என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • சுதந்திர தின சிராம சபா கூட்டம் நாயுடு குருகு ப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் முருகேசன் (பொறுப்பு) செய்திருந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், பெரு கோபனப்பள்ளி ஊராட்சி யில் சுதந்திர தின சிராம சபா கூட்டம் நாயுடு குருகு ப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பொதுமக்கள் வீட்டு மனை பட்டா, குடிநீர் வசதி, தமிழக அரசு வழங்கும் இலவச வீடு வேண்டியும், முதியோர் உதவித் தொகை, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்றத் தலைவர் முரளிதரனிடம் மனுக்கள் அளித்தனர். இதனை தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இக் கூட்டத்தில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சத்தியா சரவணன், ஊராட்சி வார்டு உறுப்பி னர்கள், ஊரக துறை, வேளாண்மைத்துறை, கல்வித்துறை, வருவாய் துறை, தொண்டு நிறு வனங்கள், மகளீர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட அரசு அலு வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் முருகேசன் (பொறுப்பு) செய்திருந்தார்.

    • இளம் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துதல், வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியங்களை கண்டறிந்து விவசாயிகள் பயன் பெறுதல் உள்ளிட்ட விழிப்புணர்வுடன் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
    • கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தியிடம் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

    மத்தூர்,   

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், களர்பதி ஊராட்சி மலை யாண்டஅள்ளி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு களர்பதி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமையில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்களான தமிழக அரசு வழங்கும் இலவச வீடு, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை கண்டறிந்து கணக்கெடுத்தல், தாய் தந்தை இருவரும் இறந்து ஆதரவற்ற நிலையில் உள்ள பள்ளி மாணவர்களை கண்டறிந்து அரசு வழங்கும் உதவி தொகை பெற வழிவகை செய்தல், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல் , இளம் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துதல், வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியங்களை கண்டறிந்து விவசாயிகள் பயன் பெறுதல் உள்ளிட்ட விழிப்புணர்வுடன் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

    கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தியிடம் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

    இக் கூட்டத்தில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தமிழ் செல்வி கருணாநிதி, வேளாண்மை உதவி இயக்குனர் சிவநதி, தலைமை ஆசிரியர் வெங்கடேசன், மற்றும் வார்டு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இறுதியாக ஊராட்சி செயலர் சரவணன் நன்றி கூறினார்.

    • ஏரிகரை–யோரத்தில் உள்ள பள்ளத்தில் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் கவிழ்ந்து விபத்துக்–குள்ளானது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த 5 பேரை உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைத்திற்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    சூளகிரி,   

    தருமபுரி புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை 67 பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூருவுக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது.

    அந்த பஸ்சை தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் ஜெயவேல் (வயது47) என்பவர் ஓட்டி சென்றார். பஸ்சில் தருமபுரியைச் சேர்ந்த கண்டக்டர் ஜெயராமன் (57) என்பவர் உடன் சென்றார்.

    அந்த பஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த உத்தனப்பள்ளி வழியாக இன்று காலை சென்றது. அப்போது அந்த பஸ் நாழிக்கல் அருகே வந்தபோது பின்னால் வந்த தனியார் கல்லூரி பஸ் ஹாரன் அடித்தபடியே வந்தது.

    உடனே அரசு பஸ் டிரைவர் ஜெயவேல் பஸ்சை ஓரமாக ஓட்டி சென்று பின்னால் வந்த கல்லூரி பஸ்சிற்கு வழி விட்டார். அப்போது அப்பகுதியில் ஏரிகரை–யோரத்தில் உள்ள பள்ளத்தில் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் கவிழ்ந்து விபத்துக்–குள்ளானது.

    இதில் பஸ்சில் இருந்த பயணிகள் அய்யோ, அம்மா என்று அலறினர். அவரது அலறல் சத்தம் கேட்டு முன்னால் சென்ற கல்லூரி வாகனத்தில் இருந்த டிரைவர் மற்றும் மாணவர்கள், அந்த வழியாக சென்றவர்கள் ஆகியோர் திரண்டு வந்து பஸ்சில் இருந்து பயணிகளை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் டிரைவர் ஜெயவேல், கண்டக்டர் ஜெயராமன் உள்பட 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த உத்தனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த 5 பேரை உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைத்திற்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பஸ்சில் இருந்த மற்ற பயணிகளை மீட்டு மாற்று பஸ்சில் போலீசார் ஏற்றி விட்டனர். இதைத்தொடர்ந்து பஸ்சை மீட்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்து நடந்த இடத்தில் அருகே ஏரி உள்ளது. அந்த ஏரி தற்போது தண்ணீரின்றி வறண்டு காணப்படுவதால், பள்ளம் மிகுந்த அந்த ஏரியில் அரசு பஸ் அடுத்தடுத்து உருண்டு கவிழ்ந்து இருந்தால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும், அதிர்ஷ்ட–வசமாக பஸ் ஏரிகரை–யோரத்தில் மட்டும் கவிழ்ந்ததால் பயணிகளின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் சிறு,சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

    இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஜோதியின் தங்கை மகனான ஹரீஷ் (23) என்பவர், அடிக்கடி ஜோதி வீட்டிற்கு வந்து சென்றார்.
    • ஜோதிக்கும், வெங்கடேசுக்கும் இடையே உள்ள கள்ளத்தொடர்பு குறித்து அக்கம்பக்கத்தினர் பேசுவதை கேட்டு ஹரீஷ், தனது பெரியம்மாவை கண்டித்துள்ளார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பேரிகை கொளதாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (வயது39). இவருடைய கணவர் கேசவமூர்த்தி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ஜோதி, அங்குள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    பேரிகை அருகே மகாதேவபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (40), லாரி டிரைவர்.

    இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் வெங்க டேசுக்கும், ஜோதி க்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடை வில் கள்ளத்தொடர்பாக மாறியது.

    இதனிடையே ஜோதியின் தங்கை மகனான ஹரீஷ் (23) என்பவர், அடிக்கடி ஜோதி வீட்டிற்கு வந்து சென்றார்.

    அப்போது ஜோதிக்கும், வெங்கடேசுக்கும் இடையே உள்ள கள்ளத்தொடர்பு குறித்து அக்கம்பக்கத்தினர் பேசுவதை கேட்டு ஹரீஷ், தனது பெரியம்மாவை கண்டித்துள்ளார். இதனால் ஜோதி, கள்ளக்காதலன் வெங்கடேசை தனது வீட்டுக்கு இனிமேல் வரவேண்டாம் என்று கூறி உள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் இரவு, ஜோதியின் வீட்டிற்கு வெங்கடேஷ் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஹரீஷ், எதற்காக நீங்கள் இங்கு வந்தீர்கள்? என்று கேட்டு வெங்கடேசிடம் தகராறு செய்துள்ளார்.

    இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜோதியும், ஹரீசும் கற்கள் மற்றும் கட்டையால் வெங்கடேசை சரமாரியாக அடித்தனர். இதில் வெங்கடேஷ் படுகாயம் அடைந்தார்.

    அதே நேரத்தில் வெங்கடேசின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து வெங்கடேசை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வெங்கடேஷ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசின் கள்ளக்காதலி ஜோதி மற்றும் அவருடைய உறவினர் ஹரீஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சுற்றுபுற பகுதிகளை சுகாதார முறையில் வைத்து கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்றத் தலைவர் சந்தோஷ் குமாரிடம் பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், ஒட்டப்பட்டி ஊராட்சி மாதம்பதி அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் சுதந்திர தின கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் சந்தோஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் தமிழக அரசு வழங்கும் இலவச வீடு வழங்கும் திட்டத்தில் உரிய ஆவணங்கள் கொடுத்து பயன்பெருதல், இளம் வயது திருமணத்தை தடுத்து நிறுத்துதல், பெண் கல்வியின் அவசியம் குறித்தும், வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள குடும்பங்களை கண்டறிந்து பட்டியலில் சேர்த்தல், இடை நின்ற மாணவர்களை மீண்டும் கல்வியை தொடர ஊக்குவித்தல், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் அரசு வழங்கும் மானியத்தை பயன்பன்படுத்தி கொள்ளுதல் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ளுதல், சுற்றுபுற பகுதிகளை சுகாதார முறையில் வைத்து கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டடன.

    இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்றத் தலைவர் சந்தோஷ் குமாரிடம் பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.

    கூட்டத்தில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கலைமணி சுரேஷ், மற்றும் வார்டு உறுப்பினர்கள் கல்வித்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, மீன்வளத் துறை, தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், பொது–மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் ராஜாமணி செய்திருந்தார்.

    • மாவட்ட கலெக்டர் சரயு சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் 4 பேருக்கு விருது வழங்கினார்.
    • விமல் ரவிக்குமார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜேம்ஸ் , ஆனந்த குமார்,ஜெயம்மா ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது.

    சூளகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகாவில் சுதந்திர தின விழாவை யொட்டி மாவட்ட கலெக்டர் சரயு சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் 4 பேருக்கு விருது வழங்கினார்.

