search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகா: 10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் மீண்டும் சேர்க்கப்படும் பெரியார் பாடம்
    X

    கர்நாடகா: 10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் மீண்டும் சேர்க்கப்படும் பெரியார் பாடம்

    • மீண்டும் பெரியார், சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
    • நீக்கப்பட்ட திப்பு சுல்தான், ஹைதர் அலி தொடர்பான பாடங்களை மீண்டும் அறிமுகப்படுத்த இக்குழு பரிந்துரைக்கவில்லை

    2022-23 கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்களை கர்நாடகாவை ஆட்சி செய்த பாஜக அரசு மாற்றம் செய்தது. அதில், பத்தாம் வகுப்பு மாணவர்களின் புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிறுவனர், ஹெட்கேவரின் உரைகள் இடம்பெற்றன. அதே சமயம் சமூக சீர்திருத்தவாதிகளான பெரியார், நாராயண குரு மற்றும் முகலாய மன்னர்களான திப்பு சுல்தான், ஹைதர் அலி குறித்த தகவல்கள் நீக்கப்பட்டது. இது கர்நாடகா அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், 2024-25 கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்களை காங்கிரஸ் அரசு மாற்றம் செய்துள்ளது. அதில் 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டத்தில், மீண்டும் பெரியாரின் வாழ்க்கை வரலாறு, சமூகப் பணிகள் குறித்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதே சமயம் சாவித்ரிபாய் பூலே அவர்களின் பாடமும் சேர்க்கப்பட்டுள்ளது.

    ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் மஞ்சுநாத் ஹெக்டே தலைமையிலான பாடநூல் திருத்தக் குழு, இத்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

    இருப்பினும், நீக்கப்பட்ட திப்பு சுல்தான், ஹைதர் அலி தொடர்பான பாடங்களை மீண்டும் அறிமுகப்படுத்த இக்குழு பரிந்துரைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×