என் மலர்
இந்தியா

மகாராஷ்டிரா - ஜார்க்கண்ட்டில் தொடங்குது தேர்தல் சீசன்.. இன்று மதியம் தேதிகள் அறிவிப்பு
- 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் நவம்பர் மாதம் 26-ந்தேதி முடிவடைகிறது.
- 81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிகாலம் ஜனவரி 5-ந்தேதி முடிவடைகிறது.
அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீருக்கான சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்களை நடந்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் நவம்பர் மாதம் 26-ந்தேதி முடிவடைகிறது.
81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிகாலம் ஜனவரி 5-ந்தேதி முடிவடைகிறது. இந்நிலையில் பண்டிகை காலத்துக்கு பின்னர் தேர்தலை நடந்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையைதேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது வெளியிடுகிறது
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பாரதிய ஜனதா, அஜித்பவார் கூட்டணி ஆட்சியும் ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி ஆட்சியும் நடைபெற்று வருகின்றன.






