search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி- வேட்பு மனுவை தாக்கல் செய்தார் விஜய் வசந்த்
    X

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி- வேட்பு மனுவை தாக்கல் செய்தார் விஜய் வசந்த்

    • தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கிறது.
    • நாகர்கோவில் மாநகர மேயர் ரெ. மகேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்தியாவின் 18-வது பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ள தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கிறது.


    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இந்திய கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அமைச்சர் மனோ தங்கராஜ், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார், நாகர்கோவில் மாநகர மேயர் ரெ. மகேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லசாமி ஆகியோர் உடனிருந்தனர்.


    Next Story
    ×