search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்: மெர்சிடிஸ் பென்ஸ் EQ கான்செப்ட்
    X
    கோப்பு படம்: மெர்சிடிஸ் பென்ஸ் EQ கான்செப்ட்

    இந்தியாவில் தயாராகும் மெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் கார்

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது தயாரிப்பு ஆலையில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.




    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் பூனேவில் உள்ள சக்கன் தயாரிப்பு ஆலையில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு திட்டத்துக்கு ஏற்ப வரும் ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான முக்கிய சந்தையாக இந்தியா உருவெடுக்கலாம் என்பதால் மெர்சிடிஸ் பென்ஸ் இந்த முடிவினை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

    இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் கம்பஷன் இன்ஜின்களுக்கான தயாரிப்பு பணிகளை பூனேவில் உள்ள சக்கன் ஆலையில் துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த திட்டத்தை நிறைவேற்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

    மேலும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் மின்சார கார்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிலவி வருகிறது. இவ்வாறு குறைக்கப்படும் பட்சத்தில் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் செலுத்தலாம். இத்துடன் இறக்குமதி வரி குறைக்கப்பட்டால், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைவாக இருக்கும்.


    கோப்பு படம்: மெர்சிடிஸ் பென்ஸ் EQ கான்செப்ட்

    அடுத்த ஆண்டு வாக்கில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய பிரான்டு EQ என்ற பெயரில் சர்வதேச சந்தையில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த பிரான்டு ஏற்கனவே பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை வெளியிட தயார் நிலையில் இருக்கிறது. EQ பிரான்டு மாடல்கள் முழுவதும் எதிர்கால பேட்டரி-எலெக்ட்ரிக் கார்களாக இருக்கும் என மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.

    இதன் பிளாட்ஃபார்ம் புதிய ஒற்றை வடிவமைப்பை சார்ந்து இருக்கும் என்றும், இதே போன்ற வடிவமைப்பு அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களிலும் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. எனினும் புதிய மாடல்களில் சில வேறுபாடுகள் மற்றும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×