search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடைபெற்ற போது ஏன் போராடவில்லை?- தினகரன் கேள்வி
    X

    போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடைபெற்ற போது ஏன் போராடவில்லை?- தினகரன் கேள்வி

    போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடைபெற்ற போது ஏன் போராடவில்லை? என்று அ.தி.மு.க.வினருக்கு டி.டி.வி. தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார். #TTVDhinakaran #Sarkar #ADMK
    பெங்களூரு:

    சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இன்று சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சந்தித்துப் பேசினார்கள்.

    சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் டி.டி.வி.தினகரன் கூறியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்ற முடிவு சரியானது என்றும் இடைத்தேர்தலை சந்திப்பது சரி தான் என சசிகலா கூறினார்.


    சர்கார் விவகாரத்தில் ஆளும் கட்சியினரின் அணுகுமுறை தவறானது. நடுநிலையுடன் சர்கார் படத்தை எடுக்கவில்லை.  இலவச தொலைக்காட்சியை எரித்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். மறைந்த தலைவர்களின் திட்டங்களை விமர்சிப்பவர்கள் அரசியலுக்கு வந்தால், மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    மக்களை திசை திருப்பும் நோக்கில் ஆளும் கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர். போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டில் சோதனை நடைபெற்றபோது ஆளுங்கட்சியினர் ஏன் போராடவில்லை?

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #Sarkar #ADMK
    Next Story
    ×