search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்த் பிரசாரம்
    X

    கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்த் பிரசாரம்

    • தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கிறது.
    • நடைக்காவு பகுதியில் திறந்த வாகனத்தில் கை சின்னத்திற்கு விஜய் வசந்த் வாக்குகள் சேகரித்தார்.

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியும் ஒன்றாகும். தற்போது கன்னியாகுமரி உறுப்பினராக உள்ள விஜய் வசந்த் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையொட்டி அவர் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    அந்த வகையில், குமரி மாவட்டத்தின் மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட அதங்கோடு பகுதிக்கு சென்ற விஜய் வசந்த், அதங்கோட்டாசான் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னர் அங்குள்ள மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகள் சேகரித்தார்

    இதேபோன்று, நடைக்காவு பகுதியில் திறந்த வாகனத்தில் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பின்னர் அங்குள்ள கடைகள், பேருந்து நிறுத்தத்தில் நின்ற பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகள் சேகரித்தார் விஜய் வசந்த். இந்த பிரசாரத்தின் போது கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவருமான ராஜேஷ்குமார், கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, உட்பட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×