search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அமைச்சரை பதவி நீக்கம் செய்ய கவர்னருக்கு அதிகாரம் இல்லை... உச்சநீதிமன்றம்
    X

    அமைச்சரை பதவி நீக்கம் செய்ய கவர்னருக்கு அதிகாரம் இல்லை... உச்சநீதிமன்றம்

    • வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
    • சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியே எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

    சென்னை:

    சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என கடந்த ஜூன் 16-ந்தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

    இதையடுத்து இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    அதில், "செந்தில் பாலாஜி விவகாரத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

    மேலும் செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார் என விளக்க வேண்டும்" என கோரியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது குறித்து தமிழக முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும். அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தார்மிக ரீதியாக சரியானது அல்ல எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

    இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.ரவி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    அதில், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது மற்றும் அது குறித்து வெளியிடப்பட்ட அரசாணை ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

    இந்த மனு மீது இன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதில் ஐகோர்ட்டு உத்தரவு சரியே என்றும் செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிப்பது பற்றி முதலமைச்சர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

    Next Story
    ×