என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி? - டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
    X

    சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி? - டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

    டெல்லியில் வரும் 15-ம் தேதி நடைபெறும் சுதந்திர தினவிழாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. #IndependenceDay2019
    புதுடெல்லி:

    நாட்டின் சுதந்திர தினம் வருகிற 15–ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது டெல்லியில் மிகப்பெரும் தாக்குதலை அரங்கேற்ற பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பாகிஸ்தான் உளவுத்துறையின் ஆதரவுடன் இந்த தாக்குதலை அரங்கேற்றுவதற்காக பயங்கரவாதிகள் இந்தியாவில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை அடுத்து, தலைநகர் டெல்லியில் முக்கியமான இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



    சுதந்திர தின விழாவில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல், அமைதியான முறையில் நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ரெயில்வே நிலையம், பேருந்து நிலையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்கள் போன்றவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #IndependenceDay2019
    Next Story
    ×