என் மலர்
காஞ்சிபுரம்
கொட்டிவாக்கம் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது கார் எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.
திருவான்மியூர்:
விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் ரித்திஷ் (26). இவரது நண்பர்கள் ரஞ்சித், ரஞ்சிதா, குமரன், காவியா.
நேற்று இரவு காவியாவின் பிறந்தநாளை கொண்டாட ரித்திஷின் சொகுசு காரில் 5 பேரும் மெரினா கடற்கரைக்கு சென்றனர். பின்னர் பிறந்த நாளை கொண்டாடி விட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு வீடு திரும்பினர். காரை ரித்திஷ் ஓட்டினார்.
மெரினா கடற்கரையில் இருந்து பாலவாக்கம் நோக்கி கிழக்கு கடற்கரை சாலை வழியாக கார் சென்று கொண்டு இருந்தது.
நீலாங்கரை அடுத்த கொட்டிவாக்கம் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது கார் எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் தடுப்பு சுவரில் இருந்த மின் கம்பம் சரிந்து கீழே விழுந்தது. அந்த நேரத்தில் மின்சாரம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மின் கம்பம் நடு ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் அடையாறு போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் நடுரோட்டில் கிடந்த மின் கம்பியையும், காரையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
இதுகுறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் ரித்திஷ் (26). இவரது நண்பர்கள் ரஞ்சித், ரஞ்சிதா, குமரன், காவியா.
நேற்று இரவு காவியாவின் பிறந்தநாளை கொண்டாட ரித்திஷின் சொகுசு காரில் 5 பேரும் மெரினா கடற்கரைக்கு சென்றனர். பின்னர் பிறந்த நாளை கொண்டாடி விட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு வீடு திரும்பினர். காரை ரித்திஷ் ஓட்டினார்.
மெரினா கடற்கரையில் இருந்து பாலவாக்கம் நோக்கி கிழக்கு கடற்கரை சாலை வழியாக கார் சென்று கொண்டு இருந்தது.
நீலாங்கரை அடுத்த கொட்டிவாக்கம் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது கார் எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் தடுப்பு சுவரில் இருந்த மின் கம்பம் சரிந்து கீழே விழுந்தது. அந்த நேரத்தில் மின்சாரம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மின் கம்பம் நடு ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் அடையாறு போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் நடுரோட்டில் கிடந்த மின் கம்பியையும், காரையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
இதுகுறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
துரைப்பாக்கம் அருகே டிரைவரை தாக்கி ஆட்டோ கடத்தலில் ஈடுப்பட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவான்மியூர்:
பாலவாக்கம், கெனால்புரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் சேட்டு. சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார்.
இவர் லோடு ஏற்றுவதற்காக கந்தன்சாவடி நோக்கி சென்றார். அப்போது 5 பேர் கும்பல் சேட்டுவை வழி மறித்து தாக்கினர். பின்னர் லோடு ஆட்டோவை பறித்து கடத்தி சென்று விட்டனர்.
இதுகுறித்து சேட்டு, துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
துரைப்பாக்கத்தை அடுத்த மேட்டுக்குப்பம் வி.ஜி.பி. அவன்யூ 6-வது தெருவை சேர்ந்தவர் ரோகித். சாப்ட்வேர் என்ஜினீயர். நண்பர் 4 பேருடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.
கடந்த வாரம் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றனர். நேற்று திரும்பி வந்த போது வீட்டு கதவு உடைந்து கிடந்தது. அறையில் இருந்த 3 லேப்-டாப், ரூ.5 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது.
மதுராந்தகம் அருகே பெண் கொடுக்க மறுத்ததால் காதல் தீக்குளித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மாணவியும் தற்கொலை செய்து கொண்டார்.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே உள்ள செட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் கவிதாசன். இவரது மகள் செல்வி என்கிற நுண்மதி.
பிளஸ் 1 படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (18). விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவரும் மாணவி செல்வியும் காதலித்து வந்தனர்.
