என் மலர்
உண்மை எது
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சோனியா காந்தியின் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் சோனியா காந்தியுடன் இருப்பது இத்தாலி நாட்டை சேர்ந்த தொழிலதிபர் ஒட்டாவியோ குவாத்ரோச்சி என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஒட்டாவியோ குவாத்ரோச்சி போபர்ஸ் ஊழல் வழக்கு குற்றவாளி ஆவார்.
1980 முதல் 1990 வரையிலான காலக்கட்டத்தில் இந்திய அரசு மற்றும் ஸ்வீடனை சேர்ந்த ஆயுத உற்பத்தியாளரான போபர்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் நடந்த ஊழலில் குவாத்ரோச்சி முக்கிய குற்றவாளி ஆவார்.

வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், சோனியா காந்தியுடன் இருப்பது இத்தாலி நாட்டு தொழிலதிபர் ஒட்டாவியோ குவாத்ரோச்சி இல்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த புகைப்படத்தில் சோனியா காந்தியுடன் இருப்பது ராகுல் காந்தி என்றும், இது 1996 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் தெரியவந்துள்ளது.
இதே தகவல் வைரல் புகைப்படத்தின் ஓரத்திலும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த புகைப்படம் ஏப்ரல் 8, 1996 அன்று புது டெல்லியில் எடுக்கப்பட்டது ஆகும். அந்த வகையில் வைரல் புகைப்படத்தில் சோனியா காந்தியுடன் இருப்பது ஒட்டாவியோ குவாத்ரோச்சி இல்லை என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
நந்திகிராம் சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவுகளை எதிர்த்து தொடர்ந்த வழக்கை மம்தா பானர்ஜி திரும்பப் பெற்றதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் கடந்துவிட்டது. எனினும், அம்மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் இடையிலான பதற்ற சூழல் இதுவரை குறையவில்லை.
அம்மாநிலத்தின் சில பகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், நந்திகிராம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி முதலில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு பின், தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். இந்த முடிவை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி வழக்கு தொடர்ந்தார்.
இதனிடையே, ``அச்சம் அடைந்த மம்தா பானர்ஜி நந்திகிராம் சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற உத்தரவிட்டு இருக்கிறார்," என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், இந்த வழக்கு மே 21, 2021 அன்று தொடரப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. ஜூன் 18 ஆம் தேதி மம்தா பானர்ஜியின் ஆலோசகர் சஞ்சய் பாசு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ் பிண்டலுக்கு எழுதிய கடிதத்தில், `மனுவை விசாரிக்கும் நீதிபதி கௌஷிக் சந்தா பாஜகவின் உறுப்பினராக இருந்துள்ளார். இதனால் தீர்ப்பு எதிர்கட்சிக்கு சாதகமாக வழங்கப்பட வாய்ப்பு இருப்பதால் நீதிபதியை மாற்ற வேண்டும்,' என குறிப்பிட்டு இருக்கிறார்.
பின் வழக்கு விசாரணை ஜூன் 24 அன்று நடைபெற்றது. இந்த வழக்கில் மனுதாரரான மம்தா பானர்ஜி இணையவழியே கலந்து கொண்டார். வழக்கு விசாரணை நிறைவுற்று வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. வைரல் பதிவுகளில் உள்ளதை போன்று, வழக்கு திரும்பப் பெறப்பட்டு இருப்பதாக செய்தி குறிப்புகளோ அல்லது நீதிமன்ற வலைதளத்திலோ எந்த தகவலும் இடம்பெறவில்லை.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
யோகா குறிப்பிட்ட சமூகத்தினருக்கானது என கூறுவோர் முகத்தில் அடிப்பது போன்று இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளன.
முஸ்லீம்கள் யோகா செய்யும் போது எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இரு புகைப்படங்களும் சவுதி அரேபியாவில் எடுக்கப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டதை தொடர்ந்து இரு புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வலம்வரத் துவங்கியுள்ளன. ``யோகா குறிப்பிட்ட சமூகத்தினருக்கானது என கூறுவோர் முகத்தில் அடிப்பது போன்று இந்த புகைப்படங்கள் உள்ளன," எனும் தலைப்பில் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

வைரல் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், இவற்றில் ஒன்று ஆமதாபாத் நகரில் எடுக்கப்பட்டது என்றும் மற்றொன்று அபுதாபியில் எடுக்கப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது. இவை முறையே 2015 மற்றும் 2017 ஆண்டுகளில் எடுக்கப்பட்டவை ஆகும். இரு புகைப்படங்களும் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்ட போது எடுக்கப்பட்டவை ஆகும்.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.






