search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டமன்றத்தை திமுக கைப்பற்றும் நாள் தான் கருணாநிதிக்கு செலுத்தும் மனப்பூர்வமான அஞ்சலி - மு.க.ஸ்டாலின் பேச்சு
    X

    சட்டமன்றத்தை திமுக கைப்பற்றும் நாள் தான் கருணாநிதிக்கு செலுத்தும் மனப்பூர்வமான அஞ்சலி - மு.க.ஸ்டாலின் பேச்சு

    சட்டமன்றத்தை திமுக கைப்பற்றும் நாள் தான் கருணாநிதிக்கு செலுத்தும் மனப்பூர்வமான அஞ்சலி என்று கருணாநிதி பிறந்த நாள் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    சென்னை:

    பாராளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது. இதற்காக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்திருந்தது. இதனுடன் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 96-வது பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

    இதற்காக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது. தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கருணாநிதி பிறந்த நாள் விழாவில் ஸ்டாலின் பேசியதாவது:- 

    மக்களவை தேர்தல் வெற்றி அனைவரும் சேர்ந்து சாதித்த சாதனை. சரித்திரம் எவ்வாறு திரும்பியுள்ளது என்பதை திமுகவின் வெற்றி காட்டுகிறது.

    தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை. கருணாநிதி இடத்தில் அவரது மகன் நான் இருக்கிறேன். சட்டமன்றத்தை திமுக கைப்பற்றும் நாள் தான் கருணாநிதிக்கு செலுத்தும் மனப்பூர்வமான அஞ்சலி.

    திமுக கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு இனிதான் வேலை அதிகமாக உள்ளது. திமுக வென்றதால் பயன் என்னவெனில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக போராடுவோம். கல்விக்கடனை நீக்கவும், கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வரவும் போராடுவோம்.

    இந்தி திணிப்பை எதிர்ப்பதில் சமரசமே இல்லை. என்றைக்குமே எதிர்ப்போம்.  இந்தி திணிப்புக்கு எதிராக பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் போராட தயாராக இருக்கிறோம். இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்த திமுக கூட்டணி தலைவர்கள் தயாராக உள்ளோம். இன்னும் சில தினங்களில் போராட்டத்திற்காக ஒன்றுகூட உள்ளோம் தயாராக இருங்கள். 

    ஆட்சி பொறுப்பில் இருந்து கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவோம் என சபதம் ஏற்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×