செல்வியை திருமணம் செய்து கொள்ள விரும்பிய விஜயகுமார் நேற்று காலை அவரது தந்தை கவிதாசனிடம் சென்று பெண் கேட்டார்.
அதற்கு கவிதாசன், படிக்கிற பெண்ணை திருமணம் செய்து கொடுக்க கேட்கிறாயா இந்த வயதில் காதல் தேவையா என்று திட்டி பெண் கொடுக்க மறுத்து விட்டார்.
இதனால் விரக்தியுடன் வீட்டுக்கு வந்த விஜயகுமார் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். தீயில் கருகி அலறிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த செல்விக்கு விஜயகுமார் தீக்குளித்த தகவல் தெரிந்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தார். காதலன் இறந்து விடுவார் என்ற மனவேதனையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய விஜயகுமார் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே உள்ள செட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் கவிதாசன். இவரது மகள் செல்வி என்கிற நுண்மதி.
பிளஸ் 1 படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (18). விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவரும் மாணவி செல்வியும் காதலித்து வந்தனர்.
செல்வியை திருமணம் செய்து கொள்ள விரும்பிய விஜயகுமார் நேற்று காலை அவரது தந்தை கவிதாசனிடம் சென்று பெண் கேட்டார்.
அதற்கு கவிதாசன், படிக்கிற பெண்ணை திருமணம் செய்து கொடுக்க கேட்கிறாயா இந்த வயதில் காதல் தேவையா என்று திட்டி பெண் கொடுக்க மறுத்து விட்டார்.
இதனால் விரக்தியுடன் வீட்டுக்கு வந்த விஜயகுமார் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். தீயில் கருகி அலறிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த செல்விக்கு விஜயகுமார் தீக்குளித்த தகவல் தெரிந்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தார். காதலன் இறந்து விடுவார் என்ற மனவேதனையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய விஜயகுமார் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருவதால் சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஆலந்தூர்:
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு வருகிறார். அவர், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுடெல்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் செல்கிறார்.
குன்னூரில் நடைபெறும் ராணுவ விழாவில் கலந்துகொண்டு விட்டு மாலை 4.30 மணிக்கு கோவையில் இருந்து தனி விமானத்தில் சென்னைக்கு புறப்படுகிறார். மாலை 5.30 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்து சேருகிறார்.
விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் காரில் ராஜ்பவன் கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு செல்கிறார். இரவு 7 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து காரில் பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்துக்கு ஜனாதிபதி வருகிறார். அங்கு விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விட்டு இரவு 9 மணிக்கு மீண்டும் கிண்டி கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு செல்கிறார்.
2-வது நாளான நாளை (சனிக்கிழமை) அதிகாலை 6.40 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் இருந்து பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்துக்கு வருகிறார். அங்கு ராணுவ பயிற்சி முடித்துவிட்டு பணிக்கு செல்லும் அதிகாரிகள் விழாவில் கலந்துகொள்கிறார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மதியம் 12 மணிக்கு பரங்கிமலையில் இருந்து சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்கும் வங்கி விழாவில் கலந்துகொள்கிறார். மதியம் 1.45 மணிக்கு விழாவை முடித்துக்கொண்டு மதியம் 2.15 மணிக்கு மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்துக்கு வந்து சேருகிறார்.
அங்கு வழியனுப்பு விழா நடக்கிறது. அதன்பின்னர் மதியம் 2.20 மணிக்கு தனி விமானத்தில் பிரணாப் முகர்ஜி டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு டெல்லியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு சிறப்பு படையை சேர்ந்த 40 அதிகாரிகள் சென்னை வந்தனர். அவர்கள் ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இடங்கள், விமான நிலையம், ராணுவ பயிற்சி மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சிறப்பு படை அதிகாரிகள், விமான நிலைய ஆணையக அதிகாரிகள், சென்னை மாநகர போலீஸ் உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழிற்படை அதிகாரிகள், மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஜனாதிபதி வருகையின் போது செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. ஜனாதிபதி வருகைக்காக சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இதேபோல் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கிண்டி கவர்னர் மாளிகைக்கும், கிண்டியில் இருந்து பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்துக்கும் ஜனாதிபதி வந்து செல்லும் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி செய்ய வேண்டும்? என்பது குறித்து பாதுகாப்பு ஒத்திகையும் நடைபெற்றது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு வருகிறார். அவர், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுடெல்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் செல்கிறார்.
