என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம்:
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் மொத்தம் 11 சாராய ஆலைகள் உள்ளன. அதில் 7 ஆலைகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் உள்ளது. அந்த சாராய ஆலைகளை கொண்டு வந்தது தி.மு.க..
தி.மு.க.வால் செயல்படும் மது ஆலையால் வருடத்திற்கு 2 லட்சம் பேர் இறக்கின்றனர்.
காஞ்சிபட்டு உடுத்தினால் பெண்கள் தேவதையாக மாறி விடுவார்கள். ஆனால் தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் போலி பட்டு சேலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் காரணமாக நெசவு தொழில் நலிந்து வருகிறது.
வெளி மாநிலத்தில் இருந்து பட்டு புடவை வாங்க வரும் பொதுமக்களிடம் போலி பட்டு சேலைகள் விற்பனை செய்ய ஒரு கூட்டம் சங்கமே உருவாக்கியுள்ளது. அதனை தடுத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காஞ்சீபுரம் பெருநக ராட்சியை மாநகராட்சியாக மாற்ற தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு விவசாயி மீண்டும் தமிழ்நாட்டை ஆள போகிறார்.
ஒரு சொட்டு சாராயம் கூட இல்லாத தமிழகத்தை உருவாக்க பாடுபட்டு வருகிறேன். சாராயம் குடிப்பதனால் வருடத்திற்கு 2 லட்சம் பேர் இறக்கிறார்கள்.
44 சமுதாய தலைவர்கள், மதகுருமார்களுடன் சேர்ந்து கலைஞரை சந்தித்தேன். சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினேன்.
இதன் எதிரொலியாக விற்பனை ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டது. சாராயக் கடையை முதன் முதலில் கொண்டுவந்தது தி.மு.க. தலைவர் கருணாநிதி தான்.
இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் நேரு நகர் கண்ணகி தெருவில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி பாயேஸ் அலி (25) தனது மனைவி மற்றும் கை குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
மற்றொரு கட்டிட தொழிலாளி ஆதிமூலம் (44), அவரது மனைவி அமுதா மற்றும் மகன் நித்திஸ் என்கிற அப்பு ஆகியோருடன் அதே வீட்டின் மற்றொரு பகுதியில் வசித்து வருகின்றனர்.
பாயேஸ் அலியின் அக்கா கணவர் அஜிஜூஸ் அடிக்கடி அவரின் வீட்டிற்கு வந்து சென்றதில் அருகில் வசித்து வந்த அமுதாவுடன் கள்ளதொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த பாயேஸ் அலி இரண்டு நாட்களுக்கு முன்னர் அமுதா மற்றும் அவரது கணவரிடம் தட்டி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இன்று மீண்டும் இருவரின் குடும்பத்தினருக்கிடையே வாய்தாகராறு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஆதிமூலம், அமுதா மற்றும் மகன் நித்திஸ் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாயேஸ் அலியை சரமாரியாக குத்தியுள்ளனர்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த பாயேஸ் அலியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஆதிமூலம் மற்றும் அவரது மனைவி அமுதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரனை நடைபெறுகிறது.
கொலைக்கு உடந்தையாக இருந்த அவர்களின் மகன் நித்திசை போலீசார் தேடி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.19 லட்சம் மதிப்புள்ள 410 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்றபிறகு சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் ஏறி ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த விமானத்தின் கழிவறையில் ஒரு பார்சல் கேட்பாரற்று கிடந்தது. அதை பிரித்து பார்த்தபோது அதில் ஒரு தங்க சங்கிலி மற்றும் கை வளையம் இருந்தது.
துபாயில் இருந்து அதனை விமானத்தில் சென்னைக்கு கடத்தி வந்த யாரோ, விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து விமானத்தின் கழிவறையில் அந்த பார்சலை வைத்துவிட்டு சென்று இருக்கலாம் என தெரிகிறது.
ரூ.19 லட்சம் மதிப்புள்ள 410 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கடத்தி வந்தது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
















தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் கொரோனாவின் தாக்கம் கணிசமாக குறைந்திருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது.
காஞ்சீபுரம் மாவட்டத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 75-ஆக உயர்ந்துள்ளது.
காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் தனியார் மருத்துவ கல்லூரி உள்ளது. இங்குள்ள விடுதியில் தங்கி ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். விடுதியில் தங்கி படித்து வரும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 50 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் அதே மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவ கல்லூரிக்கு விடுப்பு அளிக்கப்பட்டு விடுதிக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை, தேர்தல் செலவின மேற்பார்வையாளர் ஆய்வு செய்ய இருப்பதால் வேட்பாளர்கள் நேரிலோ அல்லது அவரது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ தங்களது தினசரி தேர்தல் செலவின பதிவேடு மற்றும் பட்டியல், வங்கி கணக்கு விவரம் போன்றவற்றை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் செலவின மேற்பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் நாளை(வியாழக்கிழமை), வருகிற 30-ந்தேதி, அடுத்த மாதம் 4-ந்தேதிகளில் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் அனைத்து வேட்பாளர்களும், தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.
வேட்பாளர்கள் தேர்தல் செலவு பதிவேட்டை தாக்கல் செய்யாவிட்டால், தேர்தல் செலவு பதிவேட்டை தாக்கல் செய்யத் தவறிய காரணத்திற்காக தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






