேறி விட்டார். 2-வது மகள் தான் பி.வி. சிந்து.
சிறு வயதில் பயிற்சிக்காக சிந்துவை உள்விளையாட்டு அரங்குக்கு அவரது பெற்றோர் அழைத்து செல்வார்கள். ஆனால் சிந்துவின் மனதில் கைப்பந்து மீது நாட்டம்வரவில்லை. அதே உள்விளையாட்டு அரங்கில் பக்கத்தில் சிலர் ஜாலியாக ஆடிக்கொண்டிருந்த பேட்மிண்டன் தான் அவரை கவர்ந்தது. அது முதல் பேட்மிண்டன் ராக்கெட்டை எடுத்து சும்மா விளையாடிக் கொண்டிருப்பார். 2001-ம் ஆண்டு ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் பட்டத்தை இந்திய வீரர் கோபிசந்த் கைப்பற்றிய போது, வெகுவாக ஈர்க்கப்பட்ட சிந்து, ‘இனி பேட்மிண்டன் தான் வாழ்க்கை’ என்ற முடிவுக்கு வந்தார்.
‘நம்மை போன்றே கைப்பந்து நட்சத்திரமாக உருவாக வேண்டும்’ என்று அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தவில்லை. மகளின் விருப்பத்திற்கே விட்டு விட்டனர். ‘நான் பேட்மிண்டன் விளையாட ஆசைப்பட்ட போது எனது மனதை மாற்றக்கூட எனது பெற்றோர் முயற்சிக்கவில்லை’ என்று சிந்துவே பெருமையாக கூறுவது உண்டு.
சிந்து பேட்மிண்டன் ஆடத் தொடங்கிய போது அவரது வயது 8½. பேட்மிண்டனில் தனி கவனம் செலுத்த கோபிசந்தின் பயிற்சி அகாடமியில் சேர்த்து விட்டனர். அப்போது செகந்திரபாத்தில் வசித்ததால் பயிற்சி மையத்திற்கு வருவதற்கு தினமும் 56 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டி இருந்தது. சிந்துவின் அலைச்சலைப் பார்த்து பரிதாபப்பட்ட அவரது பெற்றோர் பயிற்சி மைய பகுதிக்கு தங்கள் வீட்டை மாற்றினர்.
கோபிசந்தின் பட்டறையில், பட்டை தீட்டப்பட்ட சிந்து படிப்படியாக பேட்மிண்டன் தொழில்நுட்பங்களை கற்றார். பள்ளி, ஜூனியர் அளவிலான போட்டிகளில் பங்கெடுத்தார்.
சிந்துவின் முன்மாதிரி, பிடித்த பேட்மிண்டன் வீரர் எல்லாமே கோபிசந்த் தான். அவரது வார்த்தெடுப்பில் கச்சிதமான ஒரு பேட்மிண்டன் மங்கையாக 2011-ம் ஆண்டில் வெளி உலகுக்கு அறிமுகம் ஆனார். 2011-ம் ஆண்டு ஆசிய ஜூனியர் போட்டியில் வெண்கலமும், காமன்வெல்த் இளையோர் போட்டியில் தங்கமும் வென்றார். ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டிகளிலும் பதக்கத்தை பெற்றார்.
என்றாலும் 2013-ம் ஆண்டு சீனாவில் நடந்த உலக பேட்மிண்டனில் வெண்கலத்தை வென்ற போது தான் விளையாட்டு ஆர்வலர்கள், ரசிகர்களின் பார்வை ஒட்டுமொத்தமாக சிந்துவின் பக்கம் திரும்பியது. உலக பேட்மிண்டனில் முத்திரை பதித்த முதல் இந்திய வீராங்கனையாக மின்னினார்.
2014-ம் ஆண்டு மீண்டும் உலக பேட்மிண்டனில் வாகை சூடி, இந்த போட்டியில் இரண்டு பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற மகத்தான சாதனையை மேலும் அழுத்தமாக பதிய வைத்தார். இந்தோனேஷிய போட்டி, மலேசிய மாஸ்டர்ஸ், மக்காவ் ஓபன் ஆகிய சர்வதேச தொடர்களிலும் பட்டம் வென்று அசத்தினார்.
இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக இப்போது ரியோ ஒலிம்பிக் பதக்கம் அமைந்திருக்கிறது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று புகழின் உச்சத்துக்கே சென்று விட்ட சிந்து, தனது குருநாதர் கோபிசந்தின் கனவையும் நனவாக்கி இருக்கிறார்.
தன் உடலை உறுதியாக வைத்துக்கொள்வதற்காக இனிப்புகளையும், சாக்லெட்டுகளையும் சிந்து தொடுவதே இல்லை. காபி குடிக்கும் பழக்கமும் கிடையாது. ஐதராபாத் பிரியாணி என்றால் கொள்ளை பிரியம்.
வெளிநாடு போட்டிகளில் விளையாடும் போது நேரம் கிடைத்தால் ‘ஷாப்பிங்’ சென்று ஏதாவது பரிசு வாங்கி வருவது சிந்துவின் வழக்கம். ஆனால் இந்த முறை அதை எல்லாம் விட உயர்ந்த பரிசாக ஒலிம்பிக்கில் பதக்கத்தை வாங்கி விட்டார். ‘ஒரு பெற்றோருக்கு இதை விட என்ன பெருமை வேண்டும்’ என்று நெகிழ்ச்சியில் வினவுகிறார், அவரது தந்தை ரமணா.
ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று புதிய அத்தியாயம் படைத்திருக்கும் சிந்து யார்? அவரது மறுபக்கம் என்ன என்பதை பார்க்கலாம்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசிக்கும் சிந்துவின் குடும்பம் இயற்கையாகவே விளையாட்டு பாரம்பரியத்தை கொண்டது. அவரது தந்தை பி.வி.ரமணா முன்னாள் சர்வதேச கைப்பந்து வீரர். கைப்பந்து போட்டிக்கு அளித்த பங்களிப்புக்காக அர்ஜூனா விருது பெற்றவர். தாயார் பி.விஜயாவும் கைப்பந்து வீராங்கனை தான்.
