ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 790 கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, கோபி, பவானி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள், மற்றும் 42 பேரூராட்சிகளில் 792 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது.
இதில் 2 பேரூராட்சிகளில் வேட்பாளர்கள் இறந்ததால் அந்த 2 வார்டுகளில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. மீதம் 790 வார்டுகளில் கவுன்சிலர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
இதில் ஈரோடு மாநகராட்சியில் ஒரு வார்டு, பேரூராட்சிகளில் 20 வார்டுகளில் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 790 கவுன்சிலர்களும் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 48 வார்டுகளை பிடித்து ஈரோடு மாநகராட்சியை கைப்பற்றி யுள்ளது. அதேப்போல் கோபி, சத்தியமங்கலம், பவானி, புஞ்சைபுளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
இதேப்போல் 42 பேரூராட்சிகளில் பெரும்பாலானவற்றை தி.மு.க. கைப்பற்றியுள்ளது. வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்பு விழா அந்தந்த அலுவலகங்களில் இன்று கோலாகலமாக நடந்தது.
ஈரோடு மாநகராட்சியின் 60 வார்டுகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று காலை மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். மாநகராட்சி மன்ற கூட்ட அரங்கம் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. இருக்கைகள் தயார் செய்யப்பட்டு மைக்குகள் வைக்கப்பட்டிருந்தன.
கவுன்சிலர்கள் உறவின ர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். முக்கிய அரசியல் கட்சி பிரதிநிதிகளும் ஏராளமானோர் வந்திருந்தனர். காலை 10 மணிக்கு மாநகராட்சி தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சிவக்குமார் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஒவ்வொரு உறுப்பி னர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மாமன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சியை வெளியே ஏற்கும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் மாநகராட்சி அலுவலகத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு அங்கு பொதுமக்கள் உட்காரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தன.
மேலும் நிகழ்ச்சியை பார்க்கும் வகையில் பெரிய டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டு அதன் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனால் மாநகராட்சி அலுவலகம் இன்று விழாக்கோலம் பூண்டு இருந்தது.
இதேபோல் கோபி, பவானி, சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளில் வெற்றி பெற்ற 102 கவுன்சிலர்கள் அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதேப்போல் 42 பேரூராட்சி அலுவலக ங்களிலும் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இதனால் அனைத்து அலுவலகங்களும் இன்று விழாக்கோலம் பூண்டு இருந்தது.
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதால் பெண்கள் சரிசமமாக வந்திருந்து பதவியேற்றுக் கொண்டனர்.
இதை தொடர்ந்து வரும் 4-ந் தேதி ஈரோடு மாநகராட்சி மேயர், துணை மேயர், நான்கு நகராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், 42 பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் கவுன் சிலர்களால் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அன்று காலை தலைவர்களுக்கான தேர்தலும், மதியம் துணை தலைவர்களுக்கான தேர்தலும் நடைபெறுகிறது.
ஈரோடு மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. இதுபோல் மற்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள் பதவியை கைப்பற்றவும் கடும் போட்டி நடந்து வருகிறது.