என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி
- முருகன் இன்று காலை மொபட்டில் வீராணம் சாலையில் தனியார் நூல் மில் அருகே சென்று கொண்டிருந்தார்.
- படுகாயம் அடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வலசையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள வலசையூர் போயர் தெருவை சேர்ந்தவர் முருகன். (வயது 49). தொழிலாளி.
இவர் இன்று காலை மொபட்டில் வீராணம் சாலையில் தனியார் நூல் மில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது வலசையூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கவுதம் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தார். அவர் எதிர்பாராத விதமாக முருகனின் மொபட் மீது மோதினார்.
இதில் படுகாயம் அடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வலசையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது முருகன் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லேசான காயத்துடன் தப்பிய கவுதமனுக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்