என் மலர்
காஞ்சிபுரம்
- பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற நடனப் போட்டியில் அதிகபட்சம் 4 நிமிடங்கள் ஆட அனுமதிக்கப்படுவார்கள்.
- போட்டியில் சினிமா பாடல்களுக்கான நடனம் மற்றும் குழு நடனம் அனுமதி இல்லை.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு கலைப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் ஓரிக்கையில், சதாவரம் பகுதியில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகத்தில் அரசு காதுகோளாதோர் பள்ளி அருகில் வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். இதில் குரலிசைப் போட்டியில் முறையாக இசை பயிலும் சிறார்கள் பங்கு பெறலாம்.
தமிழில் அமைந்த இசை வடிவங்கள் பாட வேண்டும். பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற நடனப் போட்டியில் அதிகபட்சம் 4 நிமிடங்கள் ஆட அனுமதிக்கப்படுவார்கள். இப்போட்டியில் சினிமா பாடல்களுக்கான நடனம் மற்றும் குழு நடனம் அனுமதி இல்லை. நாட்டுப்புற நடன போட்டியில் நமது பாரம்பரிய கரகம், காவடி, பொய்க்கால் குதிரை, தப்பாட்டம் போன்ற நடனங்கள் மட்டும் ஆடப் பெற வேண்டும். ஓவியப் போட்டிக்கு ஓவியத்தாள், வண்ணங்கள் தூரிகைகள் உள்பட தங்களுக்கு தேவையானவற்றை போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும்.
ஓவிய தலைப்புகள் போட்டி தொடங்கும் முன்னர் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மண்டல உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, சதாவரம் மற்றும் தொலைபேசி எண். 044-2729148 அல்லது 8015136911 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
- திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் இரவு வரை இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த வாரத்தில் வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட் டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து விட்டு விட்டு மழை நீடித்து வருகிறது.
இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அவை வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 201 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
இந்த மாவட்டங்களில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. தற்போதைய நிலவரப்படி 631 ஏரிகள் நிரம்பி உள்ளன.
மேலும் 194 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 57 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 27 ஏரிகள் 25 சதவீத்துக்கும் மேலும் நிறைந்து இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் இரவு வரை இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 56 மி.மீட்டர் மழை பதிவானது.
மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-
கும்மிடிப்பூண்டி-44
பள்ளிப்பட்டு-24
ஆர்.கே.பேட்டை-42
சோழவரம்-33
பொன்னேரி-32
புழல்-25
பூந்தமல்லி-39
திருவாலங்காடு-33
திருத்தணி-45
பூண்டி-50
தாமரைப்பாக்கம்-35
திருவள்ளூர்-36
ஊத்துக்கோட்டை-50.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 6.1 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. நேற்று நள்ளிரவு முதல் இன்று வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்தது.
காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், குன்றத்தூர், செம்பரம்பாக்கம், ஓரிக்கை, செவிலிமேடு, ஒளி முகமது பேட்டை, ரங்கசாமி குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
காலையில் பலத்த மழை கொட்டியதையடுத்து இன்று காஞ்சிபுரம் தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 6.1 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வாலாஜாபாத்தில் 22 மி.மீட்டர், உத்திரமேரூரில் 5 மி.மீட்டர், ஸ்ரீபெரும்புதூரில் 19 மி.மீ., குன்றத்தூரில் 36.6 மி.மீ, செம்பரம்பாக்கத்தில் 30.6 மி.மீ மழை பெய்து உள்ளது.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழை பெய்தது. அதிகபட்சமாக 38.4 மி.மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-
செங்கல்பட்டு-28.4 மி.மீ
மதுராந்தகம்-10 மி.மீ
செய்யூர்-32.5 மி.மீ
தாம்பரம்-37.6 மி.மீ
மாமல்லபுரம்-16 மி.மீ
கேளம்பாக்கம்-2 மி.மீ
திருக்கழுக்குன்றம்-38.4 மி.மீ
திருப்போரூர்-5 மி.மீ.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று நள்ளிரவு தொடங்கிய மழை விடிய விடிய கன மழையாக கொட்டித்தீர்த்தது. இன்று காலையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
பலத்த மழை காரணமாக திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார்.
- மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை கொட்டியது.
- நிவாரண முகாமில் மொத்தம் 30 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
காஞ்சிபுரம்:
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை கொட்டியது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து.
மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடந்தபோது சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த புயல் மற்றும் மழை வெள்ளத்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 25 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. இதேபோல் 21 கால்நடைகள் இறந்து இருக்கிறது.
மேலும் 2,668 கோழி மற்றும் வளர்ப்பு பறவைகள் இறந்துள்ளன. நிவாரண முகாமில் மொத்தம் 30 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த தகவலை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
- காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
- 403 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 326 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பி இருக்கிறது.
