search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக் கடைகளை அகற்ற கலெக்டரிடம் முறையிடலாம்- ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
    X

    டாஸ்மாக் கடைகளை அகற்ற கலெக்டரிடம் முறையிடலாம்- ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

    • தமிழக அரசு மதுபான சில்லரை விற்பனை விதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்த கடைகளை மூடவில்லை.
    • கலெக்டரிடம் முறையிட சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது

    சென்னை:

    டாஸ்மாக் கடை மூடல் தொடர்பாக ராஜா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கு மனுவில், "தமிழக அரசு மதுபான சில்லரை விற்பனை விதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்த கடைகளை மூடவில்லை" என்று கூறி இருந்தார்.

    இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில், "விதிகளை மீறி அமைக்கப்படும் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கலெக்டரிடம் முறையிடலாம். கலெக்டரிடம் முறையிட சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விளக்கத்தை ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்து வைத்தது.

    Next Story
    ×