குன்னூரில் நடைபெறும் ராணுவ விழாவில் கலந்துகொண்டு விட்டு மாலை 4.30 மணிக்கு கோவையில் இருந்து தனி விமானத்தில் சென்னைக்கு புறப்படுகிறார். மாலை 5.30 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்து சேருகிறார்.
விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் காரில் ராஜ்பவன் கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு செல்கிறார். இரவு 7 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து காரில் பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்துக்கு ஜனாதிபதி வருகிறார். அங்கு விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விட்டு இரவு 9 மணிக்கு மீண்டும் கிண்டி கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு செல்கிறார்.
2-வது நாளான நாளை (சனிக்கிழமை) அதிகாலை 6.40 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் இருந்து பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்துக்கு வருகிறார். அங்கு ராணுவ பயிற்சி முடித்துவிட்டு பணிக்கு செல்லும் அதிகாரிகள் விழாவில் கலந்துகொள்கிறார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மதியம் 12 மணிக்கு பரங்கிமலையில் இருந்து சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்கும் வங்கி விழாவில் கலந்துகொள்கிறார். மதியம் 1.45 மணிக்கு விழாவை முடித்துக்கொண்டு மதியம் 2.15 மணிக்கு மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்துக்கு வந்து சேருகிறார்.
அங்கு வழியனுப்பு விழா நடக்கிறது. அதன்பின்னர் மதியம் 2.20 மணிக்கு தனி விமானத்தில் பிரணாப் முகர்ஜி டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு டெல்லியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு சிறப்பு படையை சேர்ந்த 40 அதிகாரிகள் சென்னை வந்தனர். அவர்கள் ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இடங்கள், விமான நிலையம், ராணுவ பயிற்சி மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சிறப்பு படை அதிகாரிகள், விமான நிலைய ஆணையக அதிகாரிகள், சென்னை மாநகர போலீஸ் உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழிற்படை அதிகாரிகள், மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஜனாதிபதி வருகையின் போது செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. ஜனாதிபதி வருகைக்காக சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இதேபோல் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கிண்டி கவர்னர் மாளிகைக்கும், கிண்டியில் இருந்து பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்துக்கும் ஜனாதிபதி வந்து செல்லும் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி செய்ய வேண்டும்? என்பது குறித்து பாதுகாப்பு ஒத்திகையும் நடைபெற்றது.
பரங்கிமலையில் வங்கியில் போலி ‘செக்’ கொடுத்து ரூ.2 கோடி வாங்க முயற்சி செய்த தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்
ஆலந்தூர்:
பரங்கிமலையை அடுத்த பட்ரோடு பகுதியில் தனியார் வங்கி உள்ளது. நேற்று காலை நந்தம்பாக்கத்தை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ஆனந்தன் ரூ.2 கோடிக்கான செக்கை பணமாக மாற்ற வங்கி ஊழியரிடம் கொடுத்தார். செக்கில் பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவனம் அவருக்கு பணம் கொடுத்தது போல் இருந்தது.
சந்தேகம் அடைந்த வங்கி ஊழியர் செக்கை சரிபார்த்த போது அது போலியானது என்பது தெரிந்தது. பெங்க ளூரில் உள்ள தனியார் நிறுவனத்தின் செக் போன்று அச்சடிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து பரங்கிமலை போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஆனந்தனை கைது செய்தனர். அவர் கொடுத்த செக்கில் வங்கி பெயர் இல்லாததால் சிக்கிக் கொண்டார்.