காஞ்சிபுரம்:
மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. புயல் ஓய்ந்த பின்னரும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலையும் விட்டு, விட்டு மழை கொட்டியது.
பலத்த மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
இதில் 403 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 326 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பி இருக்கிறது.
இதே போல் 139 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 41 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலும் நிரம்பி இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- பக்ரைனில் இருந்து சென்னை வந்த கோல்ப் ஏர்லைன்ஸ் விமானம், ஐதராபாத்திற்கும், இலங்கை, மும்பை, பெங்களூரு, டெல்லி ஆகியவை பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
- மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டது.
ஆலந்தூர்:
மாண்டஸ் புயல் நேற்று இரவு சென்னை அருகே கரையை கடந்து கொண்டிருந்த நேரத்தில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானங்கள் பெங்களூரு மற்றும் ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டது.
அதன்படி பக்ரைனில் இருந்து சென்னை வந்த கோல்ப் ஏர்லைன்ஸ் விமானம், ஐதராபாத்திற்கும், இலங்கை, மும்பை, பெங்களூரு, டெல்லி ஆகியவை பெங்களூருக்கும் திருப்பி அனுப்பப்பட்டன.
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மும்பையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய விமானங்கள், சென்னையில் தரை இறங்க முடியாமல், வானில் நீண்ட நேரம் வட்டமடித்தன.
அதன் பின்பு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உத்தரவின்பேரில், அந்த விமானங்கள் ஐதராபாத்திற்கு திரும்பி சென்றன. சிங்கப்பூர், இந்தூர், மும்பை, துபாய், தோகா உட்பட 14 விமானங்கள் அவ்வாறு திரும்பி சென்றன.
அதேபோல் சென்னை விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் உள்நாட்டு விமானங்களான திருவனந்தபுரம், விஜயவாடா, விசாகப்பட்டினம், கோவை, தூத்துக்குடி, பெங்களூரு, ராஜமுந்திரி உள்ளிட்ட 11 புறப்பாடு விமானங்களும், 8 வருகை விமானங்களும் என மொத்தம் 19 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் 18 விமானங்கள் ஏ.டி.ஆர் எனப்படும் சிறிய ரக விமானங்கள் ஆகும்.
நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை பெங்களூரு மற்றும் ஐதராபாத் திருப்பிவிடப்பட்ட விமானங்கள் இன்று அதிகாலையில் இருந்து, ஒன்றின்பின் ஒன்றாக சென்னை வர தொடங்கி உள்ளன. மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டது.
- காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி சாலை, அதே போல திருப்பருத்திகுன்றம், ஏனாத்தூர் போன்ற பல்வேறு பகுதிகளில் சூறைகாற்றினால் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்திருக்கிறது.
- காஞ்சிபுரம் மேட்டுத்தெரு பகுதியில் சாலையில் விழுந்திருந்த மரத்தினை அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர் மழையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
மாண்டஸ் புயல் கரையைக் கடந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை இன்றும் நீடித்தது.
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை பஸ் நிலையம், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், குன்றத்தூர், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை விடிய விடிய பெய்தது. இன்று காலையிலும் கனமழை தொடர்ந்து நீடித்தது.
தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாநகராட்சி, வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது.
நேற்று இரவு துண்டிக்கப்பட்ட மின்வெட்டு காலை வரை வரவில்லை. காஞ்சிபுரம் நகரில் கலெக்டர் அலுவலகம், மூங்கில் மண்டபம் கலெக்டர் வீடு உள்ள பகுதி ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்து நடுரோட்டில் விழுந்துள்ள நிலையில் அதனை போர்க்கால அடிப்படையில் தீயணைப்பு துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் ஆகியன இணைந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு மின்சாரம் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பஸ் நிலையம் அருகே சாலையின் நடுவே வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் காற்றில் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேட்டு தெரு, மூங்கில் மண்டபம், ரங்கசாமி குளம், பஸ் நிலையம், ரெயில்வே சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி சாலை, அதே போல திருப்பருத்திகுன்றம், ஏனாத்தூர் போன்ற பல்வேறு பகுதிகளில் சூறைகாற்றினால் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்திருக்கிறது.
காஞ்சிபுரம் மேட்டுத்தெரு பகுதியில் சாலையில் விழுந்திருந்த மரத்தினை அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர் மழையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மரம் விழுந்ததன் காரணமாக அச்சாலையில் சற்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருந்தது. தற்போது அவை சீராகி வாகனம் சென்று வருகின்றன. காஞ்சிபுரத்தில் அதிகபட்சமாக 18.9 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை அளவு செ.மீட்டரில் வருமாறு:-
காஞ்சிபுரம்-18.9, வாலாஜாபாத்-9.18, உத்திரமேரூர்-13.8, ஸ்ரீபெரும்புதூர்-13.3, குன்றத்தூர்-14.7, செம்பரம்பாக்கம்-10.7.
