search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்படுமா? பெற்றோர் எதிர்பார்ப்பு
    X

    கோப்புபடம்.

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்படுமா? பெற்றோர் எதிர்பார்ப்பு

    • பிளஸ்- 1 முடித்து தற்போது பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு இன்னும் சைக்கிள் வழங்கப்படவில்லை.
    • பஸ் வசதியில்லாத பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகின்றனர்.

    திருப்பூர் :

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு நலத்திட்ட பொருட்களில் ஒன்றாக சைக்கிள் வழங்கப்படுகிறது.கிராமப்பகுதியில் இருந்தும் பஸ் வசதி இல்லாத இடங்களிலிருந்தும் வரும் மாணவர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதோடு கல்வி கற்பதற்கான வழி ஏற்படுத்துவதாகவும் உள்ளது. ஆனால் கொரோனாவுக்கு பின் இத்திட்டம் மாணவர்களுக்கு பயனில்லாத வகையில் பெயரளவில் மாறியுள்ளது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்கள் பிளஸ்- 2 வகுப்புக்கு வந்த பின்தான் சைக்கிள் வினியோகிக்கப்பட்டது.தொடர் கோரிக்கைக்கு பின் மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பு படிக்கும்போதே சைக்கிள் பெற்றுக்கொள்ளும் வகையில் திட்டம் விரைவுபடுத்தப்பட்டது.தற்போது சைக்கிள்கள் வினியோகிக்க தாமதமாவதோடு மேல்நிலை வகுப்பு முடிக்கும் நிலையில் தான் மாணவர்களுக்கு இத்திட்டம் சென்றடைகிறது. இதனால் எந்த பயனும் இல்லை என பெற்றோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.கடந்த கல்வியாண்டில் பிளஸ்- 1 முடித்து தற்போது பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு இன்னும் சைக்கிள் வழங்கப்படவில்லை.

    இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது :- மேல்நிலை வகுப்புகளுக்கு தடையாக இருப்பதில் முக்கியமானது போக்குவரத்து வசதிதான். அரசின் சார்பில் சைக்கிள் வழங்கப்படும் என்ற நம்பிக்கையில்தான், பஸ் வசதியில்லாத பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகின்றனர்.இதுதவிர அவர்கள் சிறப்பு வகுப்புகள் செல்வதற்கும் தேர்வு நேரம் என பல்வேறு வழிகளில் சைக்கிள் பயணம் உதவுகிறது.ஆனால், அதையும் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு படித்து முடித்த பின் வழங்குவதில் எந்த பலனும் இல்லை.மாணவர்களை 100 சதவீதம் பள்ளிக்கு வர அறிவுறுத்தும் அரசு அவர்கள் வருவதற்கான ஏற்பாட்டையும் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×