என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்தவர் கைது
- அரசு வேலை வாங்கி தருவதாக 51 பேரிடம் ரூபாய் ஒரு கோடியே 40 லட்சம் மோசடி செய்ததாக திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் வந்தது.
- போலி அரசு அடையாள அட்டை, போலி பணியாணை, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கற்பக விநாயகர் மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார் (27). இவர் காக்கலூர் பைபாஸ் சாலையில் வாடகைக்கு அறை எடுத்து அரசு வேலை வாங்கி தருவதாக 51 பேரிடம் ரூபாய் ஒரு கோடியே 40 லட்சம் மோசடி செய்ததாக திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் வந்தது.
இதை அடுத்து குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, மோகன் மற்றும் போலீசார் வசந்த் குமார் தேடி வந்தனர்.
இந்நிலையில் வீட்டின் அருகே குற்றப்பிரிவு போலீசார் வசந்த் குமாரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து போலி அரசு அடையாள அட்டை, போலி பணியாணை, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story






