search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மம்தா பானர்ஜி மற்றும் ராகுல் காந்தி
    X
    மம்தா பானர்ஜி மற்றும் ராகுல் காந்தி

    “ஜீரோ பட்ஜெட்”- ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி கடும் குற்றச்சாட்டு

    சாதாரண பொது மக்களுக்கு பட்ஜெட்டில் எதுவும் இல்லை என கூறி ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.  அதில் நதிகள் இணைப்பு, இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, இ-பாஸ்போர்ட், 5 ஜி வசதி, டிஜிட்டல் கரன்சி, ஒரே நாடு-ஒரே பத்திரப்பதிவு,  நெடுஞ்சாலை திட்டம், 400 வந்தே பாரத் ரெயில் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இருப்பினும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.  

    இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கு ஒன்றுமில்லை என்பதை குறிப்பிட்டு, “வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் நசுக்கப்படும் வேளையில் சாதாரண பொது மக்களுக்கு பட்ஜெட்டில் பூஜ்யம்தான் உள்ளது. எதையுமே குறிக்காத பெரிய வார்த்தைகளில் அரசாங்கம் தோற்றுவிட்டது. இது பெகாசஸ் ஸ்பின் பட்ஜெட்” என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பதிவிட்டுள்ளார். 

    இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டை விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “இது மோடி அரசின் பூஜ்ஜிய பட்ஜெட். சம்பளம் பெறும் பிரிவினர், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் , இளைஞர்கள், விவசாயிகள், சிறுகுறு தொழில் முனைவோர்கள்  உள்ளிட்ட பிரிவினருக்கு  பட்ஜெட்டில் எந்த சலுகையும் இல்லை” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×