விஜயா, விஜயவாடாவில் பிறந்தாலும் சில ஆண்டுகள் குடும்பத்தினருடன் சென்னை தியாகராயநகரில் வசித்தார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையிலேயே விஜயா முடித்தார். தமிழ்நாடு கைப்பந்து அணிக்காக 1977 ஆண்டு முதல் 1983-ம் ஆண்டு வரை தேசிய போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார். சிந்துவின் தாத்தா பிரம்மய்யா தெலுங்கு பட அதிபர் ஆவார்.
இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் திவ்யா டாக்டர். கணவருடன் அமெரிக்காவில் குடியேறி விட்டார். 2-வது மகள் தான் பி.வி. சிந்து.
சிறு வயதில் பயிற்சிக்காக சிந்துவை உள்விளையாட்டு அரங்குக்கு அவரது பெற்றோர் அழைத்து செல்வார்கள். ஆனால் சிந்துவின் மனதில் கைப்பந்து மீது நாட்டம்வரவில்லை. அதே உள்விளையாட்டு அரங்கில் பக்கத்தில் சிலர் ஜாலியாக ஆடிக்கொண்டிருந்த பேட்மிண்டன் தான் அவரை கவர்ந்தது. அது முதல் பேட்மிண்டன் ராக்கெட்டை எடுத்து சும்மா விளையாடிக் கொண்டிருப்பார். 2001-ம் ஆண்டு ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் பட்டத்தை இந்திய வீரர் கோபிசந்த் கைப்பற்றிய போது, வெகுவாக ஈர்க்கப்பட்ட சிந்து, ‘இனி பேட்மிண்டன் தான் வாழ்க்கை’ என்ற முடிவுக்கு வந்தார்.
‘நம்மை போன்றே கைப்பந்து நட்சத்திரமாக உருவாக வேண்டும்’ என்று அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தவில்லை. மகளின் விருப்பத்திற்கே விட்டு விட்டனர். ‘நான் பேட்மிண்டன் விளையாட ஆசைப்பட்ட போது எனது மனதை மாற்றக்கூட எனது பெற்றோர் முயற்சிக்கவில்லை’ என்று சிந்துவே பெருமையாக கூறுவது உண்டு.
சிந்து பேட்மிண்டன் ஆடத் தொடங்கிய போது அவரது வயது 8½. பேட்மிண்டனில் தனி கவனம் செலுத்த கோபிசந்தின் பயிற்சி அகாடமியில் சேர்த்து விட்டனர். அப்போது செகந்திரபாத்தில் வசித்ததால் பயிற்சி மையத்திற்கு வருவதற்கு தினமும் 56 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டி இருந்தது. சிந்துவின் அலைச்சலைப் பார்த்து பரிதாபப்பட்ட அவரது பெற்றோர் பயிற்சி மைய பகுதிக்கு தங்கள் வீட்டை மாற்றினர்.
கோபிசந்தின் பட்டறையில், பட்டை தீட்டப்பட்ட சிந்து படிப்படியாக பேட்மிண்டன் தொழில்நுட்பங்களை கற்றார். பள்ளி, ஜூனியர் அளவிலான போட்டிகளில் பங்கெடுத்தார்.
சிந்துவின் முன்மாதிரி, பிடித்த பேட்மிண்டன் வீரர் எல்லாமே கோபிசந்த் தான். அவரது வார்த்தெடுப்பில் கச்சிதமான ஒரு பேட்மிண்டன் மங்கையாக 2011-ம் ஆண்டில் வெளி உலகுக்கு அறிமுகம் ஆனார். 2011-ம் ஆண்டு ஆசிய ஜூனியர் போட்டியில் வெண்கலமும், காமன்வெல்த் இளையோர் போட்டியில் தங்கமும் வென்றார். ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டிகளிலும் பதக்கத்தை பெற்றார்.
என்றாலும் 2013-ம் ஆண்டு சீனாவில் நடந்த உலக பேட்மிண்டனில் வெண்கலத்தை வென்ற போது தான் விளையாட்டு ஆர்வலர்கள், ரசிகர்களின் பார்வை ஒட்டுமொத்தமாக சிந்துவின் பக்கம் திரும்பியது. உலக பேட்மிண்டனில் முத்திரை பதித்த முதல் இந்திய வீராங்கனையாக மின்னினார்.
2014-ம் ஆண்டு மீண்டும் உலக பேட்மிண்டனில் வாகை சூடி, இந்த போட்டியில் இரண்டு பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற மகத்தான சாதனையை மேலும் அழுத்தமாக பதிய வைத்தார். இந்தோனேஷிய போட்டி, மலேசிய மாஸ்டர்ஸ், மக்காவ் ஓபன் ஆகிய சர்வதேச தொடர்களிலும் பட்டம் வென்று அசத்தினார்.
இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக இப்போது ரியோ ஒலிம்பிக் பதக்கம் அமைந்திருக்கிறது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று புகழின் உச்சத்துக்கே சென்று விட்ட சிந்து, தனது குருநாதர் கோபிசந்தின் கனவையும் நனவாக்கி இருக்கிறார்.
தன் உடலை உறுதியாக வைத்துக்கொள்வதற்காக இனிப்புகளையும், சாக்லெட்டுகளையும் சிந்து தொடுவதே இல்லை. காபி குடிக்கும் பழக்கமும் கிடையாது. ஐதராபாத் பிரியாணி என்றால் கொள்ளை பிரியம்.
