என் மலர்
கடலூர்
கடலூர்:
நிவர் புயல் நேற்று இரவு தீவிர புயலாக மாறி கடலூருக்கு கிழக்கு தென் கிழக்கே 28 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கே 340 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
‘நிவர்’ புயல் சென்னை மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த புயலால் கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருந்தே மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது.
நேற்று காலை முதல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
அதேபோல் கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் இந்த மழை நீடித்தது. மேலும் மாவட்டத்தில் பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.
அதேபோல் கடலூர் மீனவ கிராமங்களான தேவனாம்பட்டினம், தாழங்குடா உள்ளிட்ட பகுதிகளில் கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்படுகிறது.
முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடலூர் உள்பட 7 மாவட்டங்களில் பஸ் போக்கு வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும் ‘நிவர்’ புயலின் தாக்கம் எப்படி இருக்குமோ என்ற ஒருவித அச்சத்தில் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
நிவர் புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்டத்தில், கடலூர், தேவனாம்பட்டினம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பேரிடர் குழுக்கள், வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மழை வெள்ளத்தின்போது, தண்ணீர் ஊருக்குள் புகுவதை தடுக்கும் நடவடிக்கையாக, தென்பெண்ணையாறு, கெடிலம் ஆறு கடலில் இணையும் பகுதியில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அடுத்தடுத்து வலுவடைந்து தீவிர புயலாக மாறி நாளை (புதன்கிழமை) மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. இந்த புயலுக்கு நிவர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதையொட்டி கடலூர் துறைமுகத்தில் நேற்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நிவர் புயல் தற்போது தீவிரம் அடைந்து சென்னையில் இருந்து 450 கி.மீ. தொலைவில் உள்ளது. மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை முதலே பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இதைத்தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் இன்று காலை 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இத்துறைமுகத்தை நெருங்குகிற அல்லது இதற்கு அருகே கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயலால் ஏற்படும் கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படும் என்பதற்கு அடையாளமாக இந்த கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அடுத்தடுத்து வலுவடைந்து தீவிரபுயலாக மாறி நாளை (புதன்கிழமை) மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. இந்த புயலுக்கு நிவர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று முதல் 3 நாட்கள் வரை கடலூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை 7 மணியளவில் கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் லேசாக மழை தூற தொடங்கியது.
அதன்பின்னர் சிறிது நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்து கனமழை பெய்ய தொடங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.
இதனால் காலை நேரத்தில் சாலைகள் இருள் சூழ்ந்து காணப்பட்டது. சாலைகளில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மெதுவாக ஊர்ந்து சென்றன.
இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும்பாலானோர் மழையில் நனைந்த படியும், குடைபிடித்த படியும் சாலையில் செல்வதை காண முடிந்தது.