ஆனந்தனிடம் நடத்திய விசாரணையில் போலி செக் விவகாரதில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.
இதையடுத்து அவரது நண்பர்கள் கே.கே.நகரை சேர்ந்த வெங்கடேசன், மாங்காடு சீனிவாசன், செல்லூர் ஜெயக்குமார், கோடம்பாக்கம் காந்தி ராஜன், சின்மயா நகர் சுதாநந்தன், அண்ணாநகர் ராஜேந்திரன், தேனி முரளி, அருப்புக்கோட்டை ஆசைத் தம்பி ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
அவர்களுக்கு போலி செக் கிடைத்தது எப்படி? எங்கு தயாரிக்கப்பட்டது? இதுபோல் வேறு எந்த வங்கியிலும் போலி செக் கொடுத்து பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டு உள் ளார்களா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்.
போலி செக்கில் குறிப் பிடப்பட்டுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் யாரேனும் மோசடி கும்பலுக்கு உதவி இருக்கலாம் என்றும் போலீ சார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
பரங்கிமலையை அடுத்த பட்ரோடு பகுதியில் தனியார் வங்கி உள்ளது. நேற்று காலை நந்தம்பாக்கத்தை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ஆனந்தன் ரூ.2 கோடிக்கான செக்கை பணமாக மாற்ற வங்கி ஊழியரிடம் கொடுத்தார். செக்கில் பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவனம் அவருக்கு பணம் கொடுத்தது போல் இருந்தது.
சந்தேகம் அடைந்த வங்கி ஊழியர் செக்கை சரிபார்த்த போது அது போலியானது என்பது தெரிந்தது. பெங்க ளூரில் உள்ள தனியார் நிறுவனத்தின் செக் போன்று அச்சடிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து பரங்கிமலை போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஆனந்தனை கைது செய்தனர். அவர் கொடுத்த செக்கில் வங்கி பெயர் இல்லாததால் சிக்கிக் கொண்டார்.
ஆனந்தனிடம் நடத்திய விசாரணையில் போலி செக் விவகாரதில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.
இதையடுத்து அவரது நண்பர்கள் கே.கே.நகரை சேர்ந்த வெங்கடேசன், மாங்காடு சீனிவாசன், செல்லூர் ஜெயக்குமார், கோடம்பாக்கம் காந்தி ராஜன், சின்மயா நகர் சுதாநந்தன், அண்ணாநகர் ராஜேந்திரன், தேனி முரளி, அருப்புக்கோட்டை ஆசைத் தம்பி ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
அவர்களுக்கு போலி செக் கிடைத்தது எப்படி? எங்கு தயாரிக்கப்பட்டது? இதுபோல் வேறு எந்த வங்கியிலும் போலி செக் கொடுத்து பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டு உள் ளார்களா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்.
போலி செக்கில் குறிப் பிடப்பட்டுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் யாரேனும் மோசடி கும்பலுக்கு உதவி இருக்கலாம் என்றும் போலீ சார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
மதுராந்தகம் அருகே திருமண வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் உறவினர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
மதுராந்தகம்:
மதுராந்தகத்தை அடுத்த அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னி. இவரது மகள் சந்தியாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த அம்புரோசுக்கும் இன்று திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து இருந்தனர்.
முன்னதாக நேற்று மாலை மணமகள் வீட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உறவினர்கள் கூட்டத்தால் திருமண வீடு நிரம்பி வழிந்தது.
அப்போது திருமண விருந்திற்காக சமையல் செய்த அறையில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பந்தலில் பிடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த திருமண வீட்டிற்கு வந்தவர்களும், மணமக்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்ததும் மதுராந்தகம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் திருமண வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் பணம் எரிந்து சாம்பலானது.
இதைத் தொடர்ந்து இன்று காலை மணமகள் வீட்டின் அருகே மற்றொரு இடத்தில் மணமேடை அமைக்கப்பட்டது. அதில் சந்தியா-அம்புரோஸ் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.
