search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காரில் வெளியே எட்டிப் பார்த்த சிறுமி கழுத்து இறுகி பலி
    X

    காரில் வெளியே எட்டிப் பார்த்த சிறுமி கழுத்து இறுகி பலி

    • காரில் இருந்து சிறுமி இந்திரஜா வெளியே தலையை நீட்டியபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் சேகரை கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் போஜ்ஜா கூடேமை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு.

    இவரது மகள் இந்திரஜா (வயது 9). வெங்கடேஸ்வரலுவிடம் சேகர் என்பவர் கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு அனந்தகிரியில் வெங்கடேஸ்வரலுவின் உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் திருமண மண்டபத்திற்கு சென்றனர்.

    பின்னர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் இரவு வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.

    காரில் இருந்து சிறுமி இந்திரஜா வெளியே தலையை நீட்டியபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தார்.

    சிறுமி தலையை காருக்கு வெளியே நீட்டிக்கொண்டு இருப்பதை கவனிக்காத கார் டிரைவர் சேகர் திடீரென கார் கண்ணாடியை ஏற்றினார். இதில் சிறுமியின் கழுத்து இறுகி மூச்சு அடைத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த இந்திரஜாவின் பெற்றோர் சிறுமியின் உடலை பார்த்து கதறி துடித்தனர்.

    இதுகுறித்து அனந்தகிரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் சேகரை கைது செய்தனர்.

    Next Story
    ×