வெளிநாடு போட்டிகளில் விளையாடும் போது நேரம் கிடைத்தால் ‘ஷாப்பிங்’ சென்று ஏதாவது பரிசு வாங்கி வருவது சிந்துவின் வழக்கம். ஆனால் இந்த முறை அதை எல்லாம் விட உயர்ந்த பரிசாக ஒலிம்பிக்கில் பதக்கத்தை வாங்கி விட்டார். ‘ஒரு பெற்றோருக்கு இதை விட என்ன பெருமை வேண்டும்’ என்று நெகிழ்ச்சியில் வினவுகிறார், அவரது தந்தை ரமணா.
நான் குற்றவாளி என்றால், என்னை தூக்கிலிடுங்கள், அதற்கு தயாராகவே உள்ளேன் என்று இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
ரியோ:
இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் 2015 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் (74 கிலோ) வெண்கலம் வென்று ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார்.
கடந்த ஜூன் 25-ல் இவருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், தடைசெய்யப்பட்ட 'மெட்டாடியனன்' என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது உறுதியானது. இதனால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் நர்சிங் யாதவ் கலந்து கொள்வது கேள்விக்குறியானது.
இதற்கிடையே தேசிய ஊக்கமருந்து சோதனை அமைப்பின் ஆணையம் நர்சிங் யாதவ் பிரச்சனை குறித்து விசாரணை நடத்தி ‘‘நரசிங் யாதவ் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளலாம். நரசிங் மீது எந்த தவறும் இல்லை. விடுதியில் வழங்கப்பட்ட உணவில்தான் ஊக்கமருந்து கலந்துள்ளது. அவர் தெரியாமலேயே இதை பயன்படுத்தியுள்ளார்’’ என்று தெரிவித்திருந்தது.
இந்தியாவின் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (NADA) நர்சிங் யாதவிற்கு வழங்கிய தடையில்லா சான்றிதழை எதிர்த்து உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (WADA) முறையீடு செய்தது.
இதனையடுத்து, உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் முறையீட்டு மனுவை விசாரித்த சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் நர்சிங் யாதவ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதித்துள்ளது. மேலும் நான்கு ஆண்டுகளுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கும் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், நான் குற்றவாளி என்றால், என்னை தூக்கிலிடுங்கள், அதற்கு தயாராகவே உள்ளேன் என்று இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நர்சிங் கூறியதாவது:
என்னுடைய பெயர் களங்கப்படுத்தப்பட்டுள்ளது. இது எனக்கு மட்டுமல்ல, இந்த தடை இந்தியா மீதான கறை ஆகும்.
நீதியுடன் திரும்பாவிட்டால், என்னை தூக்கில் தொங்க அனுமதியுங்கள், இதனை நான் உயர்மட்ட நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்வேன்.
இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்த பிரதமர் மோடியிடம் முறையிடுவேன். உண்மை வெளிவர வேண்டும். தேவையென்றால் சிபிஐ விசாரணை நடத்துங்கள். நான் குற்றவாளி என்றால் என்னை தூக்கில் இடுங்கள். அதற்கு நான் தயாராகவே உள்ளேன்.
எனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், விளையாட்டின் எதிர்காலம் இருண்டதாகி விடும். விளையாட்டில் இணைந்து இந்தியாவிற்காக பதக்கம் வாங்க வேண்டும் என்று நிறைய பேர் உற்சாகப் படுத்தப்படமாட்டார்கள். நம்மை நாமே குற்றம்சாட்டிக் கொள்ள வேண்டி இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் 2015 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் (74 கிலோ) வெண்கலம் வென்று ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார்.
கடந்த ஜூன் 25-ல் இவருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், தடைசெய்யப்பட்ட 'மெட்டாடியனன்' என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது உறுதியானது. இதனால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் நர்சிங் யாதவ் கலந்து கொள்வது கேள்விக்குறியானது.
இதற்கிடையே தேசிய ஊக்கமருந்து சோதனை அமைப்பின் ஆணையம் நர்சிங் யாதவ் பிரச்சனை குறித்து விசாரணை நடத்தி ‘‘நரசிங் யாதவ் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளலாம். நரசிங் மீது எந்த தவறும் இல்லை. விடுதியில் வழங்கப்பட்ட உணவில்தான் ஊக்கமருந்து கலந்துள்ளது. அவர் தெரியாமலேயே இதை பயன்படுத்தியுள்ளார்’’ என்று தெரிவித்திருந்தது.
இந்தியாவின் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (NADA) நர்சிங் யாதவிற்கு வழங்கிய தடையில்லா சான்றிதழை எதிர்த்து உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (WADA) முறையீடு செய்தது.
இதனையடுத்து, உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் முறையீட்டு மனுவை விசாரித்த சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் நர்சிங் யாதவ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதித்துள்ளது. மேலும் நான்கு ஆண்டுகளுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கும் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், நான் குற்றவாளி என்றால், என்னை தூக்கிலிடுங்கள், அதற்கு தயாராகவே உள்ளேன் என்று இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நர்சிங் கூறியதாவது:
என்னுடைய பெயர் களங்கப்படுத்தப்பட்டுள்ளது. இது எனக்கு மட்டுமல்ல, இந்த தடை இந்தியா மீதான கறை ஆகும்.
நீதியுடன் திரும்பாவிட்டால், என்னை தூக்கில் தொங்க அனுமதியுங்கள், இதனை நான் உயர்மட்ட நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்வேன்.
இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்த பிரதமர் மோடியிடம் முறையிடுவேன். உண்மை வெளிவர வேண்டும். தேவையென்றால் சிபிஐ விசாரணை நடத்துங்கள். நான் குற்றவாளி என்றால் என்னை தூக்கில் இடுங்கள். அதற்கு நான் தயாராகவே உள்ளேன்.
எனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், விளையாட்டின் எதிர்காலம் இருண்டதாகி விடும். விளையாட்டில் இணைந்து இந்தியாவிற்காக பதக்கம் வாங்க வேண்டும் என்று நிறைய பேர் உற்சாகப் படுத்தப்படமாட்டார்கள். நம்மை நாமே குற்றம்சாட்டிக் கொள்ள வேண்டி இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாக பி.வி.சிந்து கூறியுள்ளார்.