மதுராந்தகத்தை அடுத்த அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னி. இவரது மகள் சந்தியாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த அம்புரோசுக்கும் இன்று திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து இருந்தனர்.
முன்னதாக நேற்று மாலை மணமகள் வீட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உறவினர்கள் கூட்டத்தால் திருமண வீடு நிரம்பி வழிந்தது.
அப்போது திருமண விருந்திற்காக சமையல் செய்த அறையில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பந்தலில் பிடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த திருமண வீட்டிற்கு வந்தவர்களும், மணமக்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்ததும் மதுராந்தகம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் திருமண வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் பணம் எரிந்து சாம்பலானது.
இதைத் தொடர்ந்து இன்று காலை மணமகள் வீட்டின் அருகே மற்றொரு இடத்தில் மணமேடை அமைக்கப்பட்டது. அதில் சந்தியா-அம்புரோஸ் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்துக்கு காவிரி நீர் கிடைக்க உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து உள்ளோம் என்று புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்:
புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரியில் தண்ணீரை திறந்து விட வேண்டும். அணையில் போதிய நீர் இருப்பு உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் காவிரி நீரை நம்பி உள்ளனர். காரைக்கால் மாவட்டத்துக்கு காவிரி நீர் கிடைக்க உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து உள்ளோம்.
இதுபற்றி பிரதமரிடமும், அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் சென்று முறையிடுவோம்.
நான் புதுவை மாநிலத்தில் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும்? எந்த எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரியில் தண்ணீரை திறந்து விட வேண்டும். அணையில் போதிய நீர் இருப்பு உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் காவிரி நீரை நம்பி உள்ளனர். காரைக்கால் மாவட்டத்துக்கு காவிரி நீர் கிடைக்க உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து உள்ளோம்.
இதுபற்றி பிரதமரிடமும், அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் சென்று முறையிடுவோம்.
நான் புதுவை மாநிலத்தில் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும்? எந்த எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஆலந்தூர்:
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது.
தமிழகத்துக்கு கர்நாடகா தண்ணீர் தராமல் இருந்த போது தமிழர்கள் பொறுமையோடு அமைதியான முறையில் போராடினார்கள். அதேபோல், கர்நாடக மக்களுக்கும் பொறுமை தேவை. அதுதான் எல்லோருக்கும் நல்லது.
கர்நாடகாவில் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது கர்நாடக அரசின் கடமை. அது கர்நாடக முதல்-மந்திரியின் பொறுப்பு.
தமிழக பா.ஜனதாவை பொறுத்தவரை தற்போது கர்நாடகா திறந்துவிட்டுள்ள தண்ணீர் போதாது. இன்னும் கூடுதலாக தண்ணீர் தரவேண்டும்.
குளச்சல் இனையம் துறைமுகம் வரக்கூடாது என்பது குறித்து சிலர் போராடி வருகிறார்கள். யாருக்கு பாதிப்பு என்ற விவரம் தெரியாமலேயே அவர்கள் போராடுகிறார்கள். அவர்களை தூண்டி விடுவதில் அயல்நாட்டு சதி உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது.
தமிழகத்துக்கு கர்நாடகா தண்ணீர் தராமல் இருந்த போது தமிழர்கள் பொறுமையோடு அமைதியான முறையில் போராடினார்கள். அதேபோல், கர்நாடக மக்களுக்கும் பொறுமை தேவை. அதுதான் எல்லோருக்கும் நல்லது.
கர்நாடகாவில் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது கர்நாடக அரசின் கடமை. அது கர்நாடக முதல்-மந்திரியின் பொறுப்பு.
தமிழக பா.ஜனதாவை பொறுத்தவரை தற்போது கர்நாடகா திறந்துவிட்டுள்ள தண்ணீர் போதாது. இன்னும் கூடுதலாக தண்ணீர் தரவேண்டும்.