    விருதானது வட்டார வளர்ச்சிஅலுவலர் (கி.ஊ) விமல் ரவிக்குமார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜேம்ஸ் , ஆனந்த குமார்,ஜெயம்மா ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அலுவலர்கள் ஊழியர்கள் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    • சிங்காரப்பேட்டை, மத்தூர், சாமல்பட்டி, கல்லாவி பகுதிகளில் பணம் வைத்து சூதாடிய 46 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • மத்தூர் பகுதிகளில் மளிகை, பெட்டிக்கடையில் குட்கா விற்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து சென்று வருகின்றனர்.

    அதன்படி ஓசூர், மத்திகிரி, பாகலூர், சூளகிரி, பர்கூர், போச்சம்பள்ளி, நாகரசம் பட்டி, தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, கெலமங்கலம், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, மத்தூர், சாமல்பட்டி, கல்லாவி பகுதிகளில் பணம் வைத்து சூதாடிய 46 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.9 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் வேப்பனப்பள்ளி, ஓசூர், பாகலூர், சூளகிரி, பர்கூர், கந்திகுப்பம் பாரூர், நாகரசம்பட்டி, ராயக்கேர்டடை, உத்தனபள்ளி, ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, மத்தூர் பகுதிகளில் மளிகை, பெட்டிக்கடையில் குட்கா விற்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதே போல தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த கெலமங்கலம் சீனிவாசன் (வயது35), சிங்காரப்பேட்டை ஜாவித் (26) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், பணம் பறிமுதல் செய்யபட்டன.

    இதே போல கஞ்சா விற்றதாக ஓசூர் வாசவி நகர் குல்லா (20), தளி சாலை சுதர்சன் (23), சிகரலப்பள்ளி கோவிந்தசாமி (40), தம்ம கவுண்டனூர் பவுனம்மாள் (60) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • ஜல்லிகள் பெயர்ந்த கரடுமுரடான சாலையில் வாகனங்களில் செல்வது பெரும் சவாலாக இருந்து வருகிறது.
    • பல நேரங்களில் இச்சாலையில் செல்லும்போது அதிர்வில் வழியிலேயே பிரசவம் பார்க்கும் நிலை ஏற்படு கிறது.

    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தேன்கனி கோட்டை, பெட்ட முகிலாளம், அஞ்செட்டி, உரிகம், கோட்டையூர், கெம்பங்கரை உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதி மற்றும் மலைகளால் சூழப்பட்டுள்ளன.

    இக்கிராமங்களில் சாலை வசதி, கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்று வரை இல்லாத நிலையே இருந்து வருகிறது.

    இந்நிலையில், அஞ்செட்டி அருகே கோட்டையூர், மலையூர் மலைக் கிராமத்தைச் சுற்றி லும் பல்வேறு கிராமங்கள் உள்ளன.

    இப்பகுதி கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் கல்வி, மருத்துவம், அடிப்படை வசதிக்கு கோட்டையூர் வந்து அங்கிருந்து அஞ்செட்டி, உரிகம் உள்ளிட்ட பகுதிக்குச் செல்ல வேண்டும்.

    இதனால், கோட்டையூர்-மலையூர் இடையிலான 4 கிமீ தூரம் சாலை இப்பகுதி மக்களுக்குப் பிரதானமாக உள்ளது. கோட்டையூர் வரை மட்டுமே பேருந்து வசதிகள் உள்ளன. இதனால், மலையூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் கோட்டையூர் வரை இருசக்கர வாகனம் அல்லது சரக்கு வாகனங்களில் பயணிக்க வேண்டிய நிலையுள்ளது.

    குறிப்பாக இப்பகுதியில் மக்களின் பிரதானத் தொழிலாக விவசாயம் உள்ளதால், விளை பொருட்களைச் சந்தைப்படுத்த வெளியூர்களுக்கு இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்கின்றனர்.

    இந்நிலையில், கோட்டையூர்-மட்டியூர் சாலை முழுவதும் ஜல்லிகள் பெயர்ந்து மண் சாலை யாகவும், பல இடங்கள் குண்டும் குழியு மாகவும் மாறி போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை.

    இதனால், இச்சாலையில் செல்லும் வாகனங்கள் பழுதாகிப் பாதி வழியில் நிற்பதும், டயர் பஞ்சராவதும் அடிக்கடி நடந்து வருகிறது.

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கடை கோடியில் உள்ள எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை.

    எந்த அதிகாரியும் எங்கள் குறைகளைத் தீர்க்க வருவதில்லை. கோட்டையூர் - மட்டியூர் சாலை சேதமடைந்து பல ஆண்டாகியும் சீரமைத்தபாடில்லை. மேலும், கோட்டையூருக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே பேருந்துகள் உள்ளதால், அனைவரும் இருசக்கர வாகனங்களை நம்பியே பயணம் செய்கிறோம்.

    ஆனால், ஜல்லிகள் பெயர்ந்த கரடுமுரடான சாலையில் வாகனங்களில் செல்வது பெரும் சவாலாக இருந்து வருகிறது.