ரியோ:
ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ஒலிம்பிக் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தவண்ணம் உள்ளன.

இதுகுறித்து பேட்டியளித்த பி.வி.சிந்து, ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது என கூறியுள்ளார்.
மேலும், ‘ஒலிம்பிக் இறுத்போட்டியில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி கடைசிவரை போராடினேன். இதில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது பெருமையையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது. தங்கம் வென்ற மெரினுக்கு வாழ்த்துக்கள். இது அவருடைய நாளாக அமைந்துள்ளது.

பதக்கம் வெல்லும் நோக்கத்துடனே ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றேன். தற்போது அது நிறைவேறியுள்ளது. இனி என்னுடைய பெயருக்கு பின்னால் ஒலிம்பிக் மெடலிஸ்ட் என்று சேர்த்து கோள்வேன்.’
ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாக்சிக்கு வாழ்த்துக்கள். மற்ற போட்டிகளில் சில இந்திய வீரர்கள் சில புள்ளிகள் வித்தியாசத்திலேயே வெளியேறி உள்ளனர். அவர்கள் சிறப்பாகவே விளையாடினார்கள். சில நேரங்களில் அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விடுகிறது.
இந்த வெற்றியை எனது பயிற்சியாளர் மற்றும் என்னுடைய பெற்றோருக்கு சமர்ப்பிக்கிறேன். எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீராங்கனை ஒருவர் வெள்ளிப்பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ஒலிம்பிக் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தவண்ணம் உள்ளன.

இதுகுறித்து பேட்டியளித்த பி.வி.சிந்து, ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது என கூறியுள்ளார்.
மேலும், ‘ஒலிம்பிக் இறுத்போட்டியில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி கடைசிவரை போராடினேன். இதில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது பெருமையையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது. தங்கம் வென்ற மெரினுக்கு வாழ்த்துக்கள். இது அவருடைய நாளாக அமைந்துள்ளது.

பதக்கம் வெல்லும் நோக்கத்துடனே ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றேன். தற்போது அது நிறைவேறியுள்ளது. இனி என்னுடைய பெயருக்கு பின்னால் ஒலிம்பிக் மெடலிஸ்ட் என்று சேர்த்து கோள்வேன்.’
ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாக்சிக்கு வாழ்த்துக்கள். மற்ற போட்டிகளில் சில இந்திய வீரர்கள் சில புள்ளிகள் வித்தியாசத்திலேயே வெளியேறி உள்ளனர். அவர்கள் சிறப்பாகவே விளையாடினார்கள். சில நேரங்களில் அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விடுகிறது.
இந்த வெற்றியை எனது பயிற்சியாளர் மற்றும் என்னுடைய பெற்றோருக்கு சமர்ப்பிக்கிறேன். எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீராங்கனை ஒருவர் வெள்ளிப்பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த பி.வி.சிந்துவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தவண்ணம் உள்ளன. அவரது ஆட்டத்திறனைப் பாராட்டி சமூக வலைத்தளத்தில் ஏராளமானோர் கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.
‘சிறப்பாக விளையாடி வெள்ளி வென்ற சிந்துவுக்கு வாழ்த்துக்கள்’ என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
‘வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துவுக்கு வாழ்த்துக்கள். மிகவும் சிறப்பாக போராடினீர்கள். ரியோ ஒலிம்பிக்கில் நீங்கள் படைத்த இந்த சாதனை வரலாற்றில் இடம்பெற்றதுடன், பல ஆண்டுகள் நினைவில் கொள்ளப்பட வேண்டும்’ என பிரதமர் மோடி டுவிட் செய்துள்ளார்.
பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த், மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, ராஜ்நாத் சிங், நிர்மலா சீத்தாராமன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் கருணாநிதி, கிரிக்கெட் பிரபலங்கள் சச்சின், அஷ்வின், திரையுலக பிரபலங்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மோகன் லால், தமன்னா, ஆலியா பட், ரசூல்பூக்குட்டி, வித்யாபாலன், வெங்கட் பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிந்துவின் சாதனையை கவுரவிக்கும் வகையில் அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார். இதுதவிர பேட்மிண்டன் சம்மௌனம் 50 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளது. பயிற்சியாளருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என கூறியுள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தவண்ணம் உள்ளன. அவரது ஆட்டத்திறனைப் பாராட்டி சமூக வலைத்தளத்தில் ஏராளமானோர் கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.
‘சிறப்பாக விளையாடி வெள்ளி வென்ற சிந்துவுக்கு வாழ்த்துக்கள்’ என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
‘வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துவுக்கு வாழ்த்துக்கள். மிகவும் சிறப்பாக போராடினீர்கள். ரியோ ஒலிம்பிக்கில் நீங்கள் படைத்த இந்த சாதனை வரலாற்றில் இடம்பெற்றதுடன், பல ஆண்டுகள் நினைவில் கொள்ளப்பட வேண்டும்’ என பிரதமர் மோடி டுவிட் செய்துள்ளார்.
பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த், மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, ராஜ்நாத் சிங், நிர்மலா சீத்தாராமன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் கருணாநிதி, கிரிக்கெட் பிரபலங்கள் சச்சின், அஷ்வின், திரையுலக பிரபலங்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மோகன் லால், தமன்னா, ஆலியா பட், ரசூல்பூக்குட்டி, வித்யாபாலன், வெங்கட் பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிந்துவின் சாதனையை கவுரவிக்கும் வகையில் அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார். இதுதவிர பேட்மிண்டன் சம்மௌனம் 50 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளது. பயிற்சியாளருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என கூறியுள்ளது.
ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை கடும் போராட்டத்திற்குப்பின் 1-2 என தோல்வியடைந்து தங்க பதக்கத்தை தவற வி்ட்டார்.
