search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதமர் மோடி தேர்தல் பத்திரம் ஊழல் குறித்து வாய் திறக்கட்டும்- செல்வப்பெருந்தகை
    X

    பிரதமர் மோடி தேர்தல் பத்திரம் ஊழல் குறித்து வாய் திறக்கட்டும்- செல்வப்பெருந்தகை

    • நெல்லையில் நாளை மாலை 4 மணிக்கு பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.
    • நெல்லை பிரகடனம் என்ற பெயரில் இந்த பொதுக்கூட்டம் நடக்கிறது.

    நெல்லை:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நெல்லையில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்று தென் மாவட்டங்களில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

    இதனையொட்டி பாளை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே அமைந்துள்ள பெல் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் பொதுக்கூட்ட மேடையை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லையில் நாளை மாலை 4 மணிக்கு பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். தென் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்கிறார்.

    சிவகங்கை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கும் ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறார். நெல்லை பிரகடனம் என்ற பெயரில் இந்த பொதுக்கூட்டம் நடக்கிறது.


    தேசத்தில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக் கிறது. இந்தியா கூட்டணி எழுச்சியோடு வெற்றி வாகை சூட போகிறது. அதன் முன்னோட்டமாக தான் நாளை மாலை நெல்லையில் பிரசாரம் செய்ய இருக்கிறோம்.

    நாளை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர். ஹெலிகாப்டர் இறங்கும் ஜான்ஸ் கல்லூரி மைதானம் முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் வரை வாகன பிரசாரம் செய்ய வாய்ப்பு உள்ளது. ரோடு-ஷோவுக்கு வாய்ப்பு இல்லை. ஆனாலும் சாலையின் இரு புறங்களிலும் திரளான மக்கள் வந்து ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு வழங்குவார்கள்.

    பிரதமர் மோடி தமிழகத்தில் பேசும் ஒவ்வொரு பிரசார கூட்டத்திலும் இந்தியா கூட்டணியின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறார்.

    தேர்தல் நன்கொடை பத்திர விவகாரம், சி.ஏ.ஜி. அறிக்கை உள்ளிட்ட புகார்கள் மற்றும் அந்த ஊழல் தொடர்பான விளக்கங்களை பற்றி மோடி முதலில் வாயை திறக்கட்டும்.

    ஒரு முறை எங்களை பார்த்து கையை நீட்டுகிறார் என்றால் 4 விரல் அவரைப் பார்த்து இருக்கிறது என்பதை மறந்து விடுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது நெல்லை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தங்கபாலு, மேலிட பார்வை யாளர் ஸ்ரீ வல்லபிரசாத், மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×