என் மலர்
செய்திகள்

முக ஸ்டாலினை விமர்ச்சிப்பதை பிரேமலதா நிறுத்தி கொள்ள வேண்டும்- சந்திரகுமார் பேட்டி
ஈரோடு:
தி.மு.க கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சந்திரகுமார் மாலைமலர் நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தே.மு.தி.க. தற்போது அரசியல் மறுவாழ்விற்காக மாறிமாறி அலைந்து கொண்டு இருக்கிறது.
பிரேமலதா கட்சி விஷயங்களில் எப்போது தலையிட ஆரம்பித்தாரோ அப்போது இருந்தே தே.மு.தி.க.வை பணம் கொழிக்கும் கட்சியாக மாற்றி வருகிறார். அதிமுக, திமுக ஆட்சியில் கட்சிகளிடமும் ஒரே நேரத்தில் கூட்டணி பேரம் பேசிய செயலை இதுவரை தமிழகத்தில் யாரும் செய்ய வில்லை.

பிரேமலதா திமுக பற்றியும் தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றியும் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். கருணாநிதி உடல் நலம் சரியில்லாமல் இருந்த போது அவரை விஜயகாந்த் சந்திக்க அனுமதி கேட்ட போது மு.க.ஸ்டாலின் மறுத்ததாக பிரேமலதா கூறி வருகிறார். இது சுத்தப் பொய். பிரேமலதா பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இல்லை என்றால் உங்களைப் பற்றிய முழு விவரங்களையும் தமிழக மக்களிடம் எடுத்துக்கூற வேண்டி இருக்கும்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க கூட்டணி மிக பெரிய தோல்வியை சந்திக்கும். காரணம் இது மக்கள் ஏற்றுக் கொள்ளாத கூட்டணி. திமுக- காங்கிரஸ் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும். மு.க.ஸ்டாலின் மக்கள் விரும்பும் தலைவராக உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். #premalatha #dmk #mkstalin