இந்தியாவே எதிர்பார்த்த ரியோ ஒலிம்பிக்கின் பெண்களுக்கான பேட்மிண்டன் இறுதிப் போட்டி இன்றிரவு 7.40 மணியளவில் தொடங்கியது. இதில் இந்தியாவின் பி.வி. சிந்து, ஸ்பெயின் நாட்டின் மரின் கரோலினாவை எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலே ஸ்பெயின் வீராங்கனை கரோலினா அபாரமாக விளையாடினார். அவருக்கு இணையாக சிந்துவும் விளையாடினார். ஒரு கட்டத்தில் சிந்து 4-8 என பின்தங்கியிருந்தார். அதன்பின் சுதாரித்து விளையாடி முன்னணி பெற்றார். பரபரப்பாக சென்ற முதல் செட்டை 21-19 எனக் கைப்பற்றினார் சிந்து.
2-வது செட்டில் கரோலினா மிகவும் சிறப்பாக விளையாடினார். ஒருகட்டத்தில் பி.வி. சிந்து 4-12 என பின்தங்கினார். அதன்பின்னர் கடுமையாகப் போராடியும் முன்னிலை பெற முடியவில்லை. இறுதியில் அந்த செட்டை 12-21 என இழந்தார்.
இதையடுத்து தங்கப்பதக்க்ததை நிர்ணயிக்கும் 3-வது செட்டிலும் ஸ்பெயின் வீராங்கனை அதிக்கம் செலுத்தினார். சிந்து பதற்றத்துடன் விளையாட, மரின் கரோலினா மிகவும் சகஜமான நிலையுடன் காணப்பட்டார். கரோலினா 6-1 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் சிந்து ஒன்றிரண்டு பாயிண்டுகள் பெற 9-4 என கரோலின் முன்னேறினார்.
அதன்பின் சிந்து எழுச்சி பெற்று புள்ளிகள் பெற, 10-10 சமநிலை அடைந்தார். பின்னர் கரோலின் தொடர்ந்து 4 பாயிண்டுகள் பெற்று ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.
அதன்பின் இருவரும் தலா ஒரு பாயிண்டுகள் பெற 15-11 என ஸ்பெயின் வீராங்கனை முன்னிலையில் இருந்தார். அதன்பின் பி.வி. சிந்துவால் முன்னிலை பெற முடியவில்லை. ஆகவே, 3-வது செட்டை 15-21 என இழந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
கரோலின் தங்கப் பதக்கம் வென்றதோடு ஒலிம்பிக் பேட்மிண்டனில் முதல் தங்கப் பதக்கம் வென்ற ஐரோப்பிய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
தொடக்கம் முதலே ஸ்பெயின் வீராங்கனை கரோலினா அபாரமாக விளையாடினார். அவருக்கு இணையாக சிந்துவும் விளையாடினார். ஒரு கட்டத்தில் சிந்து 4-8 என பின்தங்கியிருந்தார். அதன்பின் சுதாரித்து விளையாடி முன்னணி பெற்றார். பரபரப்பாக சென்ற முதல் செட்டை 21-19 எனக் கைப்பற்றினார் சிந்து.
2-வது செட்டில் கரோலினா மிகவும் சிறப்பாக விளையாடினார். ஒருகட்டத்தில் பி.வி. சிந்து 4-12 என பின்தங்கினார். அதன்பின்னர் கடுமையாகப் போராடியும் முன்னிலை பெற முடியவில்லை. இறுதியில் அந்த செட்டை 12-21 என இழந்தார்.
இதையடுத்து தங்கப்பதக்க்ததை நிர்ணயிக்கும் 3-வது செட்டிலும் ஸ்பெயின் வீராங்கனை அதிக்கம் செலுத்தினார். சிந்து பதற்றத்துடன் விளையாட, மரின் கரோலினா மிகவும் சகஜமான நிலையுடன் காணப்பட்டார். கரோலினா 6-1 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் சிந்து ஒன்றிரண்டு பாயிண்டுகள் பெற 9-4 என கரோலின் முன்னேறினார்.
அதன்பின் சிந்து எழுச்சி பெற்று புள்ளிகள் பெற, 10-10 சமநிலை அடைந்தார். பின்னர் கரோலின் தொடர்ந்து 4 பாயிண்டுகள் பெற்று ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.
அதன்பின் இருவரும் தலா ஒரு பாயிண்டுகள் பெற 15-11 என ஸ்பெயின் வீராங்கனை முன்னிலையில் இருந்தார். அதன்பின் பி.வி. சிந்துவால் முன்னிலை பெற முடியவில்லை. ஆகவே, 3-வது செட்டை 15-21 என இழந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
கரோலின் தங்கப் பதக்கம் வென்றதோடு ஒலிம்பிக் பேட்மிண்டனில் முதல் தங்கப் பதக்கம் வென்ற ஐரோப்பிய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
உலகின் அதிவேக ஒட்டப்பந்தய வீரராக திகழும் உசைன் போல்ட், தன்னை மிகச்சிறந்த வீரர்கள் வரிசையில் பீலே மற்றும் மொகமது அலிக்கு இணையாக வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
உலகின் அதிகவேக ஓட்டப்பந்தய வீரராக ஜமைக்காவின் உசைன் போல்ட் திகழ்ந்து வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு பீஜிங் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் இருந்து இதுவரை அவரை 100 மீ, 200 மீ மற்றும் 4X100 மீட்டர் ஓட்டத்தில் வென்றது கிடையாது.
இந்த மூன்று பிரிவிலும் (100 மீ, 200 மீ மற்றும் 4X100 மீட்டர்) 2008-ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற போட்டியில் தங்கம் வென்றார். அதன்பின் 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்றார். தற்போது நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக்கில் 100 மீ மற்றும் 200 மீ பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார். 4X100 மீட்டர் தூரம் மட்டுமே மீதமுள்ளது. இதிலும் தங்கம் வென்றுவிட வாய்ப்பு உள்ளது.
