என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து- டிரைவர், கண்டக்டர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
- 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- சிகிச்சையில் இருக்கும் 2 பேரையும் சிகிச்சைக்கு பின் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பலியாகினர். 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் தனியார் பேருந்து டிரைவர் பெருந்துறையை சேர்ந்த மாரசாமி மற்றும் கண்டக்டர் துரைசாமி ஆகியோர் மீது ஊத்துக்குளி போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
281-பொது சாலைகளில் அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், 125-ஏ பிறர் உயிருக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் அலட்சியமாக செயல்படுதல், 106( 1 )அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது சிகிச்சையில் இருக்கும் 2 பேரையும் சிகிச்சைக்கு பின் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Next Story