    கர்ப்பிணிப் பெண்களை பிரசவத்துக்கு வாகனங்களில் அழைத்துச் செல்லும்போது மிகவும் நிதானமாக வாகனங்களை இயக்க வேண்டிய நிலையுள்ளது. பல நேரங்களில் இச்சாலையில் செல்லும்போது அதிர்வில் வழியிலேயே பிரசவம் பார்க்கும் நிலை ஏற்படுகிறது.

    பல நேரங்களில் அவசர மருத்துவ உதவிக்கு உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலையுள்ளது. நகரப் பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகள் உள்ள நிலையில், எங்கள் கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் புறக்கணிக்கப்படுவது வேதனையாக உள்ளது.

    குறைந்தபட்சம் கரடுமுரடான 4 கிமீ தூரம் தார் சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    • தடுப்பணைக்கட்டி கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள 20 ஆயிரம் ஹெக்டருக்கு மேல் பாசனம் பெறுகின்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • ஒரு மாதத்திற்குள் அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    கிருஷ்ணகிரி, 

    தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சிவசாமியின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நேற்று கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் தலைமையில், சிவசாமியின் படத்திற்கு மலர் தூவி 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    பின்னர் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில தலைவர் ராமகவுண்டர் பேசும் போது தமிழக அரசு கடந்த காலங்களில் கர்நாடகா அரசுடன் பேசி, காவிரியில் இருந்து தண்ணீரை விடுவிக்க வைத்து காய்ந்து போன நெல் பயிர்களை காப்பாற்றுவதற்கான சூழ்நிலையை உருவாக்கினார்கள்.

    தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும், நட்பு ரீதியில் தமிழக முதல்-அமைச்சர் கர்நாடகா முதல் மந்திரியுடன் பேசி தண்ணீரை விடுவிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

    அதே போல், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வாணிஒட்டு என்னும் இடத்தில் தடுப்பணைக்கட்டி கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள 20 ஆயிரம் ஹெக்டருக்கு மேல் பாசனம் பெறுகின்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு மாதத்திற்குள் அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    கூட்டத்தில் நிர்வாகிகள் ராஜா, பெருமாள், அசோக்குமார், வேலு, வரதராஜ், நசீர் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனுமந்த ராஜ் நன்றி கூறினார்.

    • முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 237 மனுக்களை கலெக்டரிடம் வழங்கி னார்கள்.
    • மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், தகுதி யான மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலு வலர்களுக்கு அறிவுறுத்தி னார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 237 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.

    மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், தகுதியான மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து ஓசூர் ஊராட்சி ஒன்றியம் பாகலூர் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் மாலூர் மெயின் ரோடு முதல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் வரையில் 300 மீட்டர் அளவிற்கு சிமெண்ட் சாலை அமைக்க பாகலூர் ஊராட்சி பொது மக்களின் பங்களிப்பு தொகை ரூ.5 லட்சத்து 80 ஆயிரத்திற்கான காசோலையை பாகலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் வழங்கினார்.

    இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பன்னீர்செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விழாவிற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
    • சிறப்பாக பணியாற்றிய மைக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 305 பேருக்கு சான்றிதழும் வழங்கினார்.

    கிருஷ்ணகிரி, 

    இந்திய நாட்டின் 77-வது சுதந்திர தின விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர தினவிழா நடை பெற்றது.

    இந்த விழாவிற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் காவல்துறை அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.

    பின்னர் 23 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கலெக்டர் சரயு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    மேலும் சிறப்பாக பணியாற்றிய மைக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 305 பேருக்கு சான்றிதழும் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூர், வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். செல்லக்குமார், திட்ட இயக்குனர் வந்தனா கார்க், வருவாய் கோட்டாட்சியர் பாபு உட்பட அரசு அலுவலர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • வேனை ஓட்டி வந்த வேப்பனப்பள்ளி ரமேஷ் (38) மற்றும் அருண் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
    • பொதுமக்களிடம் குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்க முயன்றது தெரிந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த சீலேப்பள்ளியில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் மற்றும் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த பிக்கப் வேனை மடக்கி சோதனயிட்டதில், 50 கிலோ அளவிலான, 30 மூட்டைகளில், 1,500 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரிந்தது.

    இதையடுத்து, பிக்கப் வேனை பறிமுதல் செய்த போலீசார், வேனை ஓட்டி வந்த வேப்பனப்பள்ளி ரமேஷ் (38) மற்றும் அருண் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பூசாரிப்பட்டி, காட்டிநாயனப்பள்ளி பகுதிகளில் பொதுமக்களிடம் குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்க முயன்றது தெரிந்தது.

    இது தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×