இதன்மூலம் தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்கில் மூன்று ஒலிம்பிக்கிலும் தங்க பதக்கம் வாங்கிய ஒரே வீரர் எனற சரித்திர சாதனை படைக்க இருக்கிறார்.
இவர், விளையாட்டில் வாழ்நாள் சாதனையாளராக விளங்கும் மொகமது அலி மற்றும் பீலே ஆகியோருடன் தன்னை சமநிலை வரிசையில் வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதுகுறித்து உசைன் போல்ட் கூறுகையில் ‘‘சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். பீலே மற்றும் மொகமது அலி போன்ற மிகச்சிறந்த வீரர்களின் வரிசையில் இருக்கவேண்டும். பத்திரிகைகள் எப்படி எழுதுகின்றன என்பதை பார்க்க நாளை வரை (4X100 மீட்டர் போட்டி நடைபெறும் வரை) காத்திருக்கிறேன்.
இந்த ஒரு நிலைக்காக நான் என்னுடைய வாழ்நாள் முழுவதும் உழைத்துள்ளேன். விளையாட்டில் மிகவும் சிறந்த வீரர்களில் ஒருவர் நான் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன். என்னுடைய நோக்கமும் இதுதான்’’ என்றார்.
இந்த மூன்று பிரிவிலும் (100 மீ, 200 மீ மற்றும் 4X100 மீட்டர்) 2008-ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற போட்டியில் தங்கம் வென்றார். அதன்பின் 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்றார். தற்போது நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக்கில் 100 மீ மற்றும் 200 மீ பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார். 4X100 மீட்டர் தூரம் மட்டுமே மீதமுள்ளது. இதிலும் தங்கம் வென்றுவிட வாய்ப்பு உள்ளது.
இதன்மூலம் தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்கில் மூன்று ஒலிம்பிக்கிலும் தங்க பதக்கம் வாங்கிய ஒரே வீரர் எனற சரித்திர சாதனை படைக்க இருக்கிறார்.
இவர், விளையாட்டில் வாழ்நாள் சாதனையாளராக விளங்கும் மொகமது அலி மற்றும் பீலே ஆகியோருடன் தன்னை சமநிலை வரிசையில் வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதுகுறித்து உசைன் போல்ட் கூறுகையில் ‘‘சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். பீலே மற்றும் மொகமது அலி போன்ற மிகச்சிறந்த வீரர்களின் வரிசையில் இருக்கவேண்டும். பத்திரிகைகள் எப்படி எழுதுகின்றன என்பதை பார்க்க நாளை வரை (4X100 மீட்டர் போட்டி நடைபெறும் வரை) காத்திருக்கிறேன்.
இந்த ஒரு நிலைக்காக நான் என்னுடைய வாழ்நாள் முழுவதும் உழைத்துள்ளேன். விளையாட்டில் மிகவும் சிறந்த வீரர்களில் ஒருவர் நான் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன். என்னுடைய நோக்கமும் இதுதான்’’ என்றார்.
ஒலிம்பிக் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இந்திய ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து கூகுள் தேடலில் முதலிடம் பிடித்துள்ளார்.
கவுகாத்தி:
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் போட்டி தொடர்பான செய்திகள், வீரர்களின் சாதனைகள், அவர்களின் சுய விவரம் குறித்த தேடலுக்கு கூகுள் முன்னிலை வகிக்கிறது.
இந்தியாவின் பதக்க கணக்கை சாக்சி மாலிக் தொடங்கிய நாளில் இருந்து இந்தியாவில் அதிகம் நபர் அவரது தகவலை கூகுளில் தேடியுள்ளனர். அதன்பின்னர் பி.வி. சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததால் கூகுள் தேடலில் அவர் முன்னிலை பெறத் தொடங்கினார்.
இந்நிலையில், கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மூன்று நாட்களில் கூகுளில் தேடப்பட்ட இந்திய வீரர்- வீராங்கனைகளில் பி.வி. சிந்து முதலிடத்தையும், சாக்சி மாலிக் இரண்டாம் இடத்தையும் பிடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களைத் தொடர்ந்து கிதாம்பி ஸ்ரீகாந்த், தீபா கர்மாகர், சானியா மிர்சா, சாய்னா நேவால், வினேஷ் போகத், லலிதா பாபர், விகாஸ் கிரிஷன் யாதவ், நர்சிங் யாதவ் ஆகியோர் உள்ளனர்.
கடந்த 7 நாட்களில் ஒலிம்பிக் தொடர்பான தேடலில் உலக ட்ரெண்டிங்கில் இந்தியா தற்போது 11-வது இடத்தில் உள்ளது. அதேபோல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட வெளிநாட்டு வீரர்களில் உசைன் போல்ட் முதலிடத்தில் உள்ளார்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் போட்டி தொடர்பான செய்திகள், வீரர்களின் சாதனைகள், அவர்களின் சுய விவரம் குறித்த தேடலுக்கு கூகுள் முன்னிலை வகிக்கிறது.
இந்தியாவின் பதக்க கணக்கை சாக்சி மாலிக் தொடங்கிய நாளில் இருந்து இந்தியாவில் அதிகம் நபர் அவரது தகவலை கூகுளில் தேடியுள்ளனர். அதன்பின்னர் பி.வி. சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததால் கூகுள் தேடலில் அவர் முன்னிலை பெறத் தொடங்கினார்.
இந்நிலையில், கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மூன்று நாட்களில் கூகுளில் தேடப்பட்ட இந்திய வீரர்- வீராங்கனைகளில் பி.வி. சிந்து முதலிடத்தையும், சாக்சி மாலிக் இரண்டாம் இடத்தையும் பிடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களைத் தொடர்ந்து கிதாம்பி ஸ்ரீகாந்த், தீபா கர்மாகர், சானியா மிர்சா, சாய்னா நேவால், வினேஷ் போகத், லலிதா பாபர், விகாஸ் கிரிஷன் யாதவ், நர்சிங் யாதவ் ஆகியோர் உள்ளனர்.
