search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் - டெல்லியில் மும்முனை போட்டி
    X

    பாராளுமன்ற தேர்தல் - டெல்லியில் மும்முனை போட்டி

    பாராளுமன்ற தேர்தலில் 6வது கட்டமாக டெல்லியில் நாளை நடைபெறவுள்ள தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், நாடாளுமன்ற தேர்தல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

    இந்த தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி, மே மாதம் 19-ந் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6 என 5 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. பெரிய அளவில் அசம்பாவிதம் இன்றி 5 கட்ட தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்துள்ளன.

    6வது கட்டமாக நாளை நடைபெறவுள்ள தேர்தலில் டெல்லியில் 7 தொகுதிகளை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் வெற்றி பெற கட்சிகளின் தலைவர்கள் உள்பட முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்துள்ளனர். 



    டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் மொத்தம் 164 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 18 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இங்கு ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட 3 கட்சிகளிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித், பாஜக சார்பில் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், ஆம் ஆத்மி சார்பில் அதிஷி உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.

    காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. தேர்தலை முன்னிட்டு மெட்ரோ ரெயில் நிலையம் அதிகாலை 4 மணி முதல் இயங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது நினைவு கூரத்தக்கது.
    Next Story
    ×