என் மலர்
கிருஷ்ணகிரி
- கிருஷ்ணகிரியில் ரூ.6 லட்சம் செலவில் குடிநீர் இணைப்பு பணிகள் நடந்தன.
- அசோக்குமார் எம்.எல். ஏ., தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி ஒன்றியம் அகசிப்பள்ளி ஊராட்சி புளியந்தோப்பு கொத்தாலன் கொட்டாய் கிராமத்தில், மாநில நிதிக்குழு மானியம் திட்டத்தில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பில், ஏற்கனவே உள்ள ஆழ்துளைக் கிணறு முதல் சின்டெக்ஸ் டேங்க் வரை குழாய் அமைத்து 25 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்ப டுகிறது. இதற்கான பணியை கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், பூமி பூஜை செய்து நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்ட றிந்தார்.
இந்த நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், ஒன்றிய கவுன்சிலர் ராதா சென்றாயன், ஊர்கவுண்டர் திம்மராயன், கோவிந்தன், மாதன், ரமேஷ், குமார், மாது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஓசூரில் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்பாட்டம் நடைபெற்றது.
- 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ஓசூர் ஒன்றிய அனைத்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூரில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் பவுன்துரை தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு உறுப்பினர் கோபி வரவேற்றார். இதில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் வட்டார தலைவர் பிரசாத், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில செயலாளர் தசரத ராமிரெட்டி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்.வட்டார செயலாளர் ஜனார்த்தனா, தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் மற்றும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் முன்னாள் வட்டார செயலாளர் நாகராஜன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டின்போது, இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண் டும் என்று கோரிக்கை விடுத்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில், 200-க்கும் மேற்பட்ட ஓசூர் ஒன்றிய அனைத்து ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வட்டார தலைவர் நாக பிரசாத் நன்றி கூறினார்.
- கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் தொடங்கியது.
- மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள் மாநில போட்டிகளில் கலந்து கொள்பவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், பள்ளிக்கல்விதுறை சார்பில் வருவாய் மாவட்ட அளவி லான 2 நாள் தடகளப் போட்டி நேற்று தொடங்கி யது. போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கி தொடங்கி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், நகராட்சி தலைவர் பரிதாநவாப், மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் முனி ராஜ், தொடக்க கல்வி அலுவலர் ஆனந்தன், மாவட்ட உடற்கல்வி ஆய்வா ளர் துரை, பெருமாள் மணிமேகலை கல்லூரி இயக்குனர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்போட்டிகள், 14, 17 மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளில், 100, 200, 800, 1500, 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி களைச் சேர்ந்த 1450-க்கும் மேற்பட்ட மாணவ, மாண விகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங் கப்பட உள்ளன. முதலிடம் பெறும் மாணவ, மாண விகள் சென்னையில் நடக்கும் மாநில அளவிலான தடகளப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுகின்றனர். நிகழ்ச்சியில், உடற்கல்வி ஆய்வாளர் துரை, உடற் கல்வி இயக்குனர்கள் கிருஷ்ணன், ஜான்பாய், உடற்கல்வி ஆசிரியர்கள் சத்தியநாதன், பார்த்தீபன், அருளரசு, ரகுசரவணன், ஜோதி ஆகியோர் கவுர விக்கப்பட்டனர்.
இதில், கட்டிகானப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரி தேவி, கவுன்சி லர்கள் ஜெயகுமார், பிர்தோஷ்கான், செந்தில்கு மார், சுனில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சார்பில் மாணவ, மாண வியர் மற்றும் ஆசியர்களுக்கு மதிய உணவு வழங் கப்பட்டது.
- ஊத்தங்கரை அருகே பழுதான தார் சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 5 கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாசனூர் முதல் மாரம்பட்டி கூட்ரோடு சாலை வரை சுமார் 2 கிலோ மீட்டர் தார் சாலை மிகவும் மோசமாக பழுதாகி குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இந்த சாலையை சாசனூர் உள்ளிட்ட 5 கிராம பொது மக்கள் பயன்படுத்தக்கூடிய சாலையாகும். பாம்பாறு அணை கிழக்கு புற கால்வாய் ஓரம் அமைந்துள்ள தார்சாலை கடந்த 5 ஆண்டுகளாக காலமாக பழுதாகி குண்டு குழியமாக காட்சியளிக்கிறது.இப்பகுதி பஸ் வசதி இல்லாத கிராம பகுதியாகும்.
எனவே அப்பகுதி கிராம மக்கள் அனைவரும் தங்களது அத்தியாவசிய தேவையான மருத்துவமனை , பள்ளி மற்றும் கல்லூரிக ளுக்கு செல்லவும், உணவு பொருட்கள் வாங்கவும், விவசாய இடு பொருட்களை நகர் பகுதியில் விற்பனை செய்ய கொண்டு செல்லவும், சிரமபட்டு வருகின்றனர்.