கடந்த 7 நாட்களில் ஒலிம்பிக் தொடர்பான தேடலில் உலக ட்ரெண்டிங்கில் இந்தியா தற்போது 11-வது இடத்தில் உள்ளது. அதேபோல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட வெளிநாட்டு வீரர்களில் உசைன் போல்ட் முதலிடத்தில் உள்ளார்.
தென்ஆப்பரிக்கா கிரிக்கெட் அணிக்காக விளையாடிய முன்னாள் வீராங்கனை சன்னெட்டே வில்ஜோன் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் அணியில் கடந்த 2000-ம் ஆண்டு இடம் பிடித்தவர் சன்னெட்டே வில்ஜோன். இவர் 2002-ம் ஆண்டு வரை 17 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார்.
சிறந்த ஆல் ரவுண்டரான இவர் 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்டில் விளையாடியுள்ளார். முதல் இன்னிங்சில் 17 ரன்னும், 2-வது இன்னிங்சில் 71 ரன்னும் சேர்த்தார்.
தென்ஆப்பிரிக்கா அணிக்காக ஒரு டெஸ்ட் மற்றும் 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பின்னர், கிரிக்கெட்டிற்கு முழுக்கு போட்டுவிட்டு தடகளத்தில் ஆர்வம் காட்டினார். ஈட்டி எறிதல் போட்டியில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டவர், தென்ஆப்பிரிக்காவின் முன்னணி வீராங்கனையாக திகழ்ந்தார்.
லண்டனில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் நான்காவது இடம்பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
ஆனால், தற்போது ரியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 64.92 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். குரோசியா வீராங்கனை 66.18 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் கிரிக்கெட்டில் இருந்து தடகளத்திற்கு திரும்பி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெயரை சன்னெட்டே வில்ஜோன் பெற்றுள்ளார்.
சிறந்த ஆல் ரவுண்டரான இவர் 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்டில் விளையாடியுள்ளார். முதல் இன்னிங்சில் 17 ரன்னும், 2-வது இன்னிங்சில் 71 ரன்னும் சேர்த்தார்.
தென்ஆப்பிரிக்கா அணிக்காக ஒரு டெஸ்ட் மற்றும் 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பின்னர், கிரிக்கெட்டிற்கு முழுக்கு போட்டுவிட்டு தடகளத்தில் ஆர்வம் காட்டினார். ஈட்டி எறிதல் போட்டியில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டவர், தென்ஆப்பிரிக்காவின் முன்னணி வீராங்கனையாக திகழ்ந்தார்.
லண்டனில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் நான்காவது இடம்பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
ஆனால், தற்போது ரியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 64.92 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். குரோசியா வீராங்கனை 66.18 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் கிரிக்கெட்டில் இருந்து தடகளத்திற்கு திரும்பி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெயரை சன்னெட்டே வில்ஜோன் பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்துவின் வெற்றியையடுத்து தன்னை டுவிட்டரில் கேலி செய்த ரசிகருக்கு சாய்னா நறுக்கென பதிலளித்து மன்னிப்பு கேட்க வைத்தார்.
ஐதராபாத்:
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதனையடுத்து டுவிட்டரில் அவரை பாராட்டி ரசிகர்கள் செய்திகளை பதிவிட்டு வந்தனர். அதேசமயம் ரசிகர் ஒருவர், தோல்வியடைந்த நட்சத்திர வீராங்கனை சாய்னாவை கேலி செய்து டுவிட் செய்தார்.
அவர் தனது டுவிட்டரில் “டியர் சாய்னா.. உங்களுடைய பேக்கை மூட்டை கட்டுங்கள்.. சிறப்பான ஒருவரை எப்படி வீழ்த்துவது என்பதை தெரிந்த ஒருவரை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு மனதில் ஆழ்ந்து பதியும்படியான ஒருபதிலை கொடுத்த சாய்னா, “கண்டிப்பாக நன்றி... சிந்து உண்மையாகவே சிறப்பாக விளையாடினார்... இந்தியா சிறப்பாக செயல்படுகிறது,” என்றார்.
இதனையடுத்து தவறை உணர்ந்துக் கொண்ட அந்த ரசிகர், “உங்களை காயப்படுத்தியதற்கு மன்னித்து விடுங்கள்... சரியாக விளையாடவில்லை என்ற அர்த்தத்தில் நான் இதனை குறிப்பிடவில்லை. நான் இப்போதும் உங்களுடைய விளையாட்டை விரும்புகின்றேன்... நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன், “ என்றார்.
இதற்கு பதில் கூறிய சாய்னா, “ஒன்றும் பிரச்சனை இல்லை நண்பா, உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்,” என்று குறிப்பிட்டார்.
இதனையடுத்து அந்த ரசிகருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது, ஆனால், அவரோ, தன்னுடைய மன்னிப்பை சாய்னா ஏற்றுக் கொண்டதால், யாருக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று டுவிட்டரில் தெரிவித்துவிட்டார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதனையடுத்து டுவிட்டரில் அவரை பாராட்டி ரசிகர்கள் செய்திகளை பதிவிட்டு வந்தனர். அதேசமயம் ரசிகர் ஒருவர், தோல்வியடைந்த நட்சத்திர வீராங்கனை சாய்னாவை கேலி செய்து டுவிட் செய்தார்.
அவர் தனது டுவிட்டரில் “டியர் சாய்னா.. உங்களுடைய பேக்கை மூட்டை கட்டுங்கள்.. சிறப்பான ஒருவரை எப்படி வீழ்த்துவது என்பதை தெரிந்த ஒருவரை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு மனதில் ஆழ்ந்து பதியும்படியான ஒருபதிலை கொடுத்த சாய்னா, “கண்டிப்பாக நன்றி... சிந்து உண்மையாகவே சிறப்பாக விளையாடினார்... இந்தியா சிறப்பாக செயல்படுகிறது,” என்றார்.