குளச்சல் இனையம் துறைமுகம் வரக்கூடாது என்பது குறித்து சிலர் போராடி வருகிறார்கள். யாருக்கு பாதிப்பு என்ற விவரம் தெரியாமலேயே அவர்கள் போராடுகிறார்கள். அவர்களை தூண்டி விடுவதில் அயல்நாட்டு சதி உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுராந்தகம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்
மதுராந்தகம்:
செய்யூரை அடுத்த சூனாம்பேடு அருகே உள்ள ஈசூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வழிபாட்டுக்காக வைக்கப்பட்டு இருந்தது.
நேற்று மாலை விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடப்பாக்கம் கடல் பகுதியில் கரைக்கப்பட்டது. இதில் அதே பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் (வயது 40), ராஜ் (33), தமிழ்மணி ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் 3 பேரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். சூனாம்பேடு அருகே சென்றபோது எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கல்யாணசுந்தரம், ராஜ், தமிழ்மணி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். சூனாம்பேடு போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கல்யாணசுந்தரம், ராஜ் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். தமிழ்மணி மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்யூரை அடுத்த சூனாம்பேடு அருகே உள்ள ஈசூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வழிபாட்டுக்காக வைக்கப்பட்டு இருந்தது.
நேற்று மாலை விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடப்பாக்கம் கடல் பகுதியில் கரைக்கப்பட்டது. இதில் அதே பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் (வயது 40), ராஜ் (33), தமிழ்மணி ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் 3 பேரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். சூனாம்பேடு அருகே சென்றபோது எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கல்யாணசுந்தரம், ராஜ், தமிழ்மணி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். சூனாம்பேடு போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கல்யாணசுந்தரம், ராஜ் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். தமிழ்மணி மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை விமான நிலையத்தில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு தாய்லாந்து செல்லும் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் ஏற வந்த பயணிகளின் உடமைகளை சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையை சேர்ந்த அப்துல் ஹக்கிம் ஜாபரின் கைப்பையை திறந்து பார்த்தனர். அதில் கட்டுக் கட்டாக அமெரிக்க டாலர், யூரோ பணம் இருந்தது. பணத்திற்கான ஆவணம் அவரிடம் இல்லை.
இதையடுத்து வெளிநாட்டு பணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய ரூபாயில் இதன் மொத்த மதிப்பு ரூ. 25 லட்சம் ஆகும்.
அப்துல் ஹக்கிம் ஜாபர் சுற்றுலா விசாவில் தாய்லாந்து செல்ல இருந்தார். அவருக்கு வெளிநாட்டு பணம் கிடைத்தது எப்படி? யாருக்கு கொண்டு செல்கிறார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு தாய்லாந்து செல்லும் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் ஏற வந்த பயணிகளின் உடமைகளை சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையை சேர்ந்த அப்துல் ஹக்கிம் ஜாபரின் கைப்பையை திறந்து பார்த்தனர். அதில் கட்டுக் கட்டாக அமெரிக்க டாலர், யூரோ பணம் இருந்தது. பணத்திற்கான ஆவணம் அவரிடம் இல்லை.
இதையடுத்து வெளிநாட்டு பணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய ரூபாயில் இதன் மொத்த மதிப்பு ரூ. 25 லட்சம் ஆகும்.
அப்துல் ஹக்கிம் ஜாபர் சுற்றுலா விசாவில் தாய்லாந்து செல்ல இருந்தார். அவருக்கு வெளிநாட்டு பணம் கிடைத்தது எப்படி? யாருக்கு கொண்டு செல்கிறார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புரசைவாக்கத்தில் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி விட்டு சிங்கப்பூருக்கு தப்ப முயன்ற என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:
மடிப்பாக்கம் தேவி நகரை சேர்ந்தவர் திலிப்குமார் (28) சிவில் என்ஜினீயரான இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். திருவல்லிக்கேணியை சேர்ந்த டாக்டர் ஒருவரின் மகளுக்கும், திலீப் குமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண பத்திரிகை அடிக்கப்பட்டு உற்றார் உறவினர்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த 4-ந்தேதி புரசைவாக்கத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் வைத்து திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த நிலையில், திடீரென மாப்பிள்ளை திலிப்குமார், திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று கூறினார்.