- கடந்த வாரம் 315 ஏரிகள் நிரம்பி இருந்த சூழ்நிலையில் தற்போது 353 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் காரணமாக ஒரே நாளில் மட்டும் 33 ஏரிகள் நிரம்பி உள்ளன.
காஞ்சிபுரம்:
ஏரிகள் நிறைந்த மாவட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 919 ஏரிகள் இருக்கிறது. கடந்த வாரம் 315 ஏரிகள் நிரம்பி இருந்த சூழ்நிலையில் தற்போது 353 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் காரணமாக ஒரே நாளில் மட்டும் 33 ஏரிகள் நிரம்பி உள்ளன. 262 ஏரிகளில் 75 சதவீதமும், 242 ஏரிகளில் 50 சதவீதமும், 51 ஏரிகளில் 25 சதவீதமும் தண்ணீர் உள்ளது.
- பலத்த மழை பெய்ததை தொடர்ந்து கடந்த மாதத்தில் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
- பொதுமக்கள் கவனமுடன் இருக்க மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அறிவுறுத்தி உள்ளார்.
காஞ்சிபுரம்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரிகள் உள்ளன.
இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கனஅடி (11.7 டி.எம்.சி.) தண்ணீர் சேமித்து வைக்கலாம். வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து பலத்த மழை பெய்ததை தொடர்ந்து கடந்த மாதத்தில் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதையடுத்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. பின்னர் பலத்த மழை இல்லாததால் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் வங்கக் கடலில் மாண்டஸ் புயல் உருவானதை அடுத்து கடந்த 2 நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
புயல் காரணமாக இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் ஏரிகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை தாண்டி (மொத்த உயரம் 24 அடி) நிரம்பி உள்ளது. கனமழை நீடித்தால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி உபரிநீரை மீண்டும் திறந்துவிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி இன்று மதியம் 12 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதல்கட்டமாக 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளதையடுத்து தண்ணீர் வெளியேறும் அடையாறு ஆற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் கவனமுடன் இருக்க மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அறிவுறுத்தி உள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி ஆகும். ஏரியில் தற்போது 2,695 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.
இன்று காலை நிலவரப் படி ஏரிக்கு நீர்வரத்து 709 கனஅடியாக உள்ளது. பலத்த மழை பெய்தால் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏரிக்கு வரும் நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இதேபோல் பலத்த மழை காரணமாக புழல்-பூண்டி ஏரிகளில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட்டது. புழல் ஏரியின் மொத்த உயரம் 21.20 அடி. இதில் 16.89 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3,300 மி.கனஅடியில் 2,386 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது.
இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 140 கனஅடி தன்ணீர் வருகிறது. பூண்டி ஏரியில் இருந்தும் 100 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டது. ஏற்கனவே பூண்டி ஏரிக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. தற்போது பலத்த மழை பெய்து வருவதால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. எனவே ஏரியில் இருந்து கூடுதலாக உபரி நீரை திறக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். பூண்டி ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 595 கனஅடி தண்ணீர் வருகிறது. ஏரியின் மொத்த உயரம் 35 அடி. இதில் 33 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3,231 மி.கனஅடிக்கு நீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கனஅடி. இதில் 539 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 36 கன அடி மட்டும் தண்ணீர் வருகிறது.
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடி நிரம்பி உள்ளது. புழல்-பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் வெளி யேற்றப்படுவதை தொடர்ந்து கரையோர மக்கள் பாது காப்புடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கிஸ் அறிவுறுத்தி உள்ளார்.
இதைத்தொடர்ந்து ஏரிக்கரை ஓரங்களில் வசிப்பவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து உள்ளனர். ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு முதல் முறையாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 3 ஏரிகளில் இருந்தும் ஒரே நாளில் உபரிநீர் திறக்கப் படுவது குறிப்பிடத்தக்கது.
- காஞ்சிபுரத்தில் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்து உள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- மாவட்டத்தில் 11 அலுவலர்கள் கொண்ட 21 கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பணியாற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார் சத்திரம், ஓரகடம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று முதல் விடிய விடிய கொட்டிதீர்த்தது.
இந்த நிலையில் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்து உள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 11 அலுவலர்கள் கொண்ட 21 கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பணியாற்ற மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். தொடர் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- புயல் மற்றும் பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
ஆலந்தூர்:
வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
புயல் மற்றும் பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை கொழும்பு செல்லும் ஏர் இந்தியா விமானம், அதிகாலை 5:25 மணிக்கு தூத்துக்குடி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12 மணிக்கு கடப்பா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், இரவு 9:15 மணிக்கு மும்பை செல்லும் ஸ்பைஜெட் விமானம் ஆகிய 4 புறப்பாடு விமானங்கள் ரத்த செய்யப்பட்டு இருக்கிறது.
