என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரவிந்த் கெஜ்ரிவாலை வேலை செய்ய விடுங்கள் - மத்திய அரசுக்கு சிவசேனா வலியுறுத்தல்
Byமாலை மலர்6 July 2018 11:33 AM GMT (Updated: 6 July 2018 11:33 AM GMT)
டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடையூறுகள் தராமல் அவரை வேலை செய்ய விடுமாறு மத்திய அரசுக்கு சிவசேனா இன்று அறிவுறுத்தியுள்ளது. #ShivSena #ArvindKejriwal
மும்பை:
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் மத்திய பாஜக அரசுக்கும் மோதல் நீடித்து வருகிறது. டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கு சுதந்திரமாக முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை என்றும், மந்திரி சபையின் அறிவுரையின் பேரில்தான் அவர் செயல்பட முடியும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் அதிரடியாக தீர்ப்பளித்தது.
இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமனாவில் இன்று செய்தி வெளியிடப்பட்டது. அதில், டெல்லியின் ஆம் ஆத்மியின் ஆட்சி முறையாக இல்லையென்றால் ஆட்சியை கலைத்து விடுங்கள் என்றும், அதற்கு பதிலாக பணி செய்ய விடாமல் தடுக்க கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், டெல்லியில், துணை நிலை ஆளுநருக்கும், முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே போட்டி இல்லை என்றும், பிரதமர் மோடிக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே தான் போட்டி நிலவுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, இனியாவது டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது பணியை செய்யவிடுமாறு சாமனா நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. #ShivSena #ArvindKejriwal
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் மத்திய பாஜக அரசுக்கும் மோதல் நீடித்து வருகிறது. டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கு சுதந்திரமாக முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை என்றும், மந்திரி சபையின் அறிவுரையின் பேரில்தான் அவர் செயல்பட முடியும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் அதிரடியாக தீர்ப்பளித்தது.
இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமனாவில் இன்று செய்தி வெளியிடப்பட்டது. அதில், டெல்லியின் ஆம் ஆத்மியின் ஆட்சி முறையாக இல்லையென்றால் ஆட்சியை கலைத்து விடுங்கள் என்றும், அதற்கு பதிலாக பணி செய்ய விடாமல் தடுக்க கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், டெல்லியில், துணை நிலை ஆளுநருக்கும், முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே போட்டி இல்லை என்றும், பிரதமர் மோடிக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே தான் போட்டி நிலவுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, இனியாவது டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது பணியை செய்யவிடுமாறு சாமனா நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. #ShivSena #ArvindKejriwal
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X