ஏற்கனவே வழங்கப்பட்ட வரதட்சணையை விட கூடுதலாக பணம், நகை மற்றும் பொருட்கள் வேண்டும் என்றும் மணமகன் திலிப்குமார் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது பற்றி பெண்ணின் தந்தை நாராயணன் பரங்கிமலை துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.
இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. மடிப்பாக்கம் உதவி கமிஷனர் கோவிந்தராஜ், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மணமகன் திலிப்குமாருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனை தொடர்ந்து திலிப்குமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருமணத்தை நிறுத்தி விட்டு தான் பணிபுரியும் சிங்கப்பூருக்கு தப்பிச் செல்ல திலிப்குமார், திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. அதற்குள் போலீசில் சிக்கிக்கொண்டார்.
மடிப்பாக்கம் தேவி நகரை சேர்ந்தவர் திலிப்குமார் (28) சிவில் என்ஜினீயரான இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். திருவல்லிக்கேணியை சேர்ந்த டாக்டர் ஒருவரின் மகளுக்கும், திலீப் குமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண பத்திரிகை அடிக்கப்பட்டு உற்றார் உறவினர்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த 4-ந்தேதி புரசைவாக்கத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் வைத்து திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த நிலையில், திடீரென மாப்பிள்ளை திலிப்குமார், திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று கூறினார்.
ஏற்கனவே வழங்கப்பட்ட வரதட்சணையை விட கூடுதலாக பணம், நகை மற்றும் பொருட்கள் வேண்டும் என்றும் மணமகன் திலிப்குமார் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது பற்றி பெண்ணின் தந்தை நாராயணன் பரங்கிமலை துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.
இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. மடிப்பாக்கம் உதவி கமிஷனர் கோவிந்தராஜ், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மணமகன் திலிப்குமாருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனை தொடர்ந்து திலிப்குமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருமணத்தை நிறுத்தி விட்டு தான் பணிபுரியும் சிங்கப்பூருக்கு தப்பிச் செல்ல திலிப்குமார், திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. அதற்குள் போலீசில் சிக்கிக்கொண்டார்.
காஞ்சீபுரம் அருகே கல்குவாரி குட்டையில் குழந்தையுடன் குதித்த ஆசிரியரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டனர். இதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அடுத்த மாகரல் மேட்டு காலனியை சேர்ந்தவர் பெருமாள். தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி. இவர்களுக்கு 2 வயதில் தஞ்சனா என்ற மகள் இருந்தாள்.
கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இன்று காலை பெருமாள் குழந்தை தஞ்சனாவை தூக்கி கொண்டு அருகில் உள்ள கல்குவாரிக்கு சென்றார். அங்கிருந்த குட்டையில் குழந்தையை கட்டி பிடித்தவாறு குதித்தார்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் குட்டையில் குதித்து பெருமாள், குழந்தையை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் குழந்தை தஞ்சனா இறந்து இருந்தது. பெருமாளை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
காஞ்சீபுரம் அடுத்த மாகரல் மேட்டு காலனியை சேர்ந்தவர் பெருமாள். தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி. இவர்களுக்கு 2 வயதில் தஞ்சனா என்ற மகள் இருந்தாள்.
கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இன்று காலை பெருமாள் குழந்தை தஞ்சனாவை தூக்கி கொண்டு அருகில் உள்ள கல்குவாரிக்கு சென்றார். அங்கிருந்த குட்டையில் குழந்தையை கட்டி பிடித்தவாறு குதித்தார்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் குட்டையில் குதித்து பெருமாள், குழந்தையை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் குழந்தை தஞ்சனா இறந்து இருந்தது. பெருமாளை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.