இதேபோல் இலங்கையில் இருந்து அதிகாலை 4:30 மணிக்கு சென்னை வரும் ஏர் இந்தியா விமானம், தூத்துக்குடியில் இருந்து காலை 9:35 மணிக்கு வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 5:50 மணிக்கு கடப்பாவிலிருந்து வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
காற்று, மழையின் வேகத்தை பொறுத்தும், பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தும், மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்படலாம், அல்லது தாமதமாக பயண நேரங்கள் மாற்றி அமைக்கப்படலாம் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை மறுநாள் பலத்த காற்று, கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்களைக் கொண்டு 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து புயல் மற்றும் மழை வெள்ள மீட்பு பணிக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் அளிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை மறுநாள் பலத்த காற்று, கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்களைக் கொண்டு 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இக்குழுக்களில் வருவாய் காவல், உள்ளாட்சி மண்டல்க குழுக்கள் மின்சாரம் உள்ளிட்ட 11 துறை அலுவலர்கள் இடம் பெற்றிருப்பர். இந்த குழுவினர் மழை காலங்களில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்கியிருந்து மீட்பு பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டு உள்ளது.
21 மண்டலக் குழுக்களின் குழு தலைவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் விவரம்:- காஞ்சிபுரம் மாநகராட்சி ஜி.கண்ணன் (ஆணையர் காஞ்சிபுரம்)- 7397372823. காஞ்சிபுரம் சிறுகாவேரிபாக்கம் மற்றும் திருப்புக்குழி குறுவட்டம் ஏழுமலை (துணை ஆட்சியர்) -9677053981, பரந்தூர், சிட்டியம்பாக்கம் மற்றும் கோவிந்த வாடி பிரகாஷ்வேல் (மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்)-7338801259.
வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் பிரமிளா (நேர்முக உதவியாளர் சத்துணவு திட்டம்)-7402606004, தென்னேரி சுமதி (தனித்துணை ஆட்சியர்) -9840479712, மாகரல்- கணேசன் (நேர்முக உதவியாளர் (வேளாண்மை)-9894215521. உத்திரமேரூர் பேரூராட்சி - ராமசந்திரன் (உதவி.செயற்பொ றியாளர்)-7402606000, திருப்புலிவனம், களியாம்பூண்டி கனிமொழி (வருவாய் கோட்டாட்சியர்) -9445000413. சாலவாக்கம் அரும்புலியூர் மற்றும் குண்ணவாக்கம் இளங்கோவன் (இணைஇயக்குநர் வேளாண்மை)- 9842007125, திருபெரும்புதூர் பேரூராட்சி மற்றும் செல்வமதி (தனித்துணைஆட்சியர் (நி.எ) மண்ணூர்) -9842023432.
மதுரமங்கலம், சுங்குவார்சத்திரம் புஷ்பா- (நேர்முக, உதவியாளர்)- 9443395125. வல்லம் மற்றும் தண்டலம் மதுராந்தகி-(சிறப்பு மாவட்ட வருவாய அலுவலர்)-7305955670.
படப்பை, மணிமாறன் (உதவி இயக்குநர்)- 7402606005, படப்பை சிவதாஸ் (உதவி ஆணையர்) -9360879271, செரப்பணஞ்சேரி மணிமங்கலம்-எம்.சத்தியா (ஆய்வுக்குழு அலுவலர்) -9566420921. கொளப்பாக்கம் (மவுலிவாக்கம், கொளுத்து வாஞ்சேரி, கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், ஐயப்பந்தாங்கல், தெள்ளியகரம், பரணிப்புத்தூர், சின்னப்பணிச்சேரி, பெரியப்பணிச்சேரி, சீனிவாசபுரம்) பாபு மாவட்ட, வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்- 9445000168.
திருமுடிவாக்கம் மற்றும் பூந்தண்டலம் பஞ்சாயத்து யசோதரன் (மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்)- 9952227179, மாங்காடு குறுவட்டம் (கொல்லச்சேரி, மலையம்பாக்கம், பொழு முனிவாக்கம், தரப்பாக்கம், இரண்டாம் கட்டளை, தண்டலம், கோவூர்சிக் கராயபுரம், மூன்றாம் கட்டளை பகுதிகள்) கோபி (உதவி இயக்குநர் )-7402606006.
மாங்காடு நகராட்சி பகுதிகள் கே.கணேஷ் (கூடுதல் நேர்முக உதவியாளர்)-9840281502, குன்றத்தூர் நகராட்சி ஜெசரவணகண்ணன், (வருவாய் கோட்ட அலுவலர் திருபெரும்புதூர்)- 9444964899.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






