search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - வெளியுறவு மந்திரிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
    X

    முதல்வர் ஸ்டாலின்

    தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - வெளியுறவு மந்திரிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

    • இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
    • தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளது.

    சென்னை:

    மத்திய வெளியுறவுத் துறை மந்திரி டாக்டர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

    இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 7 பேரையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இலங்கை கடற்படையினரின் இத்தகைய நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதிக்கிறது. பாக். ஜலசந்தியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்.

    தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை மீனவர்கள் எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை தேவை கேட்டுக் கொண்டுள்ளார்.

    Next Story
    ×