search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    மோடி ஆணவத்தை கைவிட வேண்டும்: காங்கிரஸ் கட்சி கருத்து

    இடைத்தேர்தல் முடிவுகளைப் பார்த்து, மோடி ஆணவத்தை கைவிட வேண்டும், 3 கருப்பு சட்டங்களை (வேளாண் சட்டங்கள்) ரத்து செய்ய வேண்டும் என கூறி உள்ளார்.
    புதுடெல்லி :

    3 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கும், 30 சட்டசபை தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் கணிசமான வெற்றியை பெற்றுள்ளன.

    இதையொட்டி காங்கிரஸ் கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இடைத்தேர்தல் முடிவுகளைப் பார்த்து, மோடி ஆணவத்தை கைவிட வேண்டும், 3 கருப்பு சட்டங்களை (வேளாண் சட்டங்கள்) ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் கொள்ளையை நிறுத்த வேண்டும்’’ என கூறி உள்ளார்.
    Next Story
    ×