என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடிக்கு கொலை மிரட்டல் திசை திருப்பும் முயற்சி- காங்கிரஸ் குற்றச்சாட்டு
Byமாலை மலர்9 Jun 2018 5:35 AM GMT (Updated: 9 Jun 2018 5:35 AM GMT)
மோடி உயிருக்கு அச்சுறுத்தல் என்பது அனுதாபம் தேட நடத்தப்படும் முயற்சி என்று மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. #PMModi #Congress
புதுடெல்லி:
மராட்டிய மாநிலம் புனேயில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் “அல்கார் பரிஷத்” என்ற அமைப்பின் மாநாடு நடந்தது.
அப்போது பீமா- கோரே கான் பகுதிகளில் திடீர் கலவரம் ஏற்பட்டது. புனே போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
மும்பை, டெல்லி, நாக்பூரில் இருந்து புனேக்கு வந்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் விவரம் வருமாறு:-
1. சுதீர் தவாலே-மும்பை (தலித் இயக்க தலைவர்)
2. சுரேந்தரா கட்லிஸ் (மனித உரிமை வழக்கறிஞர்)
3. மகேஷ் ரவுத் (பழங்குடி இன பிரதிநிதி)
4. சோமாசென் (நாக்பூர் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை பேராசிரியர்)
5. ரோனா வில்சன் (டெல்லி)
இவர்கள் 5 பேருக்கும் நக்சலைட் அமைப்பின் மூத்த தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். நக்சலைட்டுகள் தூண்டுதலின்பேரில் இவர்கள் 5 பேரும் பீமா- கோரே கான் பகுதியில் திட்டமிட்டு கலவரத்தை நடத்தினார்கள் என்று போலீசார் சொல்கிறார்கள்.
கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்ட அந்த 5 பேரின் வீடுகளிலும் நேற்று முன்தினம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். டெல்லியில் உள்ள ரோனா வில்சன் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட போது சில கடிதங்கள் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதங்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் எழுதியது என்று கூறப்படுகிறது.
“ஆர்” என்று கையெழுத்திட்டு பிரகாஷ் என்பவருக்கு அந்த கடிதம் கடந்த ஆண்டு அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் பிரதமர் மோடியை ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது போன்ற பாணியில் தாக்குதல் நடத்தி படுகொலை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு, “மோடியை கொலை செய்வதற்காக எம்-4 ரக துப்பாக்கிகளை வாங்கவும், 4 லட்சம் குண்டுகளை வாங்கவும் ரூ. 8 கோடி தேவைப்படுகிறது” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரதமர் மோடியின் சாலை பயணத்தை குறி வைத்து தாக்குதலை நடத்த வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கூறுகையில், “மோடியின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்” என்று கூறியுள்ளார். மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறுகையில், “பா.ஜ.க.வுக்கு எதிராக மாவோயிஸ்டு தீவிரவாதிகளை சில கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன. இது ஆபத்தில் முடியும் என்பதை அந்த கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட 5 பேரையும் புனே கோர்ட்டில் நேற்று முன்தினம் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது பிரதமர் மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டி மாவோயிஸ்டுகள் எழுதிய கடிதத்தையும் போலீசார் தாக்கல் செய்தனர்.
அந்த கடிதத்தை சுட்டிக்காட்டி பேசிய அரசு வக்கீல் உஜ்வாலா பவார், “கைதான 5 பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது” என்று எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு 5 பேருக்கும் மாவோயிஸ்டு அமைப்புடன் எத்தகைய வகைகளில் தொடர்பு இருக்கிறது என்பதையும் அவர் கோர்ட்டில் விளக்கமாக கூறினார்.
இதற்கு குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வக்கீல் தோசீப் ஷேக் ஆட்சேபம் தெரிவித்தார். அவர் கூறுகையில், “மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் கடிதம் திருத்தி எழுதப்பட்டுள்ளது. அது போலியானது. அதன் உண்மைத்தன்மை பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.
இந்த நிலையில் மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சி மோடி உயிருக்கு அச்சுறுத்தல் என்பது அனுதாபம் தேட நடத்தப்படும் முயற்சி என்று விமர்சனம் செய்துள்ளது. இதுபற்றி மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய்நிருபம் கூறியதாவது:-
பிரதமர் மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்த போதும் அவரைக் கொல்ல சதி சென்று தகவல் வெளியானது. இப்போதும் அதே பாணியில் கடிதம் வெளியிட்டுள்ளனர். இது மோடி தனது செல்வாக்கை காப்பாற்றிக் கொள்ள, தற்போதைய பிரச்சனைகளை திசை திருப்பும் முயற்சியோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
பிரதமர் மோடி தன்னை கொல்ல சதி நடப்பதாக கூறி அனுதாபம் தேட முயற்சி செய்கிறார். அவருக்கு செல்வாக்கு சரியும் போதெல்லாம் இப்படி ஏதாவது ஒன்றை செய்வார்கள். தற்போதும் பா.ஜ.க.வினர் அத்தகைய கதைகளை உலவ விட்டுள்ளனர்.
இந்த தடவை மாவோயிஸ்டுகள் சதி என்று சொல்கிறார்கள். இது முழுக்க முழுக்க பொய் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் கடித வார்த்தைகளில் சந்தேகம் உள்ளது.
