போதைப்பொருட்கள் விற்ற 423 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் - போலீசார் அதிரடி நடவடிக்கை

கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை ஒழிக்கும் வகையில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். புகையிலை பொருட்கள் விற்றதாக 423 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 423 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

தமிழ்நாடு முழுவதும் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை ஒழிக்கும் வகையில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்படி போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை ஒழிக்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கஞ்சா விற்றதாக 65 வழக்குகள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்றதாக 423 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 423 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 424 பேரின் வங்கி கணக்குகளில் இருந்த ரூ.9 லட்சத்து 12 ஆயிரத்து 480 முடக்கப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com