இதனையடுத்து தவறை உணர்ந்துக் கொண்ட அந்த ரசிகர், “உங்களை காயப்படுத்தியதற்கு மன்னித்து விடுங்கள்... சரியாக விளையாடவில்லை என்ற அர்த்தத்தில் நான் இதனை குறிப்பிடவில்லை. நான் இப்போதும் உங்களுடைய விளையாட்டை விரும்புகின்றேன்... நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன், “ என்றார்.
இதற்கு பதில் கூறிய சாய்னா, “ஒன்றும் பிரச்சனை இல்லை நண்பா, உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்,” என்று குறிப்பிட்டார்.
இதனையடுத்து அந்த ரசிகருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது, ஆனால், அவரோ, தன்னுடைய மன்னிப்பை சாய்னா ஏற்றுக் கொண்டதால், யாருக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று டுவிட்டரில் தெரிவித்துவிட்டார்.
ரியோ ஒலிம்பிக் பேட்மின்டன் பெண்கள் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து ஸ்பெயின் வீராங்கனையுடன் இன்று மோதுகிறார். அவர் 120 கோடி இந்தியர்களின் கனவை நனவாக்கி பி.வி.சிந்து தங்கம் வென்று முத்திரை பதிப்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ரியோ டி ஜெனீரோ:
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து புதிய வரலாறு படைத்தார். இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இதன்மூலம் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்தார்.
இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைக்கும் 2-வது பதக்கம் ஆகும். மல்யுத்தத்தில் அரியானா வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலம் பெற்றுக் கொடுத்து இருந்தார்.
பேட்மின்டன் போட்டியில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாய்னா நேவால் மீது தான் அனைவரது எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் அவர் 2-வது சுற்றிலேயே தோற்று வெளியேறினார்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் பி.வி.சிந்து மிகவும் சிறப்பாக செயல்பட்டு கோடிக்கணக்கான இந்தியர்களின் மனதில் இடம் பிடித்தார். போட்டியின் தொடக்கத்தில் இருந்தே அவர் அபாரமாக விளையாடி வருகிறார்.
தெலுங்கானாவை சேர்ந்த 21 வயதான பி.வி.சிந்து உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ளார். அவர் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் 8-ம் நிலை வீராங்கனையையும், கால்இறுதியில் இரண்டாம் நிலை வீராங்கனையையும் தோற்கடித்தார்.
நேற்று நடந்த அரை இறுதியில் ஜப்பானை சேர்ந்த 6-வது வரிசையில் உள்ள ஒகுகராவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை பி.வி.சிந்து படைத்தார். அவர் இறுதிப்போட்டியில் உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான கரோலினா மரினை (ஸ்பெயின்) சந்திக்கிறார். இறுதிப் போட்டி இன்று மாலை 6.55 மணிக்கு நடக்கிறது.
கரோலினாவை வீழ்த்தி பி.வி.சிந்து தங்கம் வெல்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்று இருந்தார்.
கரோலினாவை வீழ்த்துவது பி.வி.சிந்துவுக்கு மிகவும் சவாலானதே. ஆனால் மிகவும் சிறப்பாக விளையாடி வருவதால் அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார். இருவரும் மோதிய போட்டியில் சிந்து 2 ஆட்டத்திலும், கரோலினா 4 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
120 கோடி இந்தியர்களின் கனவை நனவாக்கி பி.வி.சிந்து தங்கம் வென்று முத்திரை பதிப்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து புதிய வரலாறு படைத்தார். இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இதன்மூலம் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்தார்.
இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைக்கும் 2-வது பதக்கம் ஆகும். மல்யுத்தத்தில் அரியானா வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலம் பெற்றுக் கொடுத்து இருந்தார்.
பேட்மின்டன் போட்டியில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாய்னா நேவால் மீது தான் அனைவரது எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் அவர் 2-வது சுற்றிலேயே தோற்று வெளியேறினார்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் பி.வி.சிந்து மிகவும் சிறப்பாக செயல்பட்டு கோடிக்கணக்கான இந்தியர்களின் மனதில் இடம் பிடித்தார். போட்டியின் தொடக்கத்தில் இருந்தே அவர் அபாரமாக விளையாடி வருகிறார்.
தெலுங்கானாவை சேர்ந்த 21 வயதான பி.வி.சிந்து உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ளார். அவர் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் 8-ம் நிலை வீராங்கனையையும், கால்இறுதியில் இரண்டாம் நிலை வீராங்கனையையும் தோற்கடித்தார்.
நேற்று நடந்த அரை இறுதியில் ஜப்பானை சேர்ந்த 6-வது வரிசையில் உள்ள ஒகுகராவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை பி.வி.சிந்து படைத்தார். அவர் இறுதிப்போட்டியில் உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான கரோலினா மரினை (ஸ்பெயின்) சந்திக்கிறார். இறுதிப் போட்டி இன்று மாலை 6.55 மணிக்கு நடக்கிறது.
கரோலினாவை வீழ்த்தி பி.வி.சிந்து தங்கம் வெல்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்று இருந்தார்.
கரோலினாவை வீழ்த்துவது பி.வி.சிந்துவுக்கு மிகவும் சவாலானதே. ஆனால் மிகவும் சிறப்பாக விளையாடி வருவதால் அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார். இருவரும் மோதிய போட்டியில் சிந்து 2 ஆட்டத்திலும், கரோலினா 4 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
120 கோடி இந்தியர்களின் கனவை நனவாக்கி பி.வி.சிந்து தங்கம் வென்று முத்திரை பதிப்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.