மேலும் தங்களது முக்கிய தேவைகளை பூர்த்தி செய்ய ஊத்தங்கரை போன்ற நகர் பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் அனைவரும் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி இந்த சாலைவழியாக தான் செல்ல . அப்போது அவர்கள் அந்த சாலையில் சேற்றில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது.பெரும்பாலான நேரங்க ளில் உரிய நேரத்திற்கும் உரிய பணிகளை செய்து முடிக்காத அவல நிலைக்குதள்ளபட்டுள்ளதாக இபபகுதி மக்கள் புலம்புகின்றனர்.
எனவே இந்த பழுதான தார் சாலையை சீர் செய்ய மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஒசூர் 37-வது வார்டில் ரூ.67.70 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகளை பிரகாஷ் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
- மேயர் எஸ். சத்யா கலந்து கொண்டார்.
ஓசூர் மாநகராட்சி 37-வது வார்டுக்கு உட்பட்ட எஸ்பிஎம் காலனி, ஜவகர் நகர் ,அம்பாள் நகர், மிடுகரப்பள்ளி பகுதிகளில் ரூ.67.70 மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய், அங்கன்வாடி மையம், , ஆழ்துளை கிணறு, கல்விக் கட்டிடம் பணிகளுக்கு, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், ஜவகர் நகர், அம்பாள் நகரில் திறந்த வெளி உடற்பயிற்சி மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, 37-வது வார்டு கவுன்சிலர் சென்னீரப்பா, கவுன்சிலர் மாதேஸ்வரன் மற்றும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் பகுதி மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது.
- இந்நிகழ்ச்சியில், சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஓசூர் எம்ஜிஆர் கல்லூரி வணிக மேலாண்மை துறை சார்பில், தொழில் முனை வோர் கருத்தரங்கம் நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, எம்ஜிஆர் கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கி பேசுகையில், இன்றைய காலக்கட்டத்தில் வேலை யில்லாமல் இருப்பது மிகவும் கடினம். ஒரு குடும்பம் நிலையான வருமானத்தை ஈட்ட வேண்டும் என்றால் ஆண், பெண் பாகுபாடு இன்றி தொழில்துறையில் முன்னேறுவது அவசியமாக உள்ளது என்று கூறினார்.முன்னதாக, வணிக மேலாண்மை துறைத் தலைவர் மஞ்சுநாத் வர வேற்று பேசினார். இதில், சிறப்பு விருந்தி னராக சுரேஷ் கலந்து கொண்டு, ஸ்டீல் டியுப்ஸ் குறித்த கருத்துரை களை மாணவர்களிடையே தெளிவு படுத்தினார்.
மற்றுமொரு சிறப்பு விருந்தினராக, கார்த்திக் ஏழுமலை கலந்து கொண்டு, தொழில் முனை வோருக் கான தகுதிகள், நோக்கங்கள், அதனால் உண்டாகும் பயன்கள் பற்றிய சிந்தனை களையும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் முனைவோர் அமைப்புகள் எங்கெல்லாம் உள்ளன? என்றும், அந்த அமைப்பு களை எவ்வாறு அணுகுவது என்பது குறித்தும் நிகழ்ச்சியில் பேசினார். இந்நிகழ்ச்சியில், சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முடிவில், வணிக மேலாண்மை துறை பேராசிரியர் பிரகாஷ் நன்றி கூறினார்.
தொழில் முனை வோர் கருத்தரங்கிற்கான ஏற்பாடு களை, வணிக மேலாண்மை துறை பேராசி ரியர்கள் செய்திருந்தனர்.
- தேன்கனிக்கோட்டையில் அருகே அரசு பள்ளியில் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது
- வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே எஸ்.குருபட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. தெலுங்கு ஆங்கில வழியில் 20 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக நாராயணப்பா பணிபுரிந்து வருகிறார்.