மாவோயிஸ்டுகள் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் எங்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளது. அதில் உண்மை என்பது வெளியில் கொண்டு வரப்பட வேண்டும்.
எனவே அந்த சதி திட்டம் கடிதம் பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு சஞ்சய் நிருபம் கூறினார். #PMModi #Congress
மராட்டிய மாநிலம் புனேயில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் “அல்கார் பரிஷத்” என்ற அமைப்பின் மாநாடு நடந்தது.
அப்போது பீமா- கோரே கான் பகுதிகளில் திடீர் கலவரம் ஏற்பட்டது. புனே போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
மும்பை, டெல்லி, நாக்பூரில் இருந்து புனேக்கு வந்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் விவரம் வருமாறு:-
1. சுதீர் தவாலே-மும்பை (தலித் இயக்க தலைவர்)
2. சுரேந்தரா கட்லிஸ் (மனித உரிமை வழக்கறிஞர்)
3. மகேஷ் ரவுத் (பழங்குடி இன பிரதிநிதி)
4. சோமாசென் (நாக்பூர் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை பேராசிரியர்)
5. ரோனா வில்சன் (டெல்லி)
இவர்கள் 5 பேருக்கும் நக்சலைட் அமைப்பின் மூத்த தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். நக்சலைட்டுகள் தூண்டுதலின்பேரில் இவர்கள் 5 பேரும் பீமா- கோரே கான் பகுதியில் திட்டமிட்டு கலவரத்தை நடத்தினார்கள் என்று போலீசார் சொல்கிறார்கள்.
கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்ட அந்த 5 பேரின் வீடுகளிலும் நேற்று முன்தினம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். டெல்லியில் உள்ள ரோனா வில்சன் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட போது சில கடிதங்கள் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதங்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் எழுதியது என்று கூறப்படுகிறது.
“ஆர்” என்று கையெழுத்திட்டு பிரகாஷ் என்பவருக்கு அந்த கடிதம் கடந்த ஆண்டு அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் பிரதமர் மோடியை ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது போன்ற பாணியில் தாக்குதல் நடத்தி படுகொலை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு, “மோடியை கொலை செய்வதற்காக எம்-4 ரக துப்பாக்கிகளை வாங்கவும், 4 லட்சம் குண்டுகளை வாங்கவும் ரூ. 8 கோடி தேவைப்படுகிறது” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து பிரதமர் மோடிக்கு பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.
உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கூறுகையில், “மோடியின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்” என்று கூறியுள்ளார். மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறுகையில், “பா.ஜ.க.வுக்கு எதிராக மாவோயிஸ்டு தீவிரவாதிகளை சில கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன. இது ஆபத்தில் முடியும் என்பதை அந்த கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட 5 பேரையும் புனே கோர்ட்டில் நேற்று முன்தினம் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது பிரதமர் மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டி மாவோயிஸ்டுகள் எழுதிய கடிதத்தையும் போலீசார் தாக்கல் செய்தனர்.
அந்த கடிதத்தை சுட்டிக்காட்டி பேசிய அரசு வக்கீல் உஜ்வாலா பவார், “கைதான 5 பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது” என்று எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு 5 பேருக்கும் மாவோயிஸ்டு அமைப்புடன் எத்தகைய வகைகளில் தொடர்பு இருக்கிறது என்பதையும் அவர் கோர்ட்டில் விளக்கமாக கூறினார்.
இதற்கு குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வக்கீல் தோசீப் ஷேக் ஆட்சேபம் தெரிவித்தார். அவர் கூறுகையில், “மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் கடிதம் திருத்தி எழுதப்பட்டுள்ளது. அது போலியானது. அதன் உண்மைத்தன்மை பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.
இந்த நிலையில் மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சி மோடி உயிருக்கு அச்சுறுத்தல் என்பது அனுதாபம் தேட நடத்தப்படும் முயற்சி என்று விமர்சனம் செய்துள்ளது. இதுபற்றி மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய்நிருபம் கூறியதாவது:-
பிரதமர் மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்த போதும் அவரைக் கொல்ல சதி சென்று தகவல் வெளியானது. இப்போதும் அதே பாணியில் கடிதம் வெளியிட்டுள்ளனர். இது மோடி தனது செல்வாக்கை காப்பாற்றிக் கொள்ள, தற்போதைய பிரச்சனைகளை திசை திருப்பும் முயற்சியோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
பிரதமர் மோடி தன்னை கொல்ல சதி நடப்பதாக கூறி அனுதாபம் தேட முயற்சி செய்கிறார். அவருக்கு செல்வாக்கு சரியும் போதெல்லாம் இப்படி ஏதாவது ஒன்றை செய்வார்கள். தற்போதும் பா.ஜ.க.வினர் அத்தகைய கதைகளை உலவ விட்டுள்ளனர்.
இந்த தடவை மாவோயிஸ்டுகள் சதி என்று சொல்கிறார்கள். இது முழுக்க முழுக்க பொய் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் கடித வார்த்தைகளில் சந்தேகம் உள்ளது.
மாவோயிஸ்டுகள் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் எங்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளது. அதில் உண்மை என்பது வெளியில் கொண்டு வரப்பட வேண்டும்.
எனவே அந்த சதி திட்டம் கடிதம் பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு சஞ்சய் நிருபம் கூறினார். #PMModi #Congress
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X