search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி
    X

    மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி

    • முருகன் இன்று காலை மொபட்டில் வீராணம் சாலையில் தனியார் நூல் மில் அருகே சென்று கொண்டிருந்தார்.
    • படுகாயம் அடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வலசையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள வலசையூர் போயர் தெருவை சேர்ந்தவர் முருகன். (வயது 49). தொழிலாளி.

    இவர் இன்று காலை மொபட்டில் வீராணம் சாலையில் தனியார் நூல் மில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது வலசையூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கவுதம் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தார். அவர் எதிர்பாராத விதமாக முருகனின் மொபட் மீது மோதினார்.

    இதில் படுகாயம் அடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வலசையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது முருகன் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லேசான காயத்துடன் தப்பிய கவுதமனுக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×