இப்பள்ளி வளாகத்தில் கடந்த 20 வருடங்களாக பல்வேறு மரங்கள் அப்பகுதி மக்கள் நட்டு மரங்களை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை பள்ளி வளாகத்தில் உள்ள 3 மரங்களை தலைமை ஆசிரியர் நாராணப்பா ஆட்களை வைத்து வெட்டி அகற்றினார். இதையறிந்த கிராம மக்கள் தலைமை ஆசிரியரிடம் மரங்களை ஏன் வெட்டினீர்கள், மரங்களை வெட்ட அனுமதி பெற்றுள்ளீர்களா என சரமாரியாக கேள்வி கேட்டனர். அதற்கு அவர், பொதுமக்களிடம் உரிய பதில் கூறாமல் சென்றார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து தேன்கனிக்கோட்டை தாசில்தார் பரிமேலழகர், வட்டார கல்வி அலுவலர் கோவிந்தப்பா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் புகார் தெரிவித்தனர். இதன் பேரில் வட்டார கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் தலைமையா சிரியரிடம் நேற்று விசாரணை செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று தாசில்தார் பரிமேலழகர், தலைமை யாசிரியர் நாரா ணப்பாவிடம் விசாரணை நடத்தினார். அப்போது பள்ளி சுற்று சுவரில் மரங்கள் சாய்ந்து விழும் நிலையில் இருந்ததால், அந்த மரங்களை வெட்டியதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சூளகிரி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது,
- மாணவிகளுக்கு பாதுகாப்பு கையேடு வழங்கப்பட்டது
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சோபனா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பி, டி, ஒ, விமல் ரவிக்குமார், வட்டார விரிவாக்க அலுவலர் சமுக நலம் ஜெயம்மா, ஐ.சி.டி.எஸ். விரிவாக்க அலுவலர் சிவ அமிர்தவல்லி, ஒருங்கினைந்த சேவை மைய அலுவலர் சர்வகலா, ஊர்நல அலுவலர் ஜோதிலட்சுமி, மற்றும் அலுவலர்கள் சுகந்தா அமுதா ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் போஸ் எக்பர்ட் (கூல்) , நிறுவனம் மூலம், பணியிடங்களில் பாலியல் வன்கொடுமை தடுப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம், குறித்த விழிப்புணர்வை, அரசு பெண்கள் பள்ளி ஆசிரியர்கள், ஐ.சி.டி, எஸ்- பணியாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
ஐ.சி.டி, எஸ், சிறப்பு விரிவாக்க அலுவ லர்சிவ அமிர்த வல்லி பேசியாதவது;-
பணி செய்பவர்களுக்கு பாதுகாப்பான பணி சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் . புகார் குழு அமைக்கப்பட வேண்டும். ஆண் பெண் பணியாளர்களுக்கு சட்டம் குறித்து தொடர்ச்சியாக விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடத்த வேண்டும் புகார் குழுவுக்கு முறையாக பயிற்சி அளிக்க வேண்டும்.
புகார் குழு செயல்பட போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். தவறுகள் நடந்தால் இந்திய தண்டனைச் சட்டப்படி தவறு இழைத்தவர்களுக்கு தண்டனை கிடைக்க முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினர். இதில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- பஸ்சில் மயங்கி விழுந்த பெண்ணனை ஆஸ்பத்திரியில் சேர்த்த டிரைவரை பொதுமக்கள் பாராட்டினர்
- 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்பு
பெங்களூரிலிருந்து திருப்பத்தூர் நோக்கி, நேற்று மாலை அரசு பஸ் ஒன்று ஓசூர் வழியாக சென்றது. இதில் 60 பயணிகள் இருந்த னர். இதனை முருகன் என்பவர் ஓட்டிச்சென்றார். இந்த நிலையில், கிருஷ்ண கிரி மாவட்டம் ஓசூர் அருகே கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ் சாலையில் பஸ் சென்ற போது, அதில் பயணம் செய்த 50 வயது மதிக்கத்தக்க பெண் பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து, பஸ்சை, டிரைவர் சாலையோரமாக நிறுத்தினார். மேலும், 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து, ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், அந்த பெண்ணின் உயிரை காக்க டிரைவர் துரிதமாக செயல்பட்டு, 60 பயணிக ளுடன் பேருந்தை சூளகிரி யில் உள்ள 24 மணிநேர இலவச அவசர சிகிச்சை மையத்தில் சேர்த்தார்.
அந்தப் பெண், மருத்துவ மனையில் சிகிச்சை அளித்த தில் அவர், உணவு சாப்பிடா ததால் குறைந்த இரத்த அழுத்தத்தின் காரணமாக மயங்கியிருக்கலாம் என கூறப்பட்டது. மேலும், அவர், திருப்பத்தூரை சேர்ந்த பாக்யலட்சுமி (55) எனவும் தெரியவந்தது. ஆஸ்பத்திரியில், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்ட ரின், துரித நடவடிக்கை மற்றும் மனிதாபிமான செயலை பொதுமக்கள் மிகவும் பாராட்டினர்.
- காவேரிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் காந்தி சிலை முன்பு நூதன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- மெழுகுவர்த்தி ஏந்தி கோஷமிட்டனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் காந்தி பிறந்த நாளையொட்டி முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் மகாத்மா காந்தி, பேரறிஞர் அண்ணா, காமராஜர் ஆகியோரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து காவேரிப்பட்டணத்தில் உள்ள காந்தி நூற்றாண்டு மண்டபத்தை மீட்க கோரியும் வட்டார நகர இந்திய தேசிய காங்கிரஸ் அலுவ–லகத்தின் அவல நிலையை தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக காந்தி சிலை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர தலைவர் தவமணி வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் முத்து, மாவட்ட செயலாளர் கோவிந்தன், காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மீனவர் அணி செயலாளர் செல்வம், முன்னாள் கவுன்சிலர் ராதா, முன்னாள் நகர தலைவர் வின்சன்ட் உள்ளிட்ட ஏராள–மான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மகசூலின் அடிப்படையில் காப்பீட்டு தொகை நிர்ணயிக்க வழிவகை செய்யப் பட்டுள்ளது.
- ஏக்கர் 1க்கு அதிகபட்ச இழப்பீடாக, நெல் பயிருக்கு ரூ.36,700 வழங்கப்படும்.
திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 24 பருவ பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) கிருஷ்ணன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் அவர்கள் விருப்பத்தின் பெயரில் பதிவு செய்ய அனுமதி வழங்கப் பட்டுள்ளது. மாவட்ட வாரியான பயிர் வாரியான சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீட்டு தொகை நிர்ணயிக்க வழிவகை செய்யப் பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட் டத்தில் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுதிட்டம் 2023 சிறப்பு பருவம் அரசாணை பெறப் பட்டுள்ளது. சிறப்புபருவம் நெல்- ஐ பயிருக்கு அறிவிப்பு செய்யப்பட்டு காப்பீட்டு கட்டணம் செலுத்து வதற்கான காலக்கெடு வருகிற 31-ந் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், கடன் பெறும் மற்றும் கடன்பெறா விவசாயிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்ப டுத்தும் இப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அங்கீக ரிக்கப்பட்ட முகவர்கள் மூலமா கவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். ஏக்கர் 1க்கு அதிகபட்ச இழப்பீடாக, நெல் பயிருக்கு ரூ.36,700 வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்தில்; ஏற்படும் இழப்புகளுக்கும் பிர்கா வாரியாக சோதனை அறுவடை செய்து இழப்பின் அளவை கணித்து பயிர் காப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இழப்பின் போது காப்பீட்டு தொகை தவறாமல் கிடைக்கும்.
விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள மக்கள் கணினி மையங்களை அணுகி நெல் பயிறுக்கு ஏக்கருக்கு ரூ.550.50- செலுத்தி இத்திட்டத்தில் தங்களது பயிரினை காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும், இத்திட்டத்தில் பயன்பெற ஆதார் எண், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்களை மக்கள் கணினி மையத்திற்கு சென்று பதிவேற்றம் செய்து பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மது விற்கும் சந்து கடைகளையும் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தனியாக இடம் தேர்வு செய்து காய்கறி மார்க்கெட் அமைக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், சூளகிரி போலீசார் உரிமையியல் வழக்குகளில் தலையிட்டு பொதுமக்களுக்கு தேவையின்றி தொல்லைக் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் போலீஸ் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும். கிருஷ்ணகிரி நகராட்சியில் ஏற்கனவே பணிபுரிந்த ஆணையாளர் கடந்த காலங்களில் நடை பெற்ற முறைகேடுகளை கண்டறிந்து தவறு செய்தவர்களை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்து எடுத்தார். பின்னர் காரணம் இன்றி ஆணையாளர் பணியிடை மாற்றப்பட்டார்.
இந்த முறைகேடு வழக்குகளை மத்திய அமலாக்க பிரிவு, மத்திய புலனாய்வு துறையும் விசாரித்து உண்மையை வெளியில் கொண்டுவர வேண்டும். கிருஷ்ணகிரி, காவேரிப் பட்டணத்தில் குண்டும், குழியுமான சாலைகளை புதுப்பித்து, மது விற்கும் சந்து கடைகளையும் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி நகரில் ரவுண்டானா அருகில், காய்கறி கடைகள் வைத்துள்ளதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே தனியாக இடம் தேர்வு செய்து காய்கறி மார்க்கெட் அமைக்க வேண்டும். மகளிர் உரிமைத் தொகை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இளங்கோ தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் தியாகராஜ நாயுடு வரவேற்றார். மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மேகநாதன், மாவட்ட அமைப்புத் தலைவர் திம்மராயன், மாவட்ட அமைப்பு செயலாளர் கோவிந்தன், வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் சோமசுந்தரம், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் அருள், மாநில இளைஞர் சங்க துணைத் தலைவர் மோகன்ராம், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இஸ்மாயில், மாவட்ட துணைத் தலைவர் சின்னபையன், மாவட்ட பொருளாளர் தமிழ்ச்செல்வி வரதராஜன், மாவட்ட துணை செயலாளர் பொன்னப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, ராமலிங்கம் மற்றும் ஒன்றிய செயலா ளர்கள், தலைவர்கள், நகர தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






