search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாநகராட்சியில் வளர்ச்சி பணிகளை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
    X

    அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்த காட்சி. 

    திருப்பூர் மாநகராட்சியில் வளர்ச்சி பணிகளை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

    • தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்த உறுதி மொழியினை எடுத்துக்கொண்டனர்.
    • திருப்பூர் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி மண்டலம் -4 வார்டு எண் 38, பிருந்தாவன் அவென்யூவில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்த உறுதி மொழியினை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னைய்யா ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் , மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் மாநகரில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா , நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னைய்யா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    